செவ்வாய், ஜனவரி 31, 2012

இளமை எழுதும் கவிதை நீ....12





இடைவேளை விட்டு கொஞ்சம் அதிக நாள் எடுத்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே இதோ தொடர்கிறேன்

இளமை எழுதும் கவிதை நீ....12

அத்தியாயம் 12


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா

விநாயகர் கோவிலின் வாசலில் மழையில் நனைந்த படி அமர்ந்திருந்த சிவாவுக்கு மனதில் யோசனை ஓடி கொண்டே இருந்தது தன் வாழ்க்கை இனி எப்படி இருக்க போகிறது என்ற கேள்விகுறி உள்ளத்தை மொத்தமாய் ஆக்ரமித்து கொண்டிருக்க என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
மழை விட்டு கொஞ்ச நேரம் ஆகியும் கூட உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அவன் நகரவில்லை.
அப்போது திடீரென்று வந்து நின்ற பைக்குகளில் இருந்து இறங்கிய அவனது நண்பர்கள் சிவாவை நெருங்கினர்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் நன்றி இளையராஜா அவர்கள்

வெள்ளி, ஜனவரி 20, 2012

என் ப்ரண்டை போல யாரு மச்சான்....



என் ப்ரண்டை போல யாரு மச்சான்....

நட்பை பற்றிய ஒரு பதிவு என்பதால் இந்த தலைப்பு
என் பையன் ஹர்ஷவர்தன் ஏழாவது படிக்கிறான். அவன் பள்ளியில் பூனையும் எலியும் பேசி கொண்டால் என்ன பேசுவார்கள் என்ற கான்செப்டில் எழுதி கொண்டு வர சொன்னார்களாம். அவன் எங்கள் யாருடைய உதவியும் இன்றி எழுதியதை பெற்றோர் நாங்கள் படித்த போது, அவனது கற்பனை திறன் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.



அதை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டிருக்கிறேன்
நண்பர்களாகிய நீங்கள் படித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்
டாம் அண்ட் ஜெர்ரி படம் வரைந்ததும் அவன் தான்

பூனையின் நண்பன் எலி

ஒரு வீட்டில் பூனை உறங்கி கொண்டிருந்தது.
திடீரென்று சமையலறையில் தட....புட....என்ற சத்தம் கேட்டவுடன் பூனை எழுந்து சமையல் அறைக்குள் சென்றது

பூனை அங்கிருந்த எலியை பார்த்து : வாப்பா என்ன காலையிலேயே அடி வாங்குவதற்கு வந்து விட்டாயா

எலி :பூனையே உன்னால் என்னை பிடிக்க முடியாது (என்ற படியே வேகமாக ஓடியது)

பூனை : அதையும் பார்க்கலாம் என்று கூறிய படி எலியை பிடித்தது

வீட்டு கதவை எவரோ டக்....டக்....டக்....டக்.... என தட்டினர்

எலி : (தன் மனதில் நினைத்து கொண்டது ) அப்பாடா எப்படியோ தப்பித்தேன்

பூனை : உமக்கு நல்ல காலம் இங்கிருந்து சென்று விடு

எலி வேகமாக ஓடி வலைக்குள் சென்றது

எலி வேகமாக ஓடியதை பார்த்து கொண்டே பூனை வேகமாக கதவை திறந்தது

வீட்டுகாரர்கள் வந்து விட்டார்கள் என்று கூறியபடி மியாவ் மியாவ் என்று கத்தியது

வீட்டுகாரர்கள் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள்
கீழே விழுந்து கிடந்தன. வீட்டுகாரர்கள் அப் பூனையை திட்டினர். "வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டாயே இவ் வீட்டை விட்டு வெளியே செல்" என்று கூறினர்.

இதை கேட்ட எலி பூனையை பார்த்து நான் ஒரு யோசனை கூறுகிறேன் கேள் என்றது

பூனை : நான் இனி உன் பேச்சை கேட்க மாட்டேன்

எலி : என்னை மன்னித்து விடு நான் செய்த தவறு உனக்கு வந்து விட்டது ஆகவே ஒரு யோசனை சொல்கிறேன் கேள்

பூனை : சரி கூறு

எலி கூறிய யோசனை

எலி : என்னை பிடிக்கத்தான் உன்னை வைத்திருக்கிறார்கள். தற்பொழுது உனக்கும் இவ் வீட்டில் இடம் வேண்டும் எனக்கும் இடம் வேண்டும். ஆகவே நீ என்னை பிடித்து காட்டுவது போல் நடி. வீட்டுக்காரர்களிடம் நீ , "சமையல் அறையில் பொருள்கள் கீழே விழுந்து கிடப்பதற்கு காரணம் இந்த எலி தான்" என்று கூறு என்று சொல்லியது

எலி கூறிய யோசனை படி பூனையும் நடந்தது

எலியை பிடித்து காட்டுவது போல் நடித்த பூனைக்கு வீட்டுகாரர்கள் தின் பண்டங்களை கொடுத்து பாராட்டினர்

பூனை யாருக்கும் தெரியாமல் அத் தின்பண்டங்களில் பாதியை எலிக்கு கொடுத்தது பூனையும் எலியும் நண்பர்களாகின.


இப்ப பூனை, என் பிரெண்டை போல யாரு மச்சான் என்று தானே பாடும்
ஆகவே தான் இந்த தலைப்பில் கொடுத்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்



சனி, ஜனவரி 07, 2012

நான் சொல்வது யாதெனில் ....




நான் சொல்வது யாதெனில் ....

(பாக்யராஜ் + புத்தக காட்சி + கொலைவெறி + ஏ.ஆர்.ரகுமான்)

முதல்லே உங்க எல்லாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை உளமார பிரார்த்திக்கிறேன்
(தாமதமா சொல்றதுக்கு மன்னிக்கவும் )




பார்த்தது


நேற்று என் ரத்தத்தின் ரத்தமே படம் பார்த்தேன் டிவி இல் பாக்யராஜ் நடித்த படம் இந்த படத்தில் பாக்யராஜ் தான் வளர்க்கும் சிறுவர்களுக்கு கதை சொல்வார். ஒரு ஊரில் மன்னாங்கட்டியும் இலையும் நண்பர்களா இருந்தாங்க மழை பெய்யும் போது இலை, மண்ணாங்கட்டியின் மேல் இருந்து அது கரையாமல் பாதுகாக்கும். காற்றடிக்கும் போது மண்ணாங்கட்டி, இலையின் மேல் அமர்ந்து இலை காற்றில் பறக்காமல் பாதுகாக்கும் என்று சொல்லி கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் கேட்பான் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால் என்னாகும் என்று. அதற்கு பாக்யராஜ் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிப்பார் பாருங்கள் அது வல்லவோ பாக்யராஜ் டச். இது எதற்கு இப்ப என்கிறீர்களா

(இன்று ஜனவரி 7 பாக்யராஜ் பிறந்தநாள் ஹாப்பி பர்த்டே பாக்யராஜ் சார் )


படித்தது

புத்தக கண்காட்சி ஆரம்பமாகி விட்டது சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவல் வாங்க வேண்டும் சாண்டில்யனின் ஜலதீபம் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது எனக்கு. எல்லா புத்தகத்தையும் வாங்க முடியாது என்றாலும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எனக்கு பிரியம் ஜாஸ்தி. ஒரு ஸ்டாலையும் விடமாட்டேன் சுற்றி சுற்றி வருவேன் எப்படியும் நான் அந்த அரங்கை சுற்றி முடித்து விட்டு வெளி வர ஐந்து மணி நேரமாவது ஆகும். அந்த நேரங்களில்வெளி உலகமே மறந்து போய் விடும் எனக்கு

(புத்தகம் வாங்குறியே படிக்கிறியானு கேட்கறீங்களா நான் ஏற்கனவே வாங்கிய மன்னன் மகள், யவன ராணி இன்னும் தொட கூட இல்லை)


கேட்டது

கொலைவெறி பாடல் இந்த ஒரே பாடல் மூலம் தனுஷ் இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் எல்லாரும் இதையே சொல்றாங்களே னு நானும் இந்த பாடலை கேட்டேன். முதல் முறை கேட்ட போது ஒன்றும் இம்ப்ரெஸ் ஆகவில்லை. தொடர்ந்து கேட்டதில் பாடல் பிடித்து போய் இப்போது என் ஹம்மிங்கே இந்த பாடல் தான்

(ஒரு படத்தில் தனுஷ் பார்க்க பார்க்க தான் பிடிக்கும் னு சொல்வது போல் தொடர்ந்து கேட்க கேட்க தான் பிடிச்சுதோ)




எழுதியது

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற போது நான் எனது டைரி யில் எழுதி வைத்திருந்ததை இதோ உங்களுக்காக தருகிறேன் நல்லா இல்லேன்னா திட்டாதீங்க (அப்போது நான் வலை தளம் ஆரம்பிக்கவில்லை )

ஆஸ்கர் என்பது அனைவருக்கும் ஒரு கனவானது
உனக்கோ அது இங்கே நனவானது

ஆஸ்கர் அரங்கில் உன்னால் தமிழ் பேசப்பட்டது
தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் உன் வசப்பட்டது

உன் இசை எம் இதய அரங்கில் இன்பம் வார்த்தது
உலக அரங்கையே உன் பால் ஈர்த்தது

செய்த சாதனைகளை இறைவனுக்கே சமர்ப்பிக்கிறாய்
செய்ய போகும் சாதனைக்கு உன் உழைப்பை வித்திடுகிறாய்

அடக்கத்திலும் ஆன்மீகத்திலும் இன்னொரு ரஜினி நீ
சிகரங்களை தொட முயற்சிப்பதில் இன்னொரு கஜினி நீ


(இது எதற்கு என்கிறீர்களா ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள்
ஹாப்பி பர்த் டே ஏ.ஆர்.ரகுமான் சார் )




ஆர்.வி.சரவணன்