இளமை எழுதும் கவிதை நீ-14
உனை பார்க்கும் போது எனை பார்க்க மறுக்கிறாய்
தொடரும்
ஆர்.வி.சரவணன்
ஓவியம் : நன்றி திரு.இளையராஜா
உனை பார்க்கும் போது எனை பார்க்க மறுக்கிறாய்
பார்க்காத போதோ பார்த்த வண்ணமே இருக்கிறாய்
மையம் கொண்ட புயல் ஒன்று எந்த திசை நோக்கி திரும்பும் என்று பயத்துடன் எதிர்பார்த்திருக்கையில் அது வலுவிழந்து போனால் எப்படி இருக்கும் அப்படி தான் இருந்தது அந்த வகுப்பறையில் இருந்தவர்களுக்கு. சிவா எதுவும் நடவாதது போல் டெஸ்க்கிலிருந்து
தன் புத்தகங்களை எடுத்து கொண்டு கடைசி பெஞ்சுக்கு செல்ல கிளம்பினான். தன் கோபத்தை வெளி காட்டாது மறைக்கவும் அதை கட்டுபடுத்தவும் மிகவும் பிரயத்தனப்பட்டான். அந்த பதட்டத்திலேயே அவன் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி தரையில் விழுந்து திசைக்கொன்றாய் சிதறின. அதை பார்த்த பயோ டேட்டா பாலு உட்பட சில மாணவர்கள் அவசரமாய் எழுந்து வந்தனர்.
தொடரும்
ஆர்.வி.சரவணன்
ஓவியம் : நன்றி திரு.இளையராஜா
The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.