செவ்வாய், ஜனவரி 25, 2011

ஜெய் ஹிந்த்




ஜெய் ஹிந்த்

குடியரசு தினம் அன்று பள்ளிக்கு சென்று வந்த ஹரிஷ் , ஜனனி இருவரும் வீட்டுக்கு வந்தவுடன் தன் தந்தை தாயிடம் பள்ளியில் கொடி ஏற்றியது முதல் மிட்டாய் கொடுத்தது வரை அனைத்தையும் சொல்லி மகிழ்ந்தார்கள்


அவர்கள் இருவருக்கும் ஒரு ஐடியா தோன்றியது தாங்களும் அது போல் கொடி ஏற்றுகிறோம் என்று சொல்லி தங்கள் வீட்டு தோட்டத்தில் கம்பம் நட்டு தன் தந்தை தாயிடம் அடம் பிடித்து தேசிய கொடி வாங்கி வர செய்து தனது தோழர் தோழியர்களுடன் சேர்ந்து கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தார்கள் .


அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள் . மாலையில் கொடியை இறக்கி வீட்டில் உள்ள தங்களது புக் செல்பில் மரியாதையுடன் வைத்து கொண்டார்கள் .

தினமும் காலையில் நாம் இது போல் கொடி ஏற்றலாம் "என்றனர் தன் தோழர் தோழிகளிடம்.

மறு நாள் அதே போல் ஹரிஷ் ஜனனி இருவரும் தங்கள் நண்பர்களுடன் தேசிய கொடி ஏற்ற தயாராக, அவர்களின் தந்தையும் தாயும் அதை பார்த்து விட்டு

"டெய்லி எல்லாம் ஏற்ற கூடாது அதற்கென்று சம்பிரதாயங்கள் இருக்கு அதை ஒழுங்காக கடைபிடிக்கணும் நீங்க சின்ன பசங்க உங்களுக்கு தெரியாது சுதந்திர தினம், குடியரசு தினம் அன்னிக்கு மட்டும் நாம் கொடி ஏற்றினால் போதும் தினமும் ஏற்ற வேண்டாம் "என்றனர்

அதற்க்கு அவர்கள் முடியாது என்று மறுத்து " அப்பா அம்மா நீங்களெல்லாம் தீபாவளி பொங்கல் பண்டிகை அன்னிக்கு மட்டுமா சாமி கும்புடுறீங்க எல்லா நாளும் விளக்கேற்றி சாமி கும்பிடறீங்க இல்லியா ",
"அதே போல் தான் நாங்கள் நம் பாரத மாதாவுக்காக நம் நாட்டிற்க்காக தினமும் தேசிய கொடியேற்றி வணங்க போகிறோம்"
என்றவர்களை ஆச்சரியத்துடன் பார்த்த ஹரிஷ் ஜனனியின் தாய் தந்தை இருவரும் பெருமிதத்துடன் எழுந்து நின்று தங்கள் செல்வங்களை அன்பாய் அணைத்து அவர்கள் ஏற்றிய தேசிய கொடியை பார்த்து ஜெய் ஹிந்த் என்று உரக்க சொல்லி வணங்கினர்

அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

சனி, ஜனவரி 22, 2011

சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்


சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்

நான் ஏற்கனவே சில நொடி சிநேகம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அந்த சிறுகதையின் பாலோ அப் தான் இந்த இடுகை எனவே இந்த இடுகையை படிக்கும் முன் அந்த சிறுகதையை படித்துவிடுங்கள்


http://kudanthaiyur.blogspot.com/2010/09/blog-post_18.html


அதாவது அந்த சிறுகதையில் வரும் சரவ் நான் தான்


செப்டம்பர் மாதம் ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ள நான் தஞ்சாவூர் செல்லும் போது நடந்தது இது. நான் அந்த நண்பருக்காக இடம் போட்டு விட்டு உட்கார்ந்து அவருக்காக காத்திருந்த போது பேருந்து கிளம்பி விட்டது நம்மளை பத்தி அவர் என்ன நினைச்சுக்க போறாரோ என்ற கவலையுடன் தஞ்சாவூர் வந்து இறங்கிய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது நான் இறங்கிய சில நொடிகளில் அடுத்து வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர்களில் அவரும் ஒருவர் என்னை பார்த்தவர் சார் உங்களுக்காக நான் இந்த பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன் என்றார் அவர் .


நானும் அவருக்காக பேருந்தில் காத்திருந்தது பற்றி சொன்னேன் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டோம்


பின் அவரை ஹோட்டல் வரை கொண்டு விட்டு பின் நான் திருப்தியுடன் கிளம்பினேன்


இந்த நிகழ்வை தான் ஒரு சிறுகதையாக்கினேன் சில நொடி சிநேகம் என்ற பெயரில். இந்த இனிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

படம் நான் எடுத்தது
இடம் நாகப்பட்டினம் கடற்கரை
ஆர்.வி.சரவணன்

திங்கள், ஜனவரி 17, 2011

மகிழ்ச்சி பொங்கட்டும்


மகிழ்ச்சி பொங்கட்டும்


தித்திக்கும் பொங்கல் திருநாளில்
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்

உழவர்களின் உள்ளங்களில் இன்பம் பெருகட்டும்
அவர் தம் இல்லங்களில் செழுமை என்றென்றும் நிறைந்திருக்கட்டும்

அனைத்து வலை பதிவு நண்பர்களுக்கும்
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
படம் நன்றி கூகிள்
ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜனவரி 09, 2011

சென்னை புத்தக காட்சி


சென்னை புத்தக காட்சி

நான் ஒரு புத்தக பிரியன் நான் மட்டுமல்ல என் வீட்டில் அனைவருமே
புத்தக பிரியர்கள் அம்மா, மனைவி,சித்தி ,மாமா, அத்தை , தம்பி, தங்கை என்று வீட்டில் எல்லோரும் புத்தகம் படிப்பவர்கள்

குமுதம் ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களாகட்டும் மாத இதழ்களாகட்டும்
வீட்டிக்கு பேப்பர்ஆள் கொண்டு வந்து போடும் போது அதை படிக்க வீட்டில்
சின்ன ரகளையேநடக்கும்

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் பதினான்கு வயதில் ஏற்பட்டது
அன்றிலிருந்துஇன்று வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது
நான் படிக்கும் வயதில் என்னை படிப்பு கெட்டுடும் எனவே படிக்க கூடாது
என்றுதடை விதித்தார்கள் நான் மீறி வீட்டுக்கு தெரியாமல் படித்து திட்டு வாங்குவேன்

வேலைக்கு சேர்ந்தவுடன் என் சம்பாத்தியத்தில் புத்தகங்கள் வாங்க
ஆரம்பித்தேன் நுலகத்தில் சேர்ந்து உறுப்பினரானேன்
வாரம் ஒரு முறையேனும்நுலகம் சென்று படிப்பேன்

ஏதேனும் சொந்தகாரர் வீட்டுக்கு
சென்றால் கூடஉடனே அங்கிருக்கும் புத்தகங்களை புரட்ட
ஆரம்பித்து விடுவேன் பண்டிகை நாட்களில் வார மாத இதழ்கள்
பெரும்பாலும் வாங்கி விடுவேன்

படிக்க ஆரம்பித்து விட்டால் உலகையே மறந்து விடுவேன்
வார இதழ்களில்பிடித்த பக்கங்களை எடுத்து சேர்த்து புத்தகமாக்கி
சேகரிக்கும் பழக்கமும் இருந்துவருகிறது

பொன்னியின் செல்வன், தியாகபூமி, சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, தெய்வீகம், சமையல் , உடல்நலம், சுற்றுலா, என்று முடிந்தவரை சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்

அப்படிப்பட்ட எனக்கு அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில
எனும் போது விடுவேனா

புத்தக கண்காட்சி பற்றி தான் சொல்கிறேன் வருடாவருடம் கண்காட்சி
சென்றுஎன் பொருளாதாரத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி விடுவேன்
தனியாகஒருமுறையும் மனைவி, மகன் ,மகள் என்று குடும்பத்துடன் அழைத்து கொண்டுஒரு முறையும் செல்வேன். எப்படியும் நான் குறைந்தது நான்கு மணி நேராமாவது அங்கே செலவிடுவேன்

இதோ இந்த வருடமும் புத்தக திருவிழா தொடங்கிவிட்டது
நேற்று அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன் டயமாகி விட்டதால் இரண்டு மணி நேரம் தான் இருக்க முடிந்தது இன்னும் ஒரு வாரம் இருக்கே மீண்டும் போகலாம் என்றிருக்கிறேன் நேற்று சுஜாதா அவர்களின் நாவல்கள் வாங்கினேன்

இது வரை வாங்கிய நூல்களில் சில

ராஜபேரிகை,கன்னிமாடம், யவன ராணி ,அலை ஓசை, ரத்தம் ஒரே நிறம்,மன்னன் மகள் , வந்தார்கள் வென்றார்கள் மற்றும் சுஜாதா பட்டுகோட்டை பிரபாகர், பாலகுமாரன் ,எழுதிய நாவல்கள்

என் நண்பர்கள் சிலர் ஏண்டா இப்படி புத்தகம் புத்தகம் என்று அலைகின்றாய் என்பார்கள் அவர்களுக்கு நான் சொன்னது

எனது பள்ளி கல்லுரி படிப்பில் நான் கற்றதை விட நான் படித்த புத்தகங்கள் தான் என் வாழ்க்கையை நான் சரியான முறையில் அமைத்து கொள்ளவும் நான் வாழ்க்கையில் முன்னுக்கு வரவும் உதவியது

நான் படித்த புத்தகங்கள் தான் ஒரு ஆசானாய் இருந்து என்னையும் பதிவுலகில் சில படைப்புகளை எழுத வைத்திருக்கிறது என்று சொன்னேன்

என்ன நான் சொன்னது சரிதானே

சென்னை புத்தக காட்சி எனும் இத் திருவிழா நமக்கான ஒரு விழா

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜனவரி 06, 2011

கண்ணில் ஏதோ மின்னல் ....

கண்ணில் ஏதோ மின்னல் ....

பள்ளி பருவத்தில் கும்பகோணத்தில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள தியேட்டரில் நண்பர்கள் நாங்கள் மாலை வேளையில் சேர்வோம் .

அங்கே இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர் சுவர் மேல் அமர்ந்து பேசுவோம் ஏன் அங்கே அமர்கிறோம் என்றால் படம் ஓடும்போது படத்தின் ஒலி வெளியில் நன்றாக கேட்கும் வசனங்களை கேட்டு மகிழ்வோம் கூடவே பாடல் வரும் போது அதை கேட்டு எங்களுக்கு உற்சாகம் தொற்றிகொள்ளும்

வசன காட்சிகளை விட பாடல் காட்சி வரும் நேரத்தில் தவறாமல் வந்து விடுவோம் அங்கு வந்து அமர்ந்து பாடலை கேட்டு விட்டு செல்வோம் அப்படி நான் கேட்ட பாடல்களில் ஒன்று இதோ

இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த அடுத்த பாடல் இது

மனம் கவர்ந்த பாடல்கள்



பூ விலங்கு படத்தில் இடம் பெற்ற

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு........


இந்த பாடல் படத்தில் இடம் பெறும் காட்சி என்னவென்றால் முரளியும்குயிலியும் (இருவரும் அறிமுகம்) வில்லன் ராதாரவியின் வீட்டில் பரணில் பதுங்கி இருப்பார்கள் ராதாரவி மனைவியுடன் உல்லாசமாய் இருப்பதை அவர்கள் காண நேர்ந்து இளமை தவிப்புடன் அவர்கள் இருக்கையில் வரும் பாடல் இது

குயிலி தன் கண்களை துணியால் கட்டி கொண்டிருக்க முரளியின் கைகள் கயிறால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் தூங்குவதாக பாடல் முடியும் அந்த காட்சி ஒரு கவிதை போல் இருக்கும்

இளையராஜா இந்த காதலர்களின் இளமை துள்ளலை தவிப்பை இந்த பாடலில் அள்ளி வழங்கியிருப்பார் அப்படியே நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருப்பார்


இந்த பாடலில் வரும் சில வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை வைரமுத்துவின் வைர வரிகளில் வரும் நெற்றி வேர்வை நனைச்சு போட்டு கொஞ்சம் அழியும் குங்குமத்து சிவப்பு வெட்கம் போல வழியும்......... எப்பொழுது கேட்டாலும் அந்த இளமை துடிப்பை உணர வைக்கும் இந்த பாடல்


பூ விலங்கு படத்தில் நான்கு பாடல்கள் அதில் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் ஆத்தாடி பாவாடை காத்தாட .............

படம் பூ விலங்கு

நாயகன் நாயகி முரளி குயிலி

பாடல் வைரமுத்து

பாடல் பாடியவர்கள் K.J .ஜேசுதாஸ், S.ஜானகி


தயாரிப்பு கவிதாலயா


இயக்கம் அமீர்ஜான் (ரஜினியின் சிவா இயக்கம் இவர் தான் )


படம் வெளியான ஆண்டு 1984

பாடலின் வீடியோ லிங்க் முகவரி

http://www.google.co.in/url?sa=t&source=video&cd=6&ved=0CGEQtwIwBQ&url=http%3A%2F%2Fwww.in.com%2Fvideos%2Fwatchvideo-kannil-etho-5696940.html&ei=tSsGTfqcI4KzrAeNyOyQDw&usg=AFQjCNGHof7_BVyTL3-Q0sOM1DaReF9fLA&sig2=FvcVmANsYVYSy2V90ovXWw


ஆர்.வி.சரவணன்

புதன், ஜனவரி 05, 2011

இதெப்படி இருக்கு 2


இதெப்படி இருக்கு 2
குருவிக்காக ஒரு தொலை நோக்குப்பார்வை


தூக்கம் வந்தாலும் சுகமான கனவுகள் வருவதில்லை ஏன்


தூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க


படித்து கொண்டே தூங்குவது எப்படின்னு ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிட்டிருக்கேன்

நான் முதல்லே வர்றது இருக்கட்டும்
நீங்க முதல்லே நூறு கிலோ சாக்லேட் வாங்கிட்டு வாங்க

ஆர்.வி.சரவணன்





திங்கள், ஜனவரி 03, 2011

குரு ஸ்தலம் ஆலங்குடி

குரு ஸ்தலம் ஆலங்குடி
புத்தாண்டு பிறந்துள்ளதால் கோவிலுக்கு செல்லலாம் என்று நேற்று குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன் நான் எடுத்த சில படங்களும் கோவில் பற்றிய சில முக்கிய தகவல்களும் இதோ


பேருந்தை விட்டு இறங்கியதும் வரவேற்கும் நுழைவாயில்


கோவிலின் இருபுறமும் கடைகள்

கோவிலின் நுழைவாயில்


கொடிமரம்


கொடிமரத்துடன் கூடிய கோபுரம்

குரு பரிகார ஸ்தலம் இது ஆலங்குடி என்ற பெயரில் வழங்க பெறுகிறது

இந்த கோயிலின் தெய்வங்கள் அருள் மிகு கலங்காமற் காத்த விநாயகர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி

பாற்கடலை கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது

காவிரி தென் கரையில் 98 வது திருத்தலம் இது

இத்தலம்வந்து வழிபட்டவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ,அகத்தியர், விசுவாமித்ரர்,ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர்

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
ஆர்.வி.சரவணன்







வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக


2011 புத்தாண்டே வருக





வரும் புத்தாண்டு நம்மை வளம் பெற செய்யட்டும்

நம்மில்வேற்றுமையை வேரறுக்கட்டும்

நம்மில் ஒற்றுமையை நிலை பெற செய்யட்டும்

நம் உள்ளங்களில் என்றும் இனிமையை வழங்கட்டும்

நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி எனும் இலக்கை எட்டட்டும்

நம் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்

இப் புத்தாண்டு அனைவருக்கும் இனிதாய் மலர எனது வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

புதன், டிசம்பர் 29, 2010

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் பத்தாண்டுகளில் வெளிவந்த பாடல்களில் பிடித்தபத்து பாடல்கள் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி

பத்துஆண்டுகளில் வெளி வந்த பாடல்களில் பத்து என்பது கொஞ்சம் அல்ல அல்ல நிறையவே கஷ்டமான விசயமாக இருந்தது

இருந்தாலும் பத்து பாடல்கள்செலக்ட் செய்து விட்டேன்

நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் பத்து பாடல்கள்

இதோ உங்கள் முன்





உன் குத்தமா என் குத்தமா ....

படம் அழகி

பாடல் பழனி பாரதி

இசையமைத்து பாடியது இளையராஜா

வருடம் 2001




என்ன நினைச்சே நீ என்ன நினைச்சே ....

இசை தேவா

பாடியது உன்னி கிருஷ்ணன் அனுராதா ஸ்ரீராம்

படம் சொக்க தங்கம்

வருடம் 2003




டிங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்....

படம் ஜீ

பாடியது மது பாலகிருஷ்ணன் மதுஸ்ரீ

பாடல் பா .விஜய்

இசை வித்யாசாகர்

வருடம் 2005


பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ....

படம் ஆனந்தம்

பாடியது உன்னிகிருஷ்ணன் ஹரிணி

இசை எஸ் . . ராஜ்குமார்

வருடம் 2001


ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் ....

படம் ஐயா

பாடியது கே கே சாதனா சர்கம்

இசை பரத்வாஜ்

வருடம் 2005

உன்னை கண்டேனே முதல் முறை....

படம் பாரிஜாதம்

பாடியது ஹரிசரண் ஸ்ருதி

இசை தரன்

வருடம் 2005

நெஞ்சே நெஞ்சே ....

படம் அயன்

பாடியது ஹரிஷ் ராகவேந்திரா மகதி

பாடல் வைரமுத்து

இசை ஹாரிஸ் ஜெயராஜ்

வருடம் 2009



கண்கள் இரண்டால் ....

படம் சுப்ரமணியபுரம்

பாடியது பெல்லி ராஜ் தீபா மரியம்

இசை ஜேம்ஸ் வசந்தன்

வருடம் 2008






துளி துளி துளி மழையாய் வந்தாளே....

படம் பையா

பாடியது ஹரிசரண் தன்விஷா

பாடல் நா.முத்துக்குமார்

இசை யுவன் சங்கர் ராஜா

வருடம் 2010



அரிமா அரிமா ....

படம் எந்திரன்

பாடியது ஹரிஹரன் சாதனா சர்கம்

பாடல் வைரமுத்து

இசை ஏ .ஆர்.ரகுமான்

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி ஜீவதர்ஷன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், டிசம்பர் 27, 2010

சங்கமம் 2010


சங்கமம் 2010

ஈரோட்டில் நடைபெற்ற சங்கமம் விழாவில் கலந்து கொள்ள நான் மிகுந்த ஆர்வமுடன் சென்றிருந்தேன்.

ஈரோடு வழியே மற்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் ஈரோட்டில் நான் சென்று தங்குவது இது தான் முதல் முறை

தங்குமிடம் , போக்குவரது உணவு உபசரிப்பு என்று அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ஈரோடு தமிழ் வலை பதிவாளர்கள் குழுமத்தினர்


உதாரணம் ஈரோடு சென்று நான் இறங்கும் போது புது ஊர் என்பதால் எனக்கு தயக்கம் இருந்தது ஆனால் நண்பர் பாலாசி ,ஜாபர் ஆகியோருக்கு போன் செய்தவுடன் ஹோட்டல் பெயர் சொல்லி எனக்கான ரூம் கொடுத்து என் தயக்கத்தை முற்றிலுமாக தகர்த்து ஊருக்கு நான் புதுசு என்ற எண்ணத்தையே ஒரு மணி நேரத்திற்குள் மாற்றி விட்டனர் .

ஈரோடு கதிர் ஹோட்டல் அறைக்கு வந்திருந்து நட்புடன் விசாரித்தார்



ஈரோடு கதிர் ,பாலாசி, சங்கவி, பிரபாகர், ஜாக்கி சேகர், கார்த்திகை பாண்டியன், பரிசல்காரன், வலைச்சரம் சீனா ,வால்பையன், இன்னும் ஏனையோரை நேரில் சந்தித்தது ஒரு புதுமையான இனிமையான அனுபவமாகவே இருந்தது

நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த தலைப்புகள் அனைத்தும் பயனுள்ளவை என்றால் அதற்க்கு உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் சுவை பட உரையாற்றி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் துணை புரிந்தனர்.

பதிவர்களின் கலந்துரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது

எழுத்துலகம் மேல் தீராத தாகம் கொண்ட என்னை இந்த விழா ஈரோட்டுக்கு
எனை ஈர்த்தது பல புதிய நட்புகளை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது
எழுத்துலகின் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வத்தை இன்னும் பல படிகளுக்கு உயர்த்தியிருக்கிறது

என்னை பதிவுலகில் மென் மேலும் வலுப்படுத்த இது உதவும்

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, டிசம்பர் 24, 2010

நான் என்ன சொல்றேன்னா 2




நான் என்ன சொல்றேன்னா 2


பார்த்த படம்

உயிரே உனக்காக
டிவி இல் மோகன் நதியா நடித்த உயிரே உனக்காக பார்த்தேன் ஏற்கனவே பார்த்திருந்தாலும் நதியா மற்றும் பாடல்களுக்காக வே இந்த படம் பார்த்தேன்
காதல் கலந்த இயல்பான ஒரு குடும்ப கதை (எப்பொழுது போட்டாலும் சில
காட்சிகளாவது பார்ப்பதுண்டு)

படித்த புத்தகம்

கலைமகள் தீபாவளி மலர் படித்தேன் சினிமா அரசியல் இசை எழுத்துலகம் என்று அனைத்து துறையிலும் சாதனை படைத்த பெண்களின் அணி வகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள தீபாவளி மலர் (படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு)

பதிவுலக சந்திப்பு

பதிவுலக நண்பர் திரு பாலாசி அவர்கள் சங்கமம் 2010 க்கு கலந்து கொள்ள வருமாறு அழைப்பு அனுப்பியிருக்கின்றார் .அவருக்கும் ஈரோடு வலை பதிவாளர்கள் குழுமத்திற்கும் என் நன்றி


சங்கமம் 2010 விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

இரவு பயணம்

இரவு நேர பயணத்தில் பேருந்தில் ஏறி வசதியான இருக்கையில் அமர்ந்து கொண்டு நாம் அப்பாடா என்று மூச்சு விட முடியாது காரணம் பக்கத்துக்கு இருக்கைக்கு வரும் பயணி யை நினைத்து கொஞ்சம் டென்ஷன் உண்டாகும்

ஒரு முறை இப்படி தான் ஜன்னலோர சீட்டில் நிம்மதியாய் அமர்ந்து விட்டேன் பக்கத்தில் அமர்ந்தவர் தூங்கி தூங்கி என் மேல் சாய்ந்து கொடுத்தார் பாருங்கள் டார்ச்சர்.
நான் எழுப்பி விட்டால் சாரி என்பார் ஆனால் மீண்டும் ஐந்து நிமிடத்தில் சாய தொடங்கி விடுவார் அந்த இரவில் நொந்து இடியாப்பம் ஆகி விட்டேன் (நம்மளை டார்ச்சர் பண்றதுக்குன்னே கிளம்பி வர்றாங்களோ )

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்


படம் : எங்கள் மாமா வீட்டில் இருக்கும் நெல்லிக்காய் மரம்



ஆர்.வி.சரவணன்



புதன், டிசம்பர் 22, 2010

நான் என்ன சொல்றேன்னா .....

நான் என்ன சொல்றேன்னா .....




பார்த்த படம்

சென்ற வாரம் தான் மைனா படம் பார்த்தேன் சென்ற வாரம் தான் பார்க்க முடிந்தது என் மனதை நெகிழ வைத்த படம் உங்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது பிரபு சாலமன் சார் வாழ்த்துக்கள்

(படம் வந்து ஒரு மாசம் ஆகிடுச்சு இப்ப சொல்லறியே என்று நீங்கள் முறைப்பது தெரியுது

படித்த செய்தி

சமையல் எரி வாயு ரூ 100 உயருகிறது இது செய்தி

(அதற்கும் முன்னே நான் உயர்கிறேன் பார் என்று
உயர்ந்து விட்டதே வெங்காயம் விலை )


படித்த புத்தகம்

எனக்கு பிடித்த சுஜாதா அவர்கள் எழுதிய திரைக்கதை எழுதுவது
எப்படி என்ற புத்தகம் வாங்கி (காசு கொடுத்து தாங்க ) படித்தேன்
புதிதாக சினிமா இயக்க போகின்றவர்களுக்கு வழி காட்டும் நல்லதொரு நூல் இது

(அது சரி நீ எதுக்கு இப்ப படிக்கிறே அப்படிங்கறீங்களா நான் எழுதிய சில கதைகளுக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கலாம்னு தான்)


சுவையான சம்பவம்

நான் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து நீடாமங்கலம் செல்ல அம்மாபேட்டையில் பஸ் பிடித்தேன் கண்டக்டரிடம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பஸ் நிற்குமா என்று கேட்டேன் கண்டக்டர் கேட்டு இறங்கிடுங்க என்றார் நான் நீங்க தானே கண்டக்டர் யாரை கேட்டு இறங்க சொல்றீங்க டிரைவரை கேட்டு இறங்க சொல்றீங்களா என்றேன் அவர் மீண்டும் கேட்டு இறங்கிக்காங்க சார் என்றார் நான் புரியாமல் முழித்து பின் அவர் சொன்னது கேட்டு சிரித்து விட்டேன்

அவர் சொன்னது என்னவென்றால் ரயில்வே கேட் அருகே வண்டி
நிற்கும் அங்கே இறங்கிடுங்க என்பது தான்

(பஸ்சில் எல்லோரும் சிரித்து விட்டனர் )

படம் நான் எடுத்தது தான்
இடம் நாகப்பட்டினம் கடற்கரை

அவ்வப்போது உங்கள் விருப்பத்தை பொறுத்து
இது போல் செய்திகளை பகிர்ந்துக்கிறேன்

ஆர்.வி.சரவணன்



சனி, டிசம்பர் 18, 2010

பெற்றோர்


பெற்றோர்

இன்னிக்கு சாயந்தரம் அப்பா அம்மா வராங்களாம் என்று சொல்லிய படி
வந்த கணவன் ராஜா வை பார்த்த கீதா

"உங்க அப்பா அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா " என்று சீறினாள்
அவள் சீற்றத்தை பார்த்த ராஜா

"என்ன சொல்றே நீ" என்றான்

"பின்னே என்ன நீங்க மட்டும் தான் பிள்ளையா உங்க அண்ணன் ரெண்டு பேரு இருக்காங்க தம்பி ஒருத்தர் இருக்கார் ஆனா எப்ப பாரு இங்கேயே தான் வர்றாங்க"

"ஏன் இப்படி பேசறே"

"வேற எப்படி பேசறதாம் அவங்களுக்கு வடிச்சு கொட்டறது தான் என்னோட ஒரே வேலையா"

"உன் கிட்டே மனுஷன் பேச முடியுமா"

"உங்க குடும்பத்தை பற்றி பேச ஆரம்பிச்சால்

உடனே உங்க கிட்டே இருந்து வர்ற டயலாக் இதானே "

அவளது பேச்சுக்கு ராஜா பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை ஸ்டார்ட்
செய்து கிளம்பினான் அலுவலகத்திற்கு

மாலை வீட்டு வாசலில் வந்து இறங்கியவர்களை
பார்த்ததும் கீதாவுக்கு திக்கென்றது

"என்னம்மா நல்லாருக்கியா "

என்ற படி நுழைந்தவர்கள் அவளது அப்பா அம்மா

கூடவே உள் நுழைந்த கணவனை ஏறிட்டு
பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் உடனே நிமிர்ந்து

"வர்றது எங்க அப்பா அம்மா தான் னு சொல்லியிருக்கலாம் லே நீங்க" என்றாள்

"உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா னு பிரிச்சு பேசறது என்னோட வழக்கமில்லையே எனக்கு நம்ம ரெண்டு பேர் அப்பா அம்மாவும் ஒன்று தான் "

என்றான் ராஜா மிக அமைதியாய்

ஆர்.வி.சரவணன்