திங்கள், பிப்ரவரி 27, 2012

வெற்றியை எட்டும் வரை எட்டு....






திருவண்ணமலையில் நான் க்ளிக்கிய சில படங்கள்


வெற்றியை எட்டும் வரை எட்டு....

நான் திருப்பூரில் டையிங் யூனிட்டில் மேலாளராக வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்

அங்கு தினமும் அனைத்து வேலையாட்களும் வேலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு இறைவனுக்கு ஒரு உறுதிமொழி எடுப்பார்கள் அனைவரும் வரிசையில் நிற்க நாங்கள் எதிரில் நின்று ஒருவர் சொல்ல அதை மற்றவர்கள் சொல்வார்கள். அந்த உறுதிமொழி முழு வெள்ளை தாள் அளவுக்கு ஒரு பக்கம் இருக்கும்.

அதே போல் ஒவ்வொரு வியாழனும் அனைத்து துறைகளின் மேலாளர்கள் பங்குபெறும் மீட்டிங் நடைபெறும் அதில் கலந்து கொள்ள எம். டி வருவார் எங்களது யூனிட்டுக்கு முதலாளியின் மனைவி தான் பொறுப்பாளர் (ஜெனரல் மேனேஜர்) கம்பெனி நிர்வாகம் ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று எம் .டி எடுத்துரைப்பார் அதே போல் ஊழியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒவ்வொரு துறையின் மேலாளரும் எடுத்துரைப்பார்கள் அடுத்த மீட்டிங்கில் இதை சரி செய்து தர வேண்டும் என்ற ஒப்புதலுடன் இரு சாராரும் உறுதி எடுக்கும் இந்த மீட்டிங் அங்கே ஊழியர்கள் முதலாளி அனைவரும் ஒன்றே என்பது தான் அந்த மீட்டிங் கின் சிறப்பம்சம்

அந்த மீட்டிங் நடைபெறும் போதும் இந்த இறைவனுக்கு உறுதிமொழி எடுப்பது நடைபெறும் ஒருவர் சொல்ல மற்ற அனைவரும் திருப்பி சொல்வோம் இதில் முதலாளி என்ற பாகுபாடில்லாமல்
எம்.டி .யும் எழுந்து நின்று கை கட்டி சொல்வார் எங்களை போலவே சொல்வார். அன்று அதே போல் அந்த உறுதிமொழி பேப்பரை படிக்க எடுத்த தன் மனைவியிடம் அவர் பேப்பரை வைத்து விட்டு பார்க்காமல் சொல் என்று உத்தரவிட்டார் அவர் மனைவி (எங்கள் யூனிட் ஜெனரல் மேனேஜர்) எனக்கு தெரியாது என்று சிரித்த படியே மறுத்தார் .இவ்வளவு நாள் படிக்கிறே இன்னுமா மனப்பாடம் ஆகவில்லை உனக்கு என்று கேட்டார்.

பின் எங்களை பார்த்த எம் .டி வேறு யாருக்கு பார்க்காமலே சொல்ல தெரியும் என்றார் எல்லோரும் உடனே என்னை பார்த்தார்கள் ஏனெனில் ஏற்கனவே ஊழியர்களுடன் நான் உறுதிமொழி எடுக்கும் போது மற்றவர்கள் பார்த்து படிக்க நான் மட்டும் பார்க்காமலே சொல்வேன் ( எந்த ஒரு விசயமும் சில முறை கேட்டால் எனக்கு மனப்பாடம் ஆகி விடும் ) சரவணனுக்கு தெரியும் என்றார்கள் எங்கே சொல் என்றார் எனக்கு கொஞ்சம் பயமாகி விட்டது ஏனெனில் ஏதும் சொதப்பி விட போகிறோமே என்று தான் இருந்தும் வேறு வழி. நான் சொல்ல ஆரம்பித்தேன் நான் சொல்ல சொல்ல எம்.டி உள்பட அனைவரும் அதை திருப்பி சொன்னார்கள் உறுதிமொழி சொல்லி முடித்தவுடன் எம் .டி கை தட்டினார் வெல்டன் சரவணன் எல்லோரும் என் மனைவி உட்பட கடமைக்கு தான் அதை சொல்லியிருக்கிறார்கள் நீ மட்டும் தான் அதை ஆத்மார்த்தமாக சொல்லியிருக்கிறாய் அதனால் தான் உன்னால் மனப்பாடம் செய்ய முடிந்திருக்கிறது கண்டிப்பா நீ நல்ல நிலைக்கு வருவே என்று சொன்னார் அன்று முழுவதும் நான் சந்தோசத்தில் மிதந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா

வெற்றிக்கான விதை என் மனதில் விழுந்தது அப்போது தான் எந்த ஒரு விசயமாகினும் அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும் என்பதை கெட்டியாக பிடித்து கொண்டதன் விளைவு அவ்வபோது சில வெற்றிகளை என்னால் எட்ட முடிந்தது

இதை எதுக்கு இப்ப சொன்னேன்னா இன்னும் followers எண்ணிக்கை நூறை என் தளம் அடையவில்லை இன்னும் இருபத்தி ஐந்தாயிரம் ஹிட்ஸ் கூட நான் எட்டவில்லை இருந்தும் இது எனக்கு நுற்று எழுபத்தைந்தாவது இடுகை இதில் நான் பெருமிதப்பட ஏதுமில்லை இந்த வேலையில் இன்னும் நான் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை என்பதாக தான் இதை எடுத்து கொள்கிறேன்

ஆனாலும் இந்த எண்ணிக்கையை நான் எட்டுவதற்கு நண்பர்களே என்னை தொடரும் நீங்கள் தானே காரணம்

நன்றி நண்பர்களே

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

நான் சொல்வது யாதெனில்....




நான் சொல்வது யாதெனில்....
(கோச்சடையான் + நீ தானே என் பொன் வசந்தம் + நண்பன் + மின்வெட்டு + ரயில் பயணம்)

கோச்சடையான் ஸ்டில் பார்த்து விட்டு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை பிடித்த படம் தியேட்டரில் சென்று அமர்ந்து பார்க்கும் போது முக்கியமான கட்டம் வரும் போது நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டில் இன்னும் சரியான படி அமர்ந்து ஆவலுடன் படத்தில் ஒன்றி விடுவோம் அல்லவா அது போல் தான் கோச்சடையான் ஸ்டில் பார்க்கும் போது தோன்றுகிறது படம் சிறப்பாய் வெளி வர வாழ்த்துக்கள் தலைவா
( கோச்சடையான் வெற்றியுடையான் )


------

அதே போல் ஜீவா நடிக்க கெளதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படம் என் முக்கிய எதிர்பார்ப்பில் இருக்கிறது காரணம் நம் இசை அரசர் இளையராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தின் ட்ரைலர் நன்றாக இருக்கிறது என்று படித்தேன் பார்க்கவில்லை இளையராஜாவின் தீவிர ரசிகனான எனக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தந்திருக்கிறது (உன் இசை தானே எங்கள் பொன் வசந்தம்)

------


நண்பன் படம் பார்த்தேன் இந்த படத்தில் சைலன்சர் கேரக்டரில் சத்யன். மனிதர் என்னமாய் வெளுத்து வாங்குகிறார் அவரை பார்த்து விட்டு யாரும் சைலன்சாய் இருக்க முடியாது. இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படம் வாழ்த்துக்கள் சத்யன் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் சரியாக வரவில்லை என்பதால் எழுதியும் வெளியிடவில்லை இருந்தாலும் படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை சொல்ல ஆசைபடுகிறேன் நான் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க என் வீட்டில் யாருமே கண்டிப்பாக அனுமதிக்கவில்லை என்னை உதவாக்கரை என்றே முடிவு கட்டும் நிலை என்பதால் என்னால் நான் ஆசைப்பட்டதை தேர்ந்தெடுக்க முடியவில்லை நான் இருக்கும் வேலையில் கடமைக்காக (பணத்திற்காக) இயந்திரத்தனமாய் சுழலும் சூழல் தான் இப்போதும் எனக்கு. நான் விரும்பிய பத்திரிகை துறையிலோ அல்லது திரைப்பட துறையிலோ மட்டும் இருந்திருந்தால் எப்படி சந்தோசமாய் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருப்பேன் என்பதை நினைத்து பார்க்கிறேன் இந்த துறைகளில் யாரேனும் புதிதாக வந்து வெற்றி பெறும் போதெல்லாம் ஒரு ஏக்க பெருமூச்சு எனக்கு வெளிபடுகிறது ( நண்பன் படம் நன்பேண்டா என்று சொல்ல வைக்கிறது)

------

மின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது சென்ற வாரம் எங்கள் வீட்டில் சில மின்சார வேலைகள் இருந்ததால் எலேக்ட்ரிசியன் அழைத்திருந்தேன் ஒரு டியுப் லைட் எரியவில்லை அதற்கு மெனக்கெட்டு கொண்டிருந்தார் அவர் கரென்ட் போறதுக்குள்ளே முடிச்சுடுறேன் இல்லேன்னா செக் பண்ண முடியாம போயிடும் என்று அவசர அவசரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தார் இருந்தும் கரண்ட் நின்று விட்டது இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் அவர் மீண்டும் இதற்காக மாலை ஒரு முறை வந்திருந்து முடித்து கொடுத்தார் அப்போது அவர் சொன்னது பாருங்க கரென்ட் இல்லேன்னா எனக்கு கூட வேலை கிடையாது எனக்கே இப்படின்னா எத்தனையோ தொழிற்சாலைகள் நிலைமையை நினைச்சு பாருங்க என்றார் உண்மை தான் (மின் வெட்டு இல்லாத நிலை வேண்டும் )

------

ரயில் பயணத்தில் கையோடு புத்தகம் வைத்திருந்தாலும் வெளியில் எடுத்து படிக்க யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது காரணம் சென்ற வாரம் ஊருக்கு சென்ற போது வாரஇதழ் ஒன்று படிப்பதற்காக வாங்கினேன் எனக்கு எப்போதுமே புத்தங்கங்கள் என்றால் வாங்கும் போது எப்படி புத்தம் புதிதாக கசங்காமல் இருக்கிறதோ அதே போல் படித்து முடித்த போதும் இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் புத்தகம் வாங்கிய ஐந்து மணி நேரத்திலேயே ரயிலில் ஒவ்வொருவரும் வாங்கி படித்து நான் சென்று இறங்குவதற்குள் அந்த புத்தகம் கசங்கி அட்டை கையோடு வந்து விடும் போல் இருந்தது சரி நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன் ஏனெனில் சின்ன ஒரு முக சுளிப்பும் தாங்கும் மன வலிமை என்னிடம் இல்லை (புத்தகம் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே )

------




நண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் தனக்கு கிடைத்த விருதுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு என் மனம் கனிந்த நன்றி



நாட்காட்டியில் (கிழிச்சது) படிச்சது

அன்பை கடன் கொடு
அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்


கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனை தரும்


ஆர்.வி.சரவணன்




செவ்வாய், பிப்ரவரி 14, 2012

வாழும் வரை காதலோடு....


வாழும் வரை காதலோடு....


அன்பே உனை பார்க்கும் வரை என் பொழுதே போகவில்லை
பார்த்த பின்னோ என் பொழுதே போதவில்லை


பிரம்மன் உனை மிக அழகாய் படைத்திருக்கிறான் இருக்கட்டும்
என்னை படைத்தது உனக்காக தானா ?


அன்பே உன் சொந்தங்களை கொண்டு நீ எனை கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லுமே


உன் கண்ணீர் துளியை கூட தாங்கும் வலிமை
இல்லாதது என் கருங்கல் இதயம்


என் உடலின் அனைத்து செல்களுக்கும் செவி முளைத்தது
உன் சொல்லை கேட்பதற்காகவே


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா


நான் எழுதி வரும் இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதையில்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் வரிகள் இவை


சென்ற வருடம் நான் எழுதி வெளியிட்ட காதலர் தினம் சிறுகதை இதோ

http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_14.html

ஆர்.வி.சரவணன்

புதன், பிப்ரவரி 08, 2012

மின் வெட்டில் .....


மின் வெட்டில் .....


சிம்னி விளக்கொளியில்
வாழ்ந்த பொழுதுகளை
நம் நினைவில்
எப்பொழுதும்
முன்னிறுத்து கிறதே
முப்பொழுதும்
சென்று வரும்
இந்த
மின் நிறுத்தம்

ஆர்.வி.சரவணன்


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

இது எனது ராஜபாட்டை....


இது எனது ராஜபாட்டை....

எனது நண்பர் ஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள்(pensil vs camera) உங்கள் பார்வைக்கு
கூடவே எனது கமெண்ட்ஸ்




இது எனது (சேட்டைக்கான) ராஜபாட்டை





கள்ளம் (இல்லா) சிரிப்பு


அரங்கத்தில் ஒரு சதுரங்கம்


வான்வெளிக்கும் இங்கே வழியுண்டு



விண்ணிலே ஒரு பெண் நி(ல்)லா


காதலுக்கும் பால(ஆழ)முண்டு
ஆர்.வி.சரவணன்