வியாழன், டிசம்பர் 29, 2011

இளமை எழுதும் கவிதை நீ....11






இளமை எழுதும் கவிதை நீ....11

அத்தியாயம் 11


சாம்ராஜ்யத்தையே நான் துறக்கிறேன்
உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி




சிவா வந்து இறங்கிய வேகத்தில் அந்த மிக பெரிய வரவேற்பறையான ஹாலே அதிர்ந்தது கண்ணாடி துகள்கள் ஹால் எங்கும் சிதற அங்கிருந்த அனைவரும் இதை எதிர்பார்க்காததால் திடுக்கிட்டனர். சிவா பைக்கை அப்படியே சாய்த்து விட்டு அதிரடியாய் இறங்கியவன் தன் மாமாவை முறைத்தான்.


சிவா மீண்டும் விநாயகர் கோவிலுக்கே வந்து மழையில் நனைந்த படி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான்.

இடைவேளை

தொடரும்



இந்த தொடர்கதை எண்பதுகளில் வரும் சினிமா போல் இருப்பதாக சொன்னார்கள் இந்த கதை நான் கல்லூரியில் படிக்கும் போது சினிமா திரைக்கதை போல் உருவாக்கியது அதாவது வருடம் 1989 ஆகவே தான் அப்படி இருக்கிறது.





இந்த தொடர்கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி.நிறைய பேர் படிக்கிறீர்கள் எனபதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அதே போல் உங்கள் எண்ணம் என்ன என்பதை அறியும் ஆவலிலும் இருக்கிறேன் எனவே கருத்துரையிடுங்கள் நண்பர்களே
ஆர்.வி.சரவணன்

செவ்வாய், டிசம்பர் 27, 2011

பேசச்சொல்லும் மௌன குரு




பேசச்சொல்லும் மௌன குரு


நாம் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் தான் மௌனகுரு

இந்த படத்தின் கிளிப்பிங்க்ஸ் ஒன்று டிவி யில் பார்த்தேன்
அது என்னவென்றால் அருள்நிதி ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து இந்த குழந்தையின் அப்பாவை (அவர் கான்ஸ்டபில்) அடித்து விட்டேன் அவர் அதில் மயங்கி விழுந்து விட்டார் இந்த குழந்தை வீட்டுக்கு போக வேண்டும் என்கிறது எனக்கு அட்ரஸ் தெரியாது என்று சொல்வார் இன்ஸ்பெக்டர் உமா ரியசிடம். அவர் அதிர்ந்து போவார். இந்த காட்சியை பார்த்தவுடனே சுவாரசியம் வந்து என் எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவே அன்றே தியேட்டர் சென்று பார்த்தேன் என் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஏமாற்றாமல் படம் ரசிக்கும் படி இருந்தது.

கதை போலீஸ் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனை வாழ்க்கையில் எந்த அளவு மோசமான நிலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதை, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் commercial விஷயங்கள் என்று எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழகாக நேர்த்தியாக ஒரு திரில்லர் படத்தை தந்திருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு ஒரு வெல்கம்

திரைக்கதை தான் படத்தின் ஹீரோ திரைக்கதையை பக்காவாக அமைத்து கேரக்டர்களை சிறப்பாக வடிவமைத்து அந்த கேரக்டர்களுக்கு நடிகர்களை பொருத்தமாக தேர்வு செய்து
ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் அருமையாய் அமைத்திருக்கிறார்.

உதாரணமாக அண்ணி கேரக்டர். வள வளவளவென்று எல்லாம் பேசாமல் தன கண்களாலேயே அருள்நிதியை தனிமைபடுத்தும் விதம்

உமா ரியாஸ் நிறை மாத கர்ப்பிணியாக, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மனசாட்சியுடன் நேர்மையாய் செயல்படுவதாக காட்டும் விதம்

தம்பியை தனியே விடவும் முடியாமல் அதே நேரத்தில் வீட்டில் சேர்த்து கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அண்ணன் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அருமையாய் அமைத்திருக்கிறார்.

அருள்நிதி இந்த படத்தில் கருணாகரன் கேரக்டரில் கன கச்சிதமாய் பொருந்துகிறார் அவர்
ஒரு சாதாரண மனிதனை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அருள்நிதி இந்த படம் வளர்ந்து வரும் அவருக்கு கண்டிப்பாக முக்கியமான படம் எனலாம்

இனியா இந்த படத்தில் பெயருக்கேற்றார் போல் இனிமை சேர்க்கிறார் வீட்டில் எல்லாரும் அருள்நிதியை உதாசீனப்படுத்த இனியா மட்டும் அவரை கண்களால் பரிவாய் பார்க்கும் காட்சிகள் காதல் வருடல். அவர் தலையை கலைப்பதாகட்டும் காஸ் சிலிண்டர் தான் வந்திருக்கு என்று நிம்மதியுடன் அவர் தோளை தட்டுவதாகட்டும் உங்களையும் யாரவது இப்படி ஓவியம் வரையலாம் என்று சொன்னவுடன் அருள்நிதியை கட்டி கொண்டு அவர் மீது சாய்ந்து கொள்வதாகட்டும். இந்த காட்சிகள் மனதை வருடுகிறது


மற்ற கேரக்டர்கள் என்று பார்க்க போனால் ஜான் விஜய் தன் வில்லன் நடிப்பாலும் காலேஜ் பிரின்சிபால் தன் குணசித்திர நடிப்பாலும் அருள்நிதி யின் தாய் பாசத்திலும் நம்மை ஈர்க்கிறார்கள்


எனக்கு உறுத்தலான விஷயங்கள் என்னவென்றால்

இனியா தன் காதலனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து அவரை மீட்க ஏன் முயற்சி எடுக்கவில்லை.


அதே போல் மன நோய் மருத்துவமனை காட்சிகளை குறைத்திருக்கலாம்

தமனின் பின்னணி இசையும் ஒளிபதிவும் இயக்குனருக்கு பக்க பலமாய் இருக்கிறது

அருள்நிதியின் அடுத்த படத்தை, சாந்தகுமாரின் அடுத்த படத்தை பார்பதற்காக ஒரு கர்ச்சிப் (அதாங்க ரிசெர்வேசன்) இப்போதே போட்டு வைத்து விடலாம் என்று நினைக்க வைக்கிறது இந்த படம்.

மௌன குரு பேசப்பட வேண்டியவன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், டிசம்பர் 22, 2011

இளமை எழுதும் கவிதை நீ....10




இளமை எழுதும் கவிதை நீ....10


அத்தியாயம் 10


உன் வெற்றிக்கு சந்தோசப்படவே எனக்கு நேரம் போதவில்லை
இதில் எங்கே என் தோல்விக்கு நான் கவலைபடுவது



சிவாவை நோக்கியே எல்லோரது கவனமும் இருக்க கார்த்திக் மிகுந்த ஆத்திரத்தில் "சிவா எப்படி உன்னாலே இதை ஜீரணிக்க முடியுது என்னால் முடியவில்லை இந்த தோல்வியை தாங்கும் சக்தி என்னிடமில்லை" என்று காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினான்

சிவா அதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் தரையை பார்த்தபடியே இருக்கவே

"உமாவுக்கு நீ ஜாஸ்தி இடம் கொடுத்துட்டே சிவா" என்றான் கார்த்திக்

சிவா இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கவே


"அவளை பதிலுக்கு பதில் வாயாட விட்டதே தப்பு அதனோட மட்டுமில்லாம அவ வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணமே அப்ப ஊரையே கூப்பிட்டு வச்சி அவங்களை அவமானபடுத்தி இருக்கணும் விட்டுட்டு வந்தது தப்பா போச்சு"

"நான் கூட எதிர்பார்க்கலை உமா இவ்வளவு விஸ்வருபம் எடுப்பானு" பாலு


"அவளை விட கூடாது" என்று கார்த்திக் பரபரக்க சிவா தலை நிமிர்ந்தான்.

அவசரமாய் எழுந்தவன் உச்ச கட்ட கோபத்தில் இருப்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது



தொடரும்


ஆர்.வி.சரவணன்


he story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites

செவ்வாய், டிசம்பர் 20, 2011

என் கேள்விக்கு எனது பதில்


என் கேள்விக்கு எனது பதில்

நம்மிடம் வேடிக்கையாக பேசுபவர்களை எப்படி எதிர் கொள்வது ?

ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் தாஜ்கந்த் சென்றிருந்த போது ஒரு பத்திரிகை நிருபர் நீங்கள் ரொம்ப குள்ளம் என்று வேடிக்கையாக கூறினாராம்.
அதற்கு அவர் இருக்கலாம் அதனால் எனக்கு நன்மை தான் நான் மற்றவர்களிடம் பேசும் போது நிமிர்ந்து இருப்பேன் அனால் மற்றவர்கள் என்னிடம் பேசும் போது தலை குனிய வேண்டும் என்றார் சிரித்து கொண்டே



ஆசை என்பது ஒரு தொடர்கதை சரி தானே ?

கண்டிப்பாங்க, இதற்கு வேற எங்கியும் போக வேண்டாம் என் கிட்டயே உதாரணம் இருக்கு போன மாசம் நான் கும்பகோணம் போறதுக்கு கிளம்பறப்ப என் நண்பன் கேட்டான் என்னடா படுக்கிறதுக்கு இடம் கிடைக்குமா, உட்கார சீட் கிடைச்சா போதாதா என்று சொல்லி கிளம்பினேன். அங்கு போய் நான் வரிசையில் நிற்கும் போது கண்டிப்பா சீட் கிடைச்சுடும் என்று எனக்கு நம்பிக்கை வந்துச்சு கூடவே ஜன்னலோர சீட் கிடைச்சா நல்லாருக்கும் னு மனசு ஆசைபட்டுச்சு ஜன்னலோர சீட்டும் கிடைச்சுது. நிம்மதியா உட்கார்ந்தேன் எதிர் சீட்டில் வயதானவர் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார் ட்ரெயின் கிளம்பி நேரமாக நேரமாக எனக்கு வந்த இன்னொரு ஆசை என்ன தெரியுமா எதிர் சீட்டில் இதே நம் வயசுள்ள ஆள் உட்கார்ந்திருந்தால் கால்களை அந்த சீட்டில் நீட்டி வைத்து கொண்டு செல்லலாமே என்று தான்
இப்ப உங்களுக்கு என் மேல் கோபம் வந்திருக்குமே அதனால் ஒன்னும் தப்பில்லை ஏன்னா எனக்கே என் மேல் கோபம் வர்றப்ப உங்களுக்கு வராதா என்ன
ஆகவே ஆசை ஒரு தொடர்கதை தான்

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

இளமை எழுதும் கவிதை நீ....9




இளமை எழுதும் கவிதை நீ 9


அத்தியாயம் 9

நீ அடையும் தோல்வியில் பங்கெடுக்க வருகிறேன்
நான் அடையும் வெற்றியில் பாதியை உனக்கு தருகிறேன்


உமா மாணவிகள் படை சூழ எதிரே கம்பீரமாய் வந்து கொண்டிருக்க, அவளை பார்த்த சிவா வுக்கு கோபம் வராமல் இதழ்களில் புன்முறுவல் தான் தோன்றியது

தன் இரு பேண்ட் பாக்கெட்களிலும் கை விட்ட படி ஸ்டைலாய் நின்றிருந்த சிவா உமா கிட்டே வந்தவுடன் ,"ஏன் இந்த கொலைவெறி" என்றான்

அவன் சொல் கேட்டு நின்றவள் "நீ சொல்றது புரியலை" என்றாள்

"தேர்தல்லே நிக்க போறியாமே அதை சொன்னேன் ஏன் இந்த வேண்டாத வேலை"

"ஏன் நீ மட்டும் தான் நிக்கலாம்னு எதுனா சட்டம் இருக்கா என்ன

"நீ ரொம்ப எல்லை மீறி போறே"

இந்த பதிலால் கோபமடைந்தவள் "அதை கேட்க நீ யார்" என்றாள்

"உன்னை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு "

"உன்னை பார்த்தா எனக்கு கேவலமா இருக்கு"

இந்த பதிலால் அதிர்ச்சியுற்ற சிவா கோபமாய் கை சொடக்கு போட்டு

"தோத்து போயிட்டா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தலை நிமிர்ந்து போக முடியாது "

"அதே தோல்வி உனக்கும் வரலாம் இல்லையா அப்ப உன் நிலைமையும் அதானே"

"வார்த்தைக்கு வார்த்தை பேசறியே" எரிச்சலை வார்த்தைகளில்
கொட்டினான்


"ஏன் தோத்து போயிடுவோம்னு பயமா இருக்கா"

"எனக்கு ஒன்னும் பயமில்லை "

"அப்புறம் என்ன நீ மட்டுமே நின்னு ஜெயிக்கிறதை விட்டுட்டு என் கூட எதிர்த்து நின்னு ஜெயிச்சு பாரு அது தான் உண்மையான வெற்றி யா இருக்கும் நான் உன் கிட்டே போட்ட சபதத்தில் இது தான் முதல் ஸ்டேப் னு கூட நீ எடுத்துக்கலாம் "


"கண்டிப்பா ஜெயிப்பேன்"


தொடரும்


ஆர்.வி.சரவணன்

இந்த ஓவியம் வரைந்தது நம் சக வலை பதிவர் சகோதரி தென்றல் சரவணன் அவர்கள் அவருக்கு என் நன்றி

வியாழன், டிசம்பர் 08, 2011

இளமை எழுதும் கவிதை நீ.... 8


இளமை எழுதும் கவிதை நீ.... 8


அத்தியாயம் 8



எனை எதிர்த்து நீயே களமிறங்கினால்
என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா


உமாவுக்கு அன்று முழுதும் பேரவை தேர்தல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது அது வரை அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இல்லையென்றாலும் சிவாவின் அத்துமீறிய கலாட்டாக்கள் அவள் மனதை ரொம்பவும் ரணப்படுதியிருந்தன

அவனுக்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவள் மனது அலை பாய்ந்த நேரத்தில் தோழி சொன்னதும் நின்னு பார்ப்போமே என்று தோன்றியது தோற்று போயிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே இருந்தது. தன் தாயிடம் இது பற்றி கேட்டாள் .

கேட்ட அடுத்த நிமிடம் அவள் தாய், "வம்பை விலை கொடுத்து வாங்கனுமானு சொல்வாங்க நீ சும்மாவே வாங்கறேன்றே வேணாம்மா அதுவும் அவனை எதிர்த்து கண்டிப்பா வேணாம் "என்று சொல்லி விட்டாள்.

"நீ படிக்கிற வேலையை மட்டும் பார்" என்று அவள் தந்தையும் அதையே ஆமோதித்தார்.

அடுத்த நாள் ஹலோ என்ற பெண் குரல் கேட்டு உமா தன் ரூமை விட்டு வெளி வந்தாள். அங்கே வாசலில் கீதா நின்று கொண்டிருந்தாள்


தொடரும்

ஆர்.வி.சரவணன்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


வியாழன், டிசம்பர் 01, 2011

இளமை எழுதும் கவிதை நீ....7


இளமை எழுதும் கவிதை நீ....7





நண்பர்களே ஏழாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஓவியம் இது (உமாவின் அப்பா சிவாவை தட்டி கேட்பதற்காக காலேஜ் வருவதை ஓவியமாக வரைய சொல்லியிருந்தேன்) இதை பார்க்கும் போது அவனது கற்பனைத்திறன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்


அத்தியாயம் 7



என் உடலின் அனைத்து செல்களும் செவி முளைத்து
தயார் நிலையில் உன் சொல்லை கேட்பதற்காக




மாவின் வீட்டுக்குள் சிவா தன் படையுடன் நுழைந்த அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸ் ஆக அவர்கள் பேசி கொண்டிருக்கும் நேரம் அது. அன்றும் அதே போல் அவர்கள் பேசி கொண்டிருந்த வேளையில், கார்த்திக்குடன் நுழைந்த சிவா வை பார்த்து முதலில் அதிர்ச்சியுற்றவள் உமாவின் தாய் தான். அவளது முக பாவம் பார்த்து தான் அவள் பார்வை போன திக்கில் பார்த்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அதிர்ந்தார்.படிப்பதில் மும்முரமாகியிருந்த உமா திடுக்கிட்டாள்

"நீங்க எப்படி இங்கே" என்று இரைந்தார் ஜெயச்சந்திரன்

"நீங்க எங்க மேலே படை எடுத்தீங்க பதிலுக்கு நாங்க படை எடுத்து வந்திருக்கோம் "கார்த்திக்

"ஆமா எப்படி வந்தீங்க"

"மாடி படி வழியா தான்"

"சீ வாசல்லே கதவை தட்டி வராமே திருட்டு பசங்க மாதிரி வரீங்க"உமா


"திருட்டு பசங்க நாங்க னு சொல்லாமே சொல்றாங்க"இன்ஸ்பெக்டர்

"கதவை தட்டி வரலை தான், ஆனா இதோ அதற்கு பதிலா கதவை உடைச்சிடுறேன்" என்று கோபத்தில் தன் காலால் கதவை ஓங்கி உதைத்தான் சிவா


தொடரும்


ஆர்.வி.சரவணன்


The story is copyrighted to kudanthaiyur and may not be used in any model or in any ways