புதன், ஜூலை 28, 2010

ஜோக் கடிக்கிறாங்க 2


ஜோக் கடிக்கிறாங்க 2



நான் முதல் முதலில் கவிதை (அப்படின்னு நானா தான் சொல்லிக்கிறேன் ) கிறுக்க ஆரம்பித்தது எப்போது தெரியுமா +2 படிக்கும் போது (நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ) என் நண்பன் கவிதை எழுதுவதை பார்த்து நானும் கிறுக்கறேன் பார் என்று கிறுக்கியது இதோ



பாடினேன் ஒரு பாட்டு



மாணவர் மத்தியில் கிடைத்தது பல ஓட்டு



இதற்கு விழுந்தது பல கை தட்டு



ஆசிரியர் வந்தார் ஹாலில் நடை போட்டு



இது என் கண்ணில் பட்டு



வாய்க்கு போட்டேன் ஒரு பூட்டு



என் மீது பொறாமை கொண்ட மாணவனால்



எனக்கு வந்தது வேட்டு




இதை படிச்சவுடனே எதையாவது எடுத்து உடைக்கணும் னு தோணுதா




அப்ப இதை உடைங்க சீ இதை படிங்க



யானைக்குள்ளே எறும்பு இருக்க முடியும் ஆனா எறும்பின் உள்ளே யானை இருக்க முடியுமா



முடியாதுனு சொல்வீங்களே



அதான் கிடையாது



எறும்பின் மனசுக்குள்ளே யானை இருக்கும் ல



இப்பவும் உடைக்கணும்னு தோணுதா



என்னோட இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்



கரும்பு சாருக்குள் விழுந்த எறும்பு உற்சாகமாய் நீச்சலடிக்குதா இல்லே வெளியில் வர தத்தளிக்குதா



இப்படி யோசிக்கும் போது கூடவே



அப்படியே பாவப்பட்டு எறும்பை எடுத்து வெளியில் விட்டாலும் அது நம் கைக்கு முத்தம் கொடுக்குமா இல்ல கடிக்குமா



னு டவுட் வருதே



இப்ப உடைக்கிறது பத்தி யோசிக்காமே பதிலை பத்தி யோசிப்பீங்கலே



ஹி....ஹி....



ஆர்.வி.சரவணன்

திங்கள், ஜூலை 26, 2010

மழையில் நனைந்த படி


மழையில் நனைந்த படி


சாலையில் நான் நடக்கையில்

மழை ஆரம்பிக்கையில்


குடையுடன் வந்த என்னவள்


எனை அழைத்து கொண்டாள்


இப்போது


ஒரே குடையின் கீழ் இருவரும்


இணைந்த படி



மழையில் நனைந்த படி


என் மனம்


கவிதைக்கு முயன்ற படி


அதற்குள்


வீடு வந்து விட்டது


முதல் வேலையாக

என் குடையை எடுத்து


பரணில் வைத்து விட்டு


காத்திருக்கிறேன்


நான்


அடுத்த மழைக்கு

ஆர்.வி.சரவணன்





வெள்ளி, ஜூலை 23, 2010

என் சமையலறையில் 2



என் சமையலறையில் 2

நேற்று வீட்டில் என் மனைவி தோசைக்கு வெங்காய சட்னி ரெடி செய்திருந்தார் சாப்பிட சுவையாக இருந்தது நல்லாருக்குதே எப்படி இது செய்வது என்று கேட்டேன் சாதரணமா எல்லாரும் பண்றது தான் கொஞ்சம் வித்தியாசமா செய்திருக்கேன் என்றார்.

சரி இது பற்றி எனக்கு சொல்லு ஒரு இடுகையிடுகிறேன் என்றேன் அவர் சொல்லியதை தான் இங்கு தந்திருக்கிறேன்

வெங்காய சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் 4
காய்ந்த மிளகாய் 6
தக்காளி பெரியது 1
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு பற்கள் 6
தேங்காய் துருவல் கால் கப்
பெருங்காயம் சிறிதளவு



வெங்காயம், தக்காளி ,மிளகாய் ,பூண்டு, இஞ்சி ,பெருங்காயம் போன்றவற்றை வாணலியில் போட்டு சிறிது எண்ணை விட்டு இலேசாக வதக்கி (பச்சை வாசம் போக இலேசாக வதக்கி ) எடுத்து கொண்டு தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை,தேவையான உப்பு சேர்த்து அரைத்து கடுகு தாளித்து கருவபிலை போட்டு விட்டால் வெங்காய சட்னி ரெடி

செய்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருந்தால் சொல்லுங்கள் நன்றாக இல்லையென்றாலும் சொல்லுங்கள் .
ஆர்.வி .சரவணன்

புதன், ஜூலை 21, 2010

கல்லுரி காலங்களில்



கல்லுரி காலங்களில்


எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நான் நிறைய எழுதுவேன் படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )


அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள் அவர்கள் தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள் அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்தார்கள் நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன் 13 காட்சிகளில் நாடகம் சாதரணமாக இருந்தது . நான் "என்னப்பா இப்படி எழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்" என்றனர். நான் சரி வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "போஸ்டர் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.


சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற தலைப்பிலேயே நாடகத்தை உருவாக்கினேன் எப்ப தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு படிக்கிறேன் என்று சொல்லி விட்டு 40 காட்சிகளில் நாடகத்தை எழுதி கொடுத்தேன். ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று எனவே இயக்கம் என்று உன் பெயரை போடுகிறோம் என்றனர் சரி என்றேன் போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் போட்டு கொண்டு தான் வருவேன் என்று ஒரே அடம் பிடித்தான். சரி என்று விட்டு விட்டேன்


ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி ஏகப்பட்ட கை தட்டல் கிடைத்தது (எனக்கல்ல நாடகத்திற்கு) ஒரு ஜனரஞ்சகமான நாடகம் இதற்கே இவ்வளவு கை தட்டலா எனும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் .


நாடகம் முடிவில் எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லவில்லை "சாரி லிஸ்டில் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் "அதனாலென்ன பரவாயில்லை "என்றேன் (வேற வழி ) மேடையை விட்டு இறங்கும் போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எனை பார்த்து "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் பொதுவாக நடக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லாருக்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது " என்றார். கேட்கவா வேண்டும் நான் வானத்தில் பறந்தேன் அதே சந்தோசத்தோடு வீடு வந்தேன்.


வீட்டில் ஏக ரகளை படிப்பை விட்டுட்டு எப்படி நாடகம் போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ நீ உருப்படாமல் தான் போக போறே என்று சொல்லி விட மனசு ரொம்பவே கஷ்டமாகி போனது.


வீட்டில் நான் கண்டிப்பாக சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானமே போட்டு விட்டதால் நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறேன் .என் குடும்பத்திற்கு இப்பொழுது சந்தோஷம்.


ஆனால் எனக்கு, எனது திறமைகளை கண்டு வெளிஉலகம் பாராட்டி உற்சாகபடுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

(அப்பாடா திரையுலகமும் ரசிகர்களும் என் கிட்டேருந்து தப்பிச்சிட்டாங்க )

ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜூலை 18, 2010

நம்ம ஊரு





நம்ம ஊரு
நான் சென்னையில் இருந்தாலும் பெங்களூர், டில்லி போன்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எனது ஊரான கும்பகோணம் சென்றாலே, ஒரு சின்ன குழந்தையின் குதுகலம் தான் எப்போதுமே .தாயின் மடியில் சென்று அமர்ந்த சந்தோஷம் தான் எனக்கு (எங்களுக்கும் தான் என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்குது )



சமீபத்தில் என் ஊருக்கு என் அம்மாவின் குலதெய்வமான காத்தாயம்மன்கோவிலுக்கு சென்றிருந்தோம் இந்த கோவில் உள்ள ஊரின் பெயர் கபிஸ்தலம். இது கும்பகோணம் டு தஞ்சாவூர் செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.
அந்த இடத்தின் இயற்கையை கண்டு வியந்து நான் எடுத்த சில காட்சிகள்







தென்னை மரங்களடர்ந்த அழகான அமைதியான இடம்



கோவிலுக்கு வரும் சாலை




கோவிலை சுற்றி உள்ள வயல் வெளி



வைக்கோல்போர் (அப்படிதான் சொல்வார்கள் ) அருகே என் மகனும் , என் உறவினர் மகனும்

பச்சை பசேல் என்ற வயல்வெளி எங்கும்


கோவில் நுழைவாயில்


ஆர்.வி.சரவணன்
























சனி, ஜூலை 17, 2010

ஜோக் கடிக்கிறாங்க


ஜோக் கடிக்கிறாங்க

என் நண்பர் TN ஸ்ரீதர் மின்னஞ்சலில் SMS ஜோக்ஸ் அனுப்பியிருந்தார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

நைட்லே கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம் அதுவே மார்னிங் லே கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா

என்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும்

காதல் என்பது கரண்ட் போன நேரத்திலே வர கொசு மாதிரி தூங்கவும் முடியாது துரத்தவும் முடியாது

அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம் ஒரு பெண்ணை காதலிச்சால் நீங்க அடிமை அதே பெண்ணை நீங்க கல்யாணம் பண்ணா நீங்க கொத்தடிமை

இந்த ஜோக்ஸ் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய ஒரு கடி இதோ

நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்

ஹி ....ஹி.....

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூலை 15, 2010

சின்னஞ் சிறு உள்ளங்களே


சின்னஞ் சிறு உள்ளங்களே

ஜூலை 16 ,2004 கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்தது. அந்த சின்ன சிறு உள்ளங்களுக்காக உலகமே கலங்கியது. என்னை இது மிகவும் பாதித்தது . என் அன்றாட வாழ்வில் நெருப்பு எப்பொழுது எனை தீண்டினாலும் எனக்கு அந்த சிறுவர் சிறுமியரின் ஞாபகம் வரும் என் கண்கள் கலங்கும்

இதோ அந்த பிஞ்சு உள்ளங்களுக்காக நான் எழுதியதை இந்த நினைவு நாளில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


சீவி சிங்காரித்து வகுப்பறைக்கு சென்ற சின்ன சிட்டுகளே கருகி போய் வந்த மொட்டுக்களே

அறிவை தரும் கல்விச்சாலை உங்களுக்கு மட்டும் ஏன் யாகசாலையாய்

இரக்கமில்லா அக்னி உங்களை அரவணைத்தது எமது விழிகளை கண்ணீரில் நனைத்தது

ஈரமில்லா நெஞ்சமுள்ள வருணனும் மழையாய் உங்களை காக்கவில்லை பெற்றோரிடம் உங்களை மீட்டுத் தரவில்லை

உங்களை பொசுக்கிய தீ அணைந்து போனது இங்கு பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது

இறைவன் உங்களை தன்னருகே சேர்த்து கொண்டான் நாங்கள் துன்பத்தை வார்த்துக் கொண்டோம்

இப்போது இறைவனின் மடியில் நீங்கள் எப்போதும் உங்களின் நினைவில் நாங்கள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைக்.................................காட்சி


தொலைக்.................................காட்சி

டிவி பார்க்கும் போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை


*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ


*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி நிகழ்ச்சி பார்க்கும் நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்


*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூலை 08, 2010

மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல




மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல



எனக்கென்று பார்த்த பெண்ணே காயத்ரி




நான் நலமில்லை நீயேனும் நலமா




நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லது மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.




ஆர்.வி.சரவணன்

சனி, ஜூலை 03, 2010

குறையொன்றுமில்லை






குறையொன்றுமில்லை


ஓம் நமோ நாராயணா


குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ...........
என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புகளான வாய்பேசாதோர், காது கேளாதோர் ,கை கால் ஊனமுற்றோர், மன நிலை தவறியவர்கள்
இவ் வையகத்தில் அவதியுறும் நிலையில், நான் பாட தயக்கம் வருகிறது.



இறைவா இனி நீ
இவ்வுலகில் படைக்கும் அனைத்து உயிரினையும் குறை ஒன்றுமில்லாமல் படைப்பாயாக
ஒவ்வொரு மணித்துளியும் உனை நான் இவ்விதம் முழுமையாய் பாடி இன்புற பேரருள் புரிவாயாக


பெருமாள் ஓவியம் வரைந்தது என் மகன் ஹர்ஷவர்தன். நானும் என் மனைவியும் நகை மாலை வரைந்து கொடுத்து முழுமை செய்தோம்


ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஜூலை 02, 2010

மனம் கவர்ந்த பாடல்கள்1








மனம் கவர்ந்த பாடல்கள் 1

பாடல்கள் கேட்பது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நேரத்திலும் பாடல்கள் கேட்க ஆசைபடுவேன் . எவ்வளவு டென்ஷன் ஆக இருந்தாலும் பாடல்கள் கேட்டால் ரிலாக்ஸ் ஆகி விடுவேன் அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் மிகவும் இஷ்டம் இதோ இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று

அதிகாலை சுக வேளை உன் ஓலை வந்தது ........



இந்த பாடல் இடம் பெற்ற படம் நட்பு. இந்த பாடல் இடம் பெரும் காட்சி என்னவென்றால் கார்த்திக், ஸ்ரீ பாரதி இருவரும் தங்கள் காதலுக்கு தூதுவனாக செந்திலை பயன்படுத்துவார்கள். செந்திலுக்கு உபகாரமாக 10 பைசா கொடுப்பார்கள் 10 பைசாக்கள் குவிந்து போய் செந்தில் சந்தோசமாக சிரிப்பார். அப்பொழுது இந்த பாடல் ஆரம்பமாகும்.



பாடல் ஆரம்பிக்கும் போதே நம் இசை அரசர் இளையராஜா பைசாக்கள் மோதுவது போல் ஓசையை ஆரம்பித்து பின் தன் இசை வெள்ளத்தை ஆரம்பித்திருப்பார். கூடவே பைசாக்கள் மோதும் ஒலி தொடர்ந்து ...டின் டின் டின் டின்.........என்று பாடல் முழுவதும் வரும். பைசாக்கள் மோதும் அந்த ஒலி பாடலின் இசையின் ஊடே கலந்து,அதனுடன் ஜேசுதாஸ் ஜானகி குரல்களின் வசீகரமும் இணைந்து நம் எண்ண அலைகளில் தரும் இன்ப அதிர்வை என்னவென்பது அந்த இசை வெள்ளத்தில் நம் மனது படகில் செல்வது போல் தோன்றும்.

இந்த படத்தை பற்றி ஒரு குறிப்பு

இந்த படத்தின் கதையை வைரமுத்து அவர்கள் வானம் தொட்டு விடும் தூரம் தான் என்ற பெயரில் குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதினார். அந்த கதை நட்பு என்ற பெயரில் திரைப்படமானது.அமீர்ஜான் இந்த படத்தை இயக்கியிருந்தார் கதை,வசனம், பாடல்கள் வைரமுத்து. இந்த படத்தின் நாயகன் கார்த்திக் ஸ்ரீ பாரதி என்ற புதுமுகம் இந்த படத்தில் நாயகியாக அறிமுகம் தயாரிப்பு P.S.V.PICTURES இந்த படத்தில் வரும் ஆறு பாடல்களில் இந்த பாடல் ஹிட். இந்த படம் 1986 இல் வெளியானது.


தொடர்வேன்

ஆர்.வி.சரவணன்