வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணை தொறக்கணும் சாமி








கண்ணை தொறக்கணும் சாமி

ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நண்பர்களுடன் வீடு பார்க்க சென்று பேச்சிலருக்கு வீடு கிடையாது என்றவுடன் மனைவி ஊரில் இருப்பதாக  ஒரு பெயரை சொல்லி (பொய் சொல்லி) வாடகைக்கு வந்து விடுவார். அதனால் அவர் படும் இன்னல்களே கதை. நிற்க.

1986 ஆம் வருடம் வெளியான கண்ணை தொறக்கணும் சாமி படத்தில் இது போன்றதொரு காட்சி வருகிறது. சிவகுமாருக்கு வீடு கிடைப்பதற்காக அவரது மனைவி ஊரில் இருக்கிறார் என்ற பொய்யை  நண்பரான சோ சொல்லவே வீடு கிடைத்து விடுகிறது.

வீட்டு ஓனரான மனோரமா உன் பொண்டாட்டி போட்டோ எங்கே என்று கேட்க, சிவகுமார் விழிக்க ஆரம்பிக்கிறார்.  "உன் பொண்டாட்டி போட்டோ காட்டு. இல்லேன்னா வீட்டை காலி பண்ண சொல்லிருவேன்"  என்று கறார் பண்ணவும் வேறு வழியின்றி போட்டோ ஸ்டூடியோ சென்று ஒரு பெண் போட்டோவை கொண்டு வந்து இதுதான் மனைவி என்று சொல்கிறார். அந்தப் பெண் ஜீவிதா. அந்த போட்டோவை சிவகுமார் போட்டோவுடன் சேர்த்து பிரேம் போட்டு மாட்டி வைக்க சொல்கிறார் மனோரமா.

அடுத்த நாள் போட்டோவில் இருந்த ஜீவிதா, பெட்டியுடன் என்னங்க என்ற படி மனைவியாக உள்ளே நுழைகிறார். சிவக்குமாருக்கு திக் என்றாகிறது. அவரை எப்படி சமாளிக்கிறார். ஜீவிதா உண்மையில் யார் ? என்பது நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில், சிவகுமார் வேலைக்கு  சேரும் கம்பெனியில் டெபாசிட் கட்டும் படி சொல்கிறார்கள்.  டெபாசிட்  கட்டும் சிவகுமார் இது எனக்கு எப்ப திரும்ப கிடைக்கும் என்று கேட்க அதற்கு மேனேஜர் சொல்லும் பதில்.

"ஐந்து வருசம் கழிச்சு கிடைக்கும். ஆனா இந்த ஐந்து வருசத்துல நீயா வேலையை விட்டு போனாலும் சரி. நாங்களா அனுப்பினாலும் சரி பணம் கிடைக்காது."

கதை தாசரி நாராயண ராவ். படம் ரிலீசான சமயத்தில் பார்த்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். காரணம் இந்தப்படத்தின் திரைக்கதை வசனம். கே. பாக்யராஜ்.


ஆர்.வி.சரவணன்.

வியாழன், அக்டோபர் 13, 2016

திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை






திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை 

நம் வலைத்தள முகநூல் நண்பர் சே.குமார், அவரது மனசு தளத்தில் சென்ற தீபாவளியின் போது  ஜீவநதி என்ற தலைப்பில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.  கூடவே என்னிடம் இந்த கதையை திரைக்கதை அமைத்து தாருங்களேன் என்றும் சொல்லியிருந்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரைக்கதை வசனம்  (ஷாட் பிரிக்காமல்)  எழுதி கொடுத்ததுடன்  உங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். குமார், தன் மனசு வலைத்தளத்தில் இரு பதிவுகளாக இதை வெளியிட்டிருக்கிறார். நண்பர்கள் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்  எங்கள் இருவரின் விருப்பமும் அதுவே.


மனசு குமார் எழுதிய சிறுகதை ஜீவநதி   யை முதலில் படித்து விடுங்கள் 

அடுத்து திரைக்கதையாக எழுதப்பட்டிருப்பதை படியுங்கள்.

 திரைக்கதை வடிவில் ஜீவநதி

திரைக்கதை வடிவில் ஜீவநதி -2

திரைக்கதை வடிவில் ஜீவநதி -3

நன்றி பரிவை சே.குமார் 


ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, அக்டோபர் 07, 2016

சுயநலம் - குமுதம் ஒரு பக்கக் கதை





சுயநலம் 
(குமுதம் ஒரு பக்கக் கதை )



ராமேஸ்வரம் ரயிலில் ஏறி  தன் சீட்டுக்கு வந்த சேகர் சந்தோசமாய் விசிலடித்தான்.காரணம் இன்று அவனுக்கு லோயர் பர்த் கிடைத்திருந்தது.
எப்போதாவது தான் லோயர் பர்த் கிடைப்பதுண்டு. இன்று கிடைத்திருந்தது.
இருந்தும் சந்தோஷம் உடனே வடிந்தது

சென்ற முறை ஒரு வயதானவர்  அப்பர் பர்த்தில் தன்னால் ஏற முடியாது என்று இவனை ஏற்றி விட்டு விட்டார்.  அது போல் இன்றும் யாரேனும் சீட் கேட்டு வந்தால் ... அவனுக்கு ஒரு யோசனை உதித்தது.

ரயில் கிளம்பிய உடனே படுத்து கொண்டு விட்டான்டி டி ஆரும் வந்து டிக்கெட் செக் செய்து விடவே அவனுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.ரயில் தாம்பரத்தை அடைந்தது. இங்கு தான் கூட்டம் நிறைய ஏறும். எதுக்கு முழிச்சுகிட்டு இருக்கே தூங்குடா என்று தனக்கு தானே அதட்டி கொண்டு கண்களை மூடி கொண்டு விட்டான்

கூட்டம் திமுதிமுவென்று ஏற ஆரம்பித்ததுசில நிமிடங்கள் கழித்து எல்லா குரல்களும் தேய்ந்து போய் ரயிலின் தடக் தடக் மட்டும் கேட்க ஆரம்பித்திருந்தது. கூடவே காற்றுடன் சேர்ந்து மழையும் ஆரம்பித்திருந்தது. எழுந்து ஜன்னல் கண்ணாடியை கீழே இழுக்க ஆரம்பித்தவன் அதிர்ந்தான். அந்த கண்ணாடி கதவையும்  ஷட்டரையும் கீழே இறக்கி விட எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை

பிறகென்ன. எல்லோரும் நன்றாக தூங்கி கொண்டிருக்க... மழை சாரல் ஜன்னல் வழியே உள் நுழைந்து அவன் உடல் முழுதும் நனைக்க, சேகர் மட்டும் குளிரில் வெடவெடத்த படி தூங்காமல் விழித்திருந்தான்.

குமுதம் 13-07-2016 வார இதழில் வெளி வந்த எனது ஒரு பக்க சிறுகதை 
சுயநலம். நன்றி குமுதம் வார இதழ் 


ஆர்.வி.சரவணன்