சோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
(அருள் மிகு ஐராவதேஸ்வரர் கோவில்)
கும்பகோணத்திற்கு மிக அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது தாராசுரம் என்ற ஊர்.இங்கே வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் நிறைந்த அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்த போது எடுத்த படங்களும்,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களும் உங்களுக்காக
கோவிலின் வெளி தோற்றம்
கோவிலின் நுழைவாயில்
கொடிமரம்
கருவறை கோபுரம்
யானை சிற்பத்துடன் கூடிய படிக்கட்டுகள்
கோவில் விமானம்
கோவிலை சுற்றி பசுமையை நிழலை அள்ளி தந்திருக்கும் மரங்கள்
இந்த கோவிலை இரண்டாம் ராஜராஜன் கட்டினார்
(ஆயிரம் வருடங்களுக்கு முன்)
தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு பேறு பெற அருளிய இறைவன் ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது
இங்கு உள்ள நந்தி பலிபீடம் இதற்கு அமைந்திருக்கும் படிக்கட்டுகளை தட்டினால் ஒலி எழும்பும் விதத்தில் இசை கற்கள் போன்று அமைந்திருக்கிறது
ராமாயண மகாபாரத நிகழ்சிகள் சிவன் பார்வதி கைலாய காட்சி
முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி, முனிவர்கள் தவம் புரியும் காட்சிகள் மண்டப தூண்களில் செதுக்கபட்டிருப்பது பார்க்கும் போது செதுக்கிய சிற்பிகளை பாராட்ட வார்த்தைகள் ஏது
இங்குள்ள மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரங்கள் கொண்ட ஒரு தேர் போன்ற அமைப்பை கொண்டதாகும்
தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் விமானங்கள் போன்றே இதன் விமானமும் அமைக்கபட்டிருக்கிறது
இக் கோவிலின் மூலவர் ஐராவதேஸ்வரர்
அம்பாள் வேத நாயகி (தனி சன்னதி.கோவிலுக்கு வடக்கில் அமைந்திருக்கிறது )
மண்டபத்தில் உள்ள பதினாறு கல் தூண்களில், காணப்படும் சிற்பங்களின் கலை நயம் வியக்க வைக்கும்
நர்த்தன விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர், அகத்தியர், சரப மூர்த்தி, நரசிங்கமூர்த்தி ,தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி,விஷ்ணு துர்க்கை
சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன
இந்த அரிய வரலாற்று பொக்கிஷம், சோழர் காலத்தின் புகழை
இன்றளவும் உலகுக்கு உணர்த்துகிறது
ஆர்.வி. சரவணன்