சனி, மார்ச் 25, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்






கொஞ்சம் சிரிங்க பாஸ்


இந்த  நகைச்சுவை பத்தி என்ன நினைக்கறீங்க பாஸ். நாங்க நினைக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லுனு தானே கேட்கறீங்க. சொல்றேன். இந்த நகைச்சுவை படிக்கிறப்ப நல்லாருக்கு. டிவி ல பார்க்கிறப்ப நல்லாருக்கு. அட சுத்தி இருக்கிறவங்க பேசினால் கூட கேட்க நல்லா தான் இருக்கு ( என்ன சூர்யா சிங்கம் டயலாக் மாதிரி இருக்கு) ஆனால் நாமளே ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்கணும்னா கஷ்டமால்ல இருக்கு.

 நான் கொஞ்சம் சீரியஸ் டைப்.நான் ஜாலியா சிரிச்சு பேசணும்னு நினைக்கிறப்ப , என்னை டென்சன் ஆக்கணும் னே சொந்த காசுல பிளைட் பிடிச்சு வரவனும் இருக்கான். நான் சீரியசா இருக்கிறப்ப அதை பத்தி அலட்டிக்காம, என்னை சுத்தி வந்து ஜாலியா மொக்கை போடறது மட்டுமில்லாம நான் சீரியசா பேசறதுக்கு எல்லாம் கவுன்ட்டர் குடுக்கிறதுக்காக பஸ்ஸை பிடிச்சு விதௌட் ல வரவனும் இருக்கான்.

என்ன தான் உன் பிரச்சனை னு கேட்கறீங்களா சொல்லிடறேன் 
என் நண்பன் ஒருத்தன்  சினிமால நடிக்கணும் சந்தானம் மேத்ஸ் ( அதாங்க கணக்கா) ஆகணும் னு ஆசைப்படறான். டிவி சானல்ல புதுசா நடிக்க வரவங்களுக்கு கேட் திறந்து விடறாங்களாம். பெரிய டைரெக்டர்  சீப் கெஸ்ட்டா வறாரு.   நான் நடிக்கிறதுக்கு நீ காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடு னு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான். அவன் டார்ச்சருக்கு சாம்பிள் வேணுமா. நடு நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டியா னு கேட்கிறான் பாஸ்.இவன் தொல்லை தாங்காம, என் கிட்டே சீரியஸ் சப்ஜெக்ட் இருக்கு வேண்ணா எடுத்துட்டு போனு சொன்னேன். யாருக்கு வேணும் உன் சீரியல் என்று சீரியசா சொல்றான். சீரியஸ்னு நான் சொன்னதை சீரியல்னு  புரிஞ்சுகிட்டான் போலிருக்கு பய புள்ள.  

"டேய் காமெடி சப்ஜெக்ட் எழுத நான் ரொம்ப கஷ்டப்பட்டாகணும்னு சொன்னேன் நல்ல பேரு வேணும்னால் கஷ்டப்பட்டு தான் ஆகணும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும்னு" தத்துவம் பேசறான். நான் சும்மா இல்லாம நம்ம சந்தானம் மாதிரி கவுன்ட்டர் கொடுத்துட்டேன். "அப்ப சர்க்கரை சாப்பிட்டவன் சர்பத் குடிக்கலாமானு"  இதெல்லாம் நல்லா பேசு. எழுத  வரலைன்னு பொய் மட்டும் சொல்லு" அப்படிங்கிறான்.

‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது.  ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் 
மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள். 

இப்படி வார்த்தைல வாலி பால் ஆடற மின்னல் வரிகள் கணேஷ் சார் மாதிரி எழுத முடியுமா ?

பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். 

இப்படி வரிகளில் நிஜத்தை நகைச்சுவைல முக்கி எடுத்து  எழுதற சேட்டைக்காரன் சார் மாதிரி தான் எழுத முடியுமா ?


நீ எழுதலை என்றால் நீ எழுத்தாளன் இல்லை னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பேன்னு சொல்றான். (என்னமோ நான் எழுத ஆரம்பிச்சப்ப ப்ளெக்ஸ் வச்சி வாழ்த்து தெரிவிச்ச மாதிரி )  சரி என் எழுத்தாலே அவன் அவஸ்தை படனும்னு விதி இருக்கு. யாராலே மாற்ற முடியும்னு  எழுத உட்கார்ந்தேன் யோசிச்சதிலே டீ கடைக்காரர் லாபம் பார்த்தது தான் மிச்சம் (டீயா குடிச்சேன் எழுத மூடு வரணும்ல ) சரின்னு ஒரு ஐடியா பண்ணேன் இணையத்துல நகைச்சுவையா எழுதறவங்களை போய் (அவங்க தளத்துல தாங்க) பார்ப்போம் னு முடிவு பண்ணி உட்கார்ந்தேன் 

அடுத்து நண்பர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் தளத்துக்கு போனேன்  அவர் ஒரு வார்த்தையில் டரியல் ஆகி போனதை  படிச்சேன் இதெல்லாம் டூ மச்.  

கல்லாதது உலகளவு னு ஒரு தளம் போனேன் நண்பர்
கலியபெருமாள் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும் னு ஒரு பதிவு எழுதியிருக்கார் கேள்வியிலே போதை கலந்து

அடுத்து நான் போனது மனதில் உறுதி வேண்டும் தளம்  நண்பர் மணிமாறன்
எழுதிய இந்தியண்டா படிச்சப்ப எழுந்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கணும் னு 
தோணுச்சு

அடுத்து கும்மாச்சி யோட தளம். இங்கே சிரிக்க சிந்திக்க 
பதிவை படிச்சேன்.

அடுத்து துளசி கோபால் அவர்களின் துளசி தளம்.  இங்க கொலு பொம்மைக்கு படி வாங்கின கதையை ஜாலியா சொல்லிருக்கார் 

இதெல்லாம் படிச்சதுக்கப்புறம் கொஞ்சம் தெம்பாகி எழுதறதுக்கு பேனா எடுத்துட்டேன். என்னங்க கிளம்பறீங்க. பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க போலிருக்கு. சரி பரவாயில்ல நான் எழுதின ஜோக் ஒன்னு சொல்றேன் கேட்டுட்டு கிளம்புங்க 

"ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு
போனியே ட்ராப் பண்ணிட்டியா"

"அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு

காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா"

சிரிப்பு வரலைனாலும் தலைப்புல சொன்னதுக்காகவாவது சிரிச்சிடுங்க.

ஆர்.வி.சரவணன் 

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியராக இருந்த போது  எழுதியது இந்த பதிவு.
நன்றி சீனா அய்யா, தமிழ்வாசி பிரகாஷ்