திரையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பாரு பாரு பட்டணம் பாரு





பாரு பாரு பட்டணம் பாரு 

இணையத்தில் பழைய தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் பார்த்து கொண்டிருக்கையில் மோகனின் திரைப்படம் ஒன்று கண்ணில் தென்பட, இது ரிலீஸ் ஆனப்பவே பார்த்திருக்கோமேனு ஞாபகம் வந்தது. மேலும் இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் கலைமணி. ஆகவே ஆர்வமாய் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.
முதல் காட்சி. ஒரு பார்க்கில் சிறுவர்கள் இருவர் நான் எம்ஜியார் நீ நம்பியார் என்று சொல்லி சண்டையிட்டு கொள்கிறார்கள். அவர்களை விலக்கி விடும் ரிக்‌ஷாக்காரர், எதிரே அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருக்கும் மோகனை கவனிக்கிறார். (நமக்கும் அப்போது தான் நாயகனை அறிமுகம் செய்கிறார்கள்.) அவரிடம் சென்று கேட்கிறார். "ஏன்பா பசங்க அடிச்சுகிட்டிருக்காங்க. தடுக்கிறத விட்டுட்டு புஸ்தகம் படிச்சிட்டிருக்கே" அதற்கு மோகன் சொல்லும் பதிலிலேயே, இந்த கதை எந்த ஜானர் என்பதையும் மோகனின் கேரக்டரையும் சொல்லி விடுகிறார்கள்.
" என்னோட ராசிக்கு இன்னிக்கு யாரோட பிரச்னையிலும் நுழைய கூடாதாம். நுழைஞ்சா ஆபத்தாம். அதனால் தான் தடுக்கல" எஸ். எதுவாக இருந்தாலும் ஜோசியரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்து வரும் கேரக்டர் அவர். வீட்டில் வறுமை இருக்கும் நிலையிலும் கூட, இண்டர்வியூவிற்கு சென்று முதலாளி ராசிக்கும் என் ராசிக்கும் ஒத்து வராது அதனால் வேலையில் சேர முடியாது என்று சொல்பவர்.
இப்படிப்பட்டவரை தான் ஜோசியத்தின் மேல் நம்பிக்கை கிடையாது என்றிருக்கும் பணக்கார வினுசக்ரவர்த்தியின் மகள் ரஞ்சனி காதலிக்கிறார். ஆனால் மோகன் "இன்னும் ரெண்டு வருஷத்துல நான் பணக்காரன் ஆகிடுவேன். நான் ராஜா ஆகிறப்ப எனக்கு ஒரு ராணி தான் வேண்டும். நீ எதற்கு " என்ற படி தட்டி கழிக்கிறார். அப்படி தட்டி கழிப்பவர் எப்படி ஆர்வமாகி ரஞ்சனியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்?. எப்படி திருந்தினார் ? திருத்தியது யார் என்பதை ஜாலியாகவும் கொஞ்சமே கொஞ்சம் எமோசனலாகவும் ரசிக்கும் படி சொல்லியிக்கிறார்கள்.
படத்தில் வினு சக்ரவர்த்தி உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு "எங்கப்பன் முருகன் கொடுத்த 18 ரூபாய் 10 பைசாவோட சென்னைக்கு வந்தேன" என்றபடி படம் முழுக்க அதகளம் செய்ய, ஜோசியக்காரராக வெண்ணிற ஆடை மூர்த்தி கலகலப்பு சேர்க்க, தங்கையாக குயிலி கலங்க வைக்கிறார்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையில் மோகன் திருந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் மட்டும் இடைச்செருகல் போல் இருந்து கொண்டு கதையோடு பொருந்த மறுக்கிறது. இளையராஜா இசையில் நேரந்தான் ஆகுது, யார் தூரிகை தந்த ஓவியம், தென்றல் வரும் பாடல்கள் உற்சாக ராகங்கள். இயக்கம் மனோபாலா. படம் வெளியான ஆண்டு 1986.
இந்தப் படத்துக்கு பாரு பாரு பட்டணம் பாருனு பேர் வச்சிருக்காங்க. பாரு பாரு ஜோசியம் பாருனு வச்சுருக்கலாமே.

ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, ஜூன் 22, 2018

குங்குமச்சிமிழ்





குங்குமச்சிமிழ் 


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம்  திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை சமீபத்தில் வந்தது. டிவியில் இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் என்னனு கேட்கறீங்களா ? மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.

வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.

காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வருகிறது. வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.


நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்றி விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.
அது ஒரு பொற்காலம்.

ஆர்.வி.சரவணன் 


வியாழன், நவம்பர் 23, 2017

அறம்





அறம் 


எல்லாரும் கலந்துகிட்ட ஒரு மீட்டிங், ஸ்டார்ட் ஆகி நடந்துட்டிருக்கிறப்ப லேட்டா வேர்க்க விறுவிறுக்க வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தா எப்படி இருக்கும். அப்படி தான் தோணுது இந்த பதிவு எழுதற நேரத்துல எனக்கு. அதாவது அறம் படம் நான் பார்த்தது சென்ற ஞாயிறு  தான். 


ஒரு கலெக்டரை விசாரணை செய்வதாக ஆரம்பிக்கிறது படம். இதில் ஆடியன்சை ஈர்க்கிற பாயிண்ட் எங்க இருந்து ஆரம்பிக்க போகுது என்ற நினைப்போடு பார்க்க ஆரம்பிக்கையில் நடுவழியில் வண்டி நின்று போய் பெட்ரோலும் இல்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் " பையன் போனை எடுத்தான்னா குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர சொல்லு தாகமாருக்கு" என்று புருசனிடம் சொல்லி கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வார்த்தைக்கு அடுத்த காட்சி அந்த பையனின் அறிமுகம் . எங்கே ? அவன் தண்ணீரில் நீச்சலடிப்பவனாக . அட என்று நிமிர்ந்து உட்காருகையில், "வாங்க நம்ம தண்ணீர் பிரச்னையை அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேசி தீர்வு காணுவோம்" என்பதாக கலெக்டர் மதிவதனியின் என்ட்ரி இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. அதன் பின் ஆழ் துளை கிணறுக்குள் கயிறு இறக்குவது போல் நம் மன ஆழம் தேடி காட்சிகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. ஆழ்துளைக்குள் சிக்கி கொண்ட அந்த சிறுமியின் முகம் மானிட்டரில் முதல் முறை தெரியும் போது தொற்றி கொள்ளும் பரபரப்பு படத்தின் கடைசி வரை நீள்கிறது.

"உன் அத்தை பேசறேம்மா. முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கான் உன் அப்பா. நீ வெளில வந்தோன சாப்பிடலாம் என்ன" அழுத படி சிறுமிக்கு தைரியம் சொல்லும் அந்த பெண்மணியின் வார்த்தைகளுக்கு கண்கள் கலங்கி விடுகிறது.

செய்தி சேனல் விவாத காட்சி ஆங்காங்கே குறுக்கிடுகிறது. வார்த்தைகளை மியூட் செய்த படி அவற்றை காண்பித்திருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் பேசும் யதார்த்தத்தை மீறியா பேசிட போறாங்க. (உதாரணத்திற்கு பழனி பட்டாளத்தின் வார்த்தை பிரயோகம் ஒவ்வொன்றும் ராக்கெட போல் கிளம்பி வருவதை குறிப்பிடலாம்).

படம் முடிந்து வீட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் ஆகியும் கூட ராமச்சந்திரனின் பதறலும், சுனு லட்சுமியின் அழுகையும், பய முகம் காட்டும் அந்த சிறுமியும், மக்களிடம் அதிகாரம் காட்டாத அதிகாரி மதிவதனியும் இன்னும் நிழலாடி கொண்டே இருக்கிறார்கள். சில படங்கள் பார்த்து விட்டு வருகையில் மட்டும் ஒரு நிறைவு கிடைக்கும். அறமும் அத்தகைய நிறைவை கொடுத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்
நயன்தாரா மற்றும்  கோபி நயினார் குழுவினருக்கு 

ஆர் .வி.சரவணன் 

புதன், ஏப்ரல் 05, 2017

மயங்குகிறாள் ஒரு மாது




மயங்குகிறாள் ஒரு மாது

ஒரு புறம் வேடன் ஒரு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்..... என் விருப்ப பாடல்களில் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடலும் உண்டு.

இந்த பாடலின் காட்சியை டிவியில் பார்த்த போது இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. காரணம், இந்த பாடலின் இடையே மேற் சொன்ன வரிகளை சுஜாதா தன் மருண்ட விழிகளை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மாற்றியபடி பாடி கொண்டிருப்பார். கூடவே அவரது கணவரான முத்துராமன் அவரை பின் தொடர்ந்த படி குழப்பமாய் கவனித்து கொண்டிருக்க, விஜயகுமாரும் தேங்காய் சீனிவாசனும் சுஜாதாவை அச்சுறுத்தும் வேடன், நாகமாக காட்டப்படுவார்கள்.

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாடலான சம்சாரம் என்பது வீணை.... பாடல் காட்சியை கவனித்த போது, முத்துராமன் மனைவி சுஜாதா பற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பார். அதை ரசித்து மகிழ வேண்டிய சுஜாதாவோ அங்கே நின்றிருக்கும் விஜயகுமாரையும் தேங்காய் சீனிவாசனையும் பார்த்து மிரண்டு போய் நின்றிருப்பார். தேங்காய் சீனிவாசனின் பார்வையிலிருக்கும் மிரட்டலும், விஜயகுமாரின் பார்வையிலிருக்கும் குற்ற உணர்ச்சியும் ஒரு புதிருக்கு விடை தேட சொல்லும் ஆர்வத்தை நமக்கு தந்து விடுகிறது.


அப்படி என்ன தான் கதை இது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டவன், இந்தப் படத்தின் பெயரை பார்த்து கதை இப்படியானதாக தானிருக்கும் என்று ஓரளவு அனுமானத்திற்கு வத்திருந்தேன். இந்தப்படத்தின் கதை வசனகர்த்தா மறைந்த திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் என்றவுடன் இப் படத்தை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்ததுடன் நேற்று இந்தப் படத்தை பார்த்தும் விட்டேன்.ஓரளவு நான் அனுமானித்த ஒன்லைன் தான் என்றாலும் அதை சில பல திருப்பங்கள் மூலமும், ஒவ்வொரு கேரக்டரின் செயல்பாடுகள் மூலமும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜாதா தான் கதையின் மையமே. மிரட்சியும், தவிப்பும், அன்புமாக படம் முழுக்க கல்பனா கதாபாத்திரமாகி இருக்கிறார். க்ளைமாக்ஸில் வெளிப்படும் முத்துராமனின் குணாதிசயம் வாட் எ கேரக்டர் என்று சொல்ல வைத்து விடுகிறது. வில்லனாக இருந்தாலும் சொல்பேச்சு தவறாத நாணயஸ்தனாக தேங்காய் சீனிவாசன் அட சொல்ல வைக்கிறார். விஜயகுமாரின் கேரக்டரை எங்க கட் பண்ண வேண்டுமோ அங்கே கட் செய்து எந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ சேர்த்து விறுவிறுப்பை தந்திருக்கிறார்கள். முத்துராமனுக்கு அக்காவாக டாக்டராக வரும் எம்.என் ராஜம், தோழியாக வரும் ஜெயலட்சுமி, அன்பான அப்பாவாக கண்டிப்பை குரலில் காட்டாமல் வார்த்தைகளில் காட்டும் அசோகன், என்று சக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் விதம் படத்திற்கு பெரிய பிளஸ்.

வசனத்திற்கு உதாரணமாக ஓரு காட்சியை சொல்கிறேன். சுஜாதாவின் பழைய காதலன் விஜயகுமார் அவருக்கு தன்னால் தொந்தரவு இருக்க கூடாது என்று வேலையை விட்டு செல்ல முயற்சிக்க, கணவன் முத்துராமன் தடுத்து வேலையில் தொடர்ந்து இருக்க வைத்து விடுவார். கணவனின் இந்த முடிவை எதிர்பாராத சுஜாதா தத்தளிக்க, என்னாச்சு என்று முத்துராமன் கேட்பார். அதற்கு சுஜாதா சொல்வார். "தூசி எவ்வளவு துடைச்சாலும் போக மாட்டேங்குதுங்க"
படத்தின் ஆரம்ப காட்சிகளை விட, சுஜாதா பிரச்னையில் சிக்கி கொண்ட பின் தான் சுவாரஸ்யம் வந்து அவரோடு நம்மையும் சேர்த்து மிரள வைக்கிறது.

சில படங்களின் பாடல்கள் கேட்கும் போதோ காட்சிகள் பார்க்கும் போதோ படம் பார்க்கும் ஆர்வம் வரும். அந்த ஆர்வத்துக்கு தீனி போட முடியாத படி சில படங்கள் ஏமாற்றத்தை தந்து விடுவதுண்டு. ஆனால் இந்த படம் நாம் எதிர்பார்த்ததை விட ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
 படம் : மயங்குகிறாள் ஒரு மாது.
படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்....
இசை விஜய பாஸ்கர்
இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
படம் வெளியான ஆண்டு 1975


ஆர்.வி.சரவணன் 


வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணை தொறக்கணும் சாமி








கண்ணை தொறக்கணும் சாமி

ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நண்பர்களுடன் வீடு பார்க்க சென்று பேச்சிலருக்கு வீடு கிடையாது என்றவுடன் மனைவி ஊரில் இருப்பதாக  ஒரு பெயரை சொல்லி (பொய் சொல்லி) வாடகைக்கு வந்து விடுவார். அதனால் அவர் படும் இன்னல்களே கதை. நிற்க.

1986 ஆம் வருடம் வெளியான கண்ணை தொறக்கணும் சாமி படத்தில் இது போன்றதொரு காட்சி வருகிறது. சிவகுமாருக்கு வீடு கிடைப்பதற்காக அவரது மனைவி ஊரில் இருக்கிறார் என்ற பொய்யை  நண்பரான சோ சொல்லவே வீடு கிடைத்து விடுகிறது.

வீட்டு ஓனரான மனோரமா உன் பொண்டாட்டி போட்டோ எங்கே என்று கேட்க, சிவகுமார் விழிக்க ஆரம்பிக்கிறார்.  "உன் பொண்டாட்டி போட்டோ காட்டு. இல்லேன்னா வீட்டை காலி பண்ண சொல்லிருவேன்"  என்று கறார் பண்ணவும் வேறு வழியின்றி போட்டோ ஸ்டூடியோ சென்று ஒரு பெண் போட்டோவை கொண்டு வந்து இதுதான் மனைவி என்று சொல்கிறார். அந்தப் பெண் ஜீவிதா. அந்த போட்டோவை சிவகுமார் போட்டோவுடன் சேர்த்து பிரேம் போட்டு மாட்டி வைக்க சொல்கிறார் மனோரமா.

அடுத்த நாள் போட்டோவில் இருந்த ஜீவிதா, பெட்டியுடன் என்னங்க என்ற படி மனைவியாக உள்ளே நுழைகிறார். சிவக்குமாருக்கு திக் என்றாகிறது. அவரை எப்படி சமாளிக்கிறார். ஜீவிதா உண்மையில் யார் ? என்பது நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில், சிவகுமார் வேலைக்கு  சேரும் கம்பெனியில் டெபாசிட் கட்டும் படி சொல்கிறார்கள்.  டெபாசிட்  கட்டும் சிவகுமார் இது எனக்கு எப்ப திரும்ப கிடைக்கும் என்று கேட்க அதற்கு மேனேஜர் சொல்லும் பதில்.

"ஐந்து வருசம் கழிச்சு கிடைக்கும். ஆனா இந்த ஐந்து வருசத்துல நீயா வேலையை விட்டு போனாலும் சரி. நாங்களா அனுப்பினாலும் சரி பணம் கிடைக்காது."

கதை தாசரி நாராயண ராவ். படம் ரிலீசான சமயத்தில் பார்த்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். காரணம் இந்தப்படத்தின் திரைக்கதை வசனம். கே. பாக்யராஜ்.


ஆர்.வி.சரவணன்.

செவ்வாய், ஜூன் 21, 2016

உறியடி






உறியடி 

ரீலீசாகும் வரை ஒரு படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமலிருந்து , படம் வெளியான பின் அந்தப் படம் நல்லாருக்குப்பா என்கிற பாசிட்டிவ் ரிவ்யூக்கள் தொடர்ந்து வருகையில் எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துடணும் என்ற ஆர்வம் வருமே. அது சமீபத்தில் உறியடி திரைப்படம் மூலமாக நிகழ்ந்தது.

சென்ற வாரம் நான், அரசன், கோவை ஆவி மூவரும் சந்தித்த போது படம் பார்க்கலாமே என்றவுடன் எங்களது முதல் சாய்ஸ் இந்தப்படமாக தான் இருந்த்து. அடுத்த நிமிடமே எஸ்கேப்புக்கு எஸ்கேப் ஆகி விட்டோம்.

ஹீரோயின், காமெடி, கமர்சியல் விசயங்கள், இப்படி ஏதுமில்லாமல் சாதியால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்களை பற்றிய கதைக்களனை மையமாக கொண்டு புதுமுகங்களுடன் (ஓரிருவர் பழைய முகங்கள் ) இயக்குனர் விஜய் குமார் தந்திருக்கும் ஆக்‌ஷன் ஆச்சரியம். நால்வரில் ஒருவராக அவரே நடித்துமிருக்கிறார்.

கல்லூரி என்றால் அங்கே காதலும் உண்டு தானே. ஆரம்பத்தில் சக மாணவியுடன் காதல் என்பது கதைக்கு தேவையில்லாத ஒன்று என்று தோன்றினாலும் கதை நகர அந்த கேரக்டரும் ஒரு காரணம் என்பதால் அது அவசியமாகிறது.
அனாவசியம் என்றால் அது மாணவர்கள் அடிக்கடி குடிப்பதாக காட்டியிருப்பது. கொஞ்சம் அவர்கள் படிப்பதாகவும் காட்டியிருக்கலாம்.


படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது இடைவேளையின் போது தாபாவில் நடைபெறும் சண்டை காட்சியும் ஹோட்டலில் நடைபெறும் சண்டை காட்சியும் தான். இந்த இரண்டு காட்சிகளும், அந்த காட்சிகளை நோக்கிய படத்தின் கதை நகர்வும் படத்தை அலேக்காக தூக்கி நிறுத்தி விடுகிறது. அந்த இரண்டு காட்சியிலும் நம்மை அரங்கத்திலிருத்து தூக்கி சென்று சம்பவ இடத்திலேயே நாற்காலி போட்டு அமர வைத்தது போல் ஏற்படும் ஓர் பிரமையை, படம் முடிந்து வெளியேறி வந்த பிறகும் தத் தகிட தத் தகிட என்று நமக்குள் தக்க வைத்திருப்பதன் மூலம் இயக்குனர் விஜய்குமார் சினிமாவிற்கான தன் வரவை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, ஜனவரி 22, 2016

ரஜினி முருகன்


ரஜினி முருகன் 


கிராமத்து கமர்சியல் படங்களுக்குனு ஒரு பார்முலா இருக்கு. நாயகன் நாயகி, அவர்களுக்கு ஒரு காதல், இந்த இருவர் வீடுகளும் ஏதோ ஜென்ம பகை போன்று முறுக்கிக் கொண்டு திரிவது, நாயகன் கூடவே படம் முழுக்க நகைச்சு வைக்க ஒரு நண்பன் கேரக்டர், நாயகி இல்லன்னா சொத்து இதற்கு ஆசைப்படும் வில்லன், பஞ்சாயத்து இதெல்லாத்தையும் ஹிட்டான பாடல்களோடு சேர்த்து சரியான மிக்சிங்ல கொடுத்துட்டா படம் ஓகே ஆகிடும். இதை தான் ரஜினி முருகனில் கலர்புல்லாக தந்திருக்கிறார் டைரக்டர் பொன்ராம்.
சிவ கார்த்திகேயன் தான் வரும் முதல் காட்சியின் ஆரவாரத்தை கடைசி காட்சி வரை தக்க வச்சிக்கிறார். ( இப்ப தான் வீட்ல கோபிச்சிட்டு வந்திருக்கேன் உடனே வந்தா நல்லாருக்காது நைட் சாப்பிட வந்துடறேன் இந்த டயலாக்கில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஒரு சாம்பிள்) அவரும் சூரியும் அடிக்கும் ரகளையில் தியேட்டர் சும்மா கலகலக்குது. (இத்தனைக்கும் நைட் ஷோ). கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லனும்னா சிவ கார்த்திகேயன் அவரை முதல் தடவை பார்த்தவுடன் திரும்ப எப்ப வெளில வருவார்னு வாசல்ல மணிக்கணக்கா காத்துட்டே இருப்பாரு. அவர் அப்படி காத்திருக்கிறதுல ஒண்ணும் தப்பில்லைனு தான் சொல்ல தோணுது.

கீர்த்தியின் ரஜினி மேனரிச அப்பா கேரக்டர், டீக்கடை வாழைப்பழ கலாட்டா, ஆடி காரை கொண்டு செய்யும் அதகளம் ராஜ்கண்ணுவுடன் கூட்டணி போட்டு ஆடும் நாடகம், சண்டைல கிழியாத சட்டை எங்கருக்குனு சீன் போடற சமுத்திரகனி, பஞ்சாயத்து கலாட்டாக்கள்னு படம் முழுக்க நாம ரசிக்கிறதுக்கு நிறைய விசயங்கள் வச்சிருக்காங்க.

இருந்தாலும் பாராமுகமான நாயகி எதனால் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க, சமுத்திரகனி அப்பப்ப சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு வைக்கிற செக் நல்லா இருந்தாலும் அதுக்கு பதிலடி கொடுக்கற காட்சியமைப்பு இல்லாம திணறும் கதை, அப்பா கேரக்டர் கோபத்தை விட வலுவான காரணம் என்ன? இப்படி குறைகளையும் வச்சிருக்காங்க.

எது எப்படியானாலும் நம்பி வந்த்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நம்மை புலம்ப வைக்காமல் சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆர்.வி.சரவணன் 

புதன், ஜூன் 10, 2015

காக்கா முட்டை





காக்கா முட்டை


புதுமுகங்கள் நடித்த படத்தின் காட்சிகளிடையே பிரபலமான ஒரு ஹீரோ தலை காட்டுகிறார்  எனும் போது,  திரையரங்கில் விசில் சத்தமும் கை தட்டலும் கேட்கும் என்பது  நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வு தான். படத்தில்  சிம்பு வரும் காட்சியில்  கிடைக்கும் கைதட்டல்களுக்கு நிகராக படத்தில் வரும் பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு  கை தட்டல் கிடைக்கிறது என்றால்  அது ஒரு மேஜிக் தானே. இந்த மேஜிக் நிகழ்ந்திருப்பது  விருதுகளை அள்ளியிருக்கும் காக்கா முட்டை திரைபடத்தில். இதை நிகழ்த்தியிருப்பவர் இந்த படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மணிகண்டன். 




சிறு வயதில் அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த சிறார்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும். அது நிராசையாகி விடுவதும் இயல்பே.வாழ்வின் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த பெரிய காக்கா முட்டை சின்ன காக்கா முட்டை என்ற பட்டபெயர்கள் கொண்ட 
 சிறுவர்கள்  இருவரின் ஆசை கனவு இதெல்லாம் ஒரு பீட்சா வாங்கி சாப்பிடுவது தான். கணவனை சிறையிலிருந்து வெளி கொணரும் கவலையிலும் ஏழ்மையிலும் தாய் அவர்களின்  ஆசையை நிராகரிக்க, பாட்டி அவர்களின் ஆசையை நிறைவேற்ற இயலாமையால் இருக்க, இதை அடைய சிறுவர்கள் முயற்சிக்கும் விதங்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதை அடைய விடாத வண்ணம் செய்வதும், அவர்களின் ஆசை நிராசையாகும் போது அதை பற்றி கவலை கொள்ளாத  சமூகம், அவர்களுக்கு நேர்ந்த அநியாயத்தை  வைத்தே பணமாக்க முயலும் அவலத்தை தோலுரித்து காட்டுகிறார் இயக்குனர். 



சிறுவர்கள் ரமேஷ்,விக்னேஷ் இருவரும்  இதில் நடித்திருக்கிறார்கள்  
என்றே சொல்ல முடியவில்லை.அவர்களின் உற்சாகம், கோபம், வறுமையை மீறி கண்களில் வெளிப்படும் நம்பிக்கை வெளிச்சம், அழுகை என்ற
 அவர்களின் பரிமாணங்கள் அசத்தல்.படம் முடிந்த பின்னும் நம் மன கண்ணில் இருவரும் ஓடியாடுகிறர்கள் என்றால் அது ஒன்றும் மிகையல்ல.

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்  ஐஸ்வர்யா. அசல் குப்பத்து பெண்ணாக இரு பிள்ளைகளின் தாயாக குடுமப பாரத்தை சுமக்கும் கதாபாத்திரம்.
 பிள்ளைகளை  அதட்டி கொண்டே அவர்களின் குறும்பை ரசிக்கும் விதம் அழகு.  உன் பிள்ளைகளை அடிச்சிட்டாங்க என்று  பெண் சொல்ல  "ரொம்ப அடிச்சிட்டாங்களா" என்ற படி இயலாமை  முகத்தில் மின்ன கண்களில் கண்ணீருடன்  அவர்  கேட்கும் இடம் ஒரு உதாரணம். குட் வெரி குட் ஐஸ்வர்யா என்று சொல்ல வைத்து விடுகிறார்.

வசனங்களில் அப்ளாஸ் வாங்கும் இடங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான ஒன்று. சிட்டி செண்டர் முன்பு  சிறுவர்கள் இருவரும் வந்து நிற்க,   உள்ளே விட மாட்டாங்களே. இங்க என்ன அவமானத்தை சந்திக்க போறாங்களோ தெரியலியே என்ற படி நாம் நகத்தை கடிக்க முயல, நம் எண்ணத்தை திரையில் சின்னவன் "சத்தியமா உள்ளே விட மாட்டாங்கடா  நம்மை" என்று அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் பார்த்த 
படி சொல்லும் போது   தியேட்டரில்   கை தட்டல் மயம் தான்.


அந்த சிறுவர்களின் பாட்டி அவர்களின் பீட்சா  ஆசை கண்டு வீட்டிலேயே 
நான் செய்து தருகிறேன் என்று பீட்ஸா வுக்கு  மெனக்கெட தோசை கல் திரையில் தெரிய ஆரம்பித்து பின்  அவர் செய்து முடிக்கும் வரை  திரையரங்கில் வரும் கை தட்டல் அந்த காட்சி முடியும் போது பாட்டி சொல்லும்  ஒரு சொல்லுக்கு இரு மடங்காகிறது. அந்த பாராட்டு வசனத்துக்கு மட்டுமல்ல பாட்டிக்கும் சேர்த்து தான்.





படத்தில் அவ்வப்போது  உலகின் நடப்பு வாழ்க்கையை பற்றி இடித்துரைக்கும் விதமாய் வசனங்களிலும் காட்சிகளிலும் அழகாக வெளிபட்டிருப்பது அசத்தல். "ரேசன்ல அரிசி இல்லையாம்  டிவி தான் கொடுத்தாங்க " 
(வசனம் )டிவி தொகுப்பாளினி கேமரா சகிதம் அந்த சிறுவர்களை பற்றி உலகுக்கே சொல்லி கொண்டிருக்க இதை ஏதும் அறியாமல் அவர்கள் வேடிக்கை பார்த்த படி கடந்து போகும் இடம் (காட்சி ).


 பணம் இல்லாதவர்கள் பாதிக்கபட்டால் அந்த பாதிப்பை,  பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சுற்றி வரும் உலகம் எப்படி தனக்கு சாதகமாக்கி கொண்டு பணம் சம்பாதிக்க  முயல்கிறது என்பதை பூசணிக்காய் உடைப்பது போன்று  போட்டு உடைத்திருக்கிறது காக்கா முட்டை.


இந்த படம் எந்தளவு  ரீச் ஆகியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். சொல்கிறேன் .வழக்கமாக என் அலுவலக  நண்பர்கள் புது படங்கள் வ வருகையில் படம் எப்படி இருக்கிறது என்பதை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை படம் நல்லாருக்காமே  சார் என்று ஆச்சரியத்தை எனக்கு சொல்கிறார்கள். 

சிறுவர்கள் இருவரும் எந்த பீட்சாவை  சாப்பிட ஆசைபட்டார்களோ அது மிகுந்த மரியாதையுடன் அவர்கள் எதிரே வைக்கப்பட அதை அவர்கள் இருவரும் ஆசையாக சாப்பிட வாய் திறக்கையில் நம் தொண்டைக்குள் 
ஏதோ ஒரு பரவசம் வந்து அடைத்து கொண்டது போல் ஒரு பீலிங் ஏற்படுகிறது பாருங்கள். அந்த பரவச உணர்வு தான் இப் படத்தின் வெற்றி.



தமிழ் திரையுலகில் தொடர வேண்டும், இத்தகைய படங்களுக்கான முயற்சிகளும் அந்த முயற்சிகளுக்கான வெற்றியும். 


ஆர்.வி.சரவணன் 


வியாழன், ஏப்ரல் 23, 2015

ஓ காதல் கண்மணி


ஓ காதல் கண்மணி 


"என்ன படம் பார்த்தே ?"

"கண்மணி"

"பிடிச்சிருக்கா ?"

"ம். முதல் பாதி"

"ஏன் இரண்டாம் பாதி"

"ஒரு முடிவெடுக்க, ரொம்ப தான் பேசறாங்க"

"என்ன முடிவு"

"கல்யாணம் பண்ணிக்கலாமா னு பேசிக்கிறாங்க"

"அப்ப முதல் பாதியில"

"கல்யாணம் பண்ணிக்கணுமானு யோசிக்கிறாங்க"

"பிளஸ் என்ன அதை சொல்லு"

"கண்ணுக்குள்ளேயே நிக்கிற நித்யா,துள்ளலாய் துல்கர், மறக்க முடியாத லீலா சாம்சன், மறுக்கவே தோணாத கணபதி சாரி பிரகாஷ் ராஜ், சர்ச்ல ரெண்டு பேரும் சந்திச்சு பேசிக்கிற சீன், வசனங்கள்"

"மைனஸ்"

"முந்தைய படங்களின் (கேரக்டர்களின்) ஞாபகங்கள் , பரபரப்பில்லாத கிளைமாக்ஸ்"

"பி.சி ஸ்ரீராம்"

"மழையில் நனைய விட்டிருக்கார். காபி ஷாப் சீன அழகுபடுத்தியிருக்கார்"

"ரகுமான்"

"(மெண்டல்) மனதில் நம நம'

"ஆமா நீ ஏன் ரெண்டு வார்த்தைல பதில் சொல்லிட்டு இருக்கே ?"

"மணி படம் பார்த்த எபெக்ட்"

"அதுக்குன்னு படத்தோட டைட்டில கூட பாதியா சொல்வியா"

"ஓகே வை மட்டும் தானே விட்டேன்"

"அப்ப படம் உனக்கு ஓகே இல்லியா"

"ஓகே கண்மணி னு சொல்ல வச்சிருக்கணும்."


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

மெட்ராஸ்



என்ன நீ அதிகமா லீவ் போடறே என்று முதலாளி கேள்வி கேட்பார் ஆசிரியர் கேள்வி கேட்பார். அதை போன்றதொரு ஸ்டைலில் ப்ளாக் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு என்று நண்பர்கள்  கரந்தை ஜெயக்குமார், மனசு குமார், நிஜாம் பக்கம் நிஜாமுதீன் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கே காபி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அலுவலக வேலை ஒரு பக்கம் நெருக்கியடிக்க கூடவே எனது ஆசையான குறும்படம் எடுக்கும் ஆர்வமும் என்னை நெருக்க, வேலைகள் தொடர்ந்ததால் என்னால் வலை பக்கம் வர முடியவில்லை. அதற்காக பெஞ்ச் மேல ஏற்றி நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்துடாதீங்க இதோ வந்துட்டேன். 





மெட்ராஸ் 

சுவரை வைத்து கொண்டு சித்திரம் வரைவாங்க. இங்கே வட சென்னையின் வாழ்க்கையை மனிதர்களை ஒரு சுவற்றில் பதிவு செய்திருக்கிறார் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். அந்த சுவர் அதிகார அரிதாரம் பூசி கொண்டு வஞ்சகத்தை தன்னுள் மறைத்து கொண்டு அச்சத்தை பார்ப்பவர்களிடம் விதைத்து கொண்டிருப்பதை ஒரு கேரக்டராகவே உருவாக்கி இருக்கிறார்.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் சுவர் தான் கதைக்கு மூலமே. இந்த சுவரை யார் பற்றுவது என்ற போட்டியில் சுவரை ஆக்கிரமித்த ஒரு கட்சியின் லோக்கல் அரசியல்வாதி  அதை விட மறுப்பதும் அவரிடமிருந்து சுவரை பறிக்க அல்லது பிடுங்க மற்றொரு கட்சி ஆட்கள் நினைப்பதும் இரு கட்சி ஆட்களும் அதையே தன் வேத வாக்காய் கௌரவ பிரச்சனையாய் எடுத்து அடித்து கொள்வதன் மூலம் சில உயிர்களை பலி கொடுக்கிறார்கள். இரு கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது தான் அவர்கள் சாயம் பொது மக்களிடம் வெளிபட்டு அவர்களால் வெளுக்கபடுகிறது. சுவரை பொது மக்களே எடுத்து கொண்டு அரசியல் சாயத்தை துடைத்து  கல்வி  பூசுகிறார்கள். (புகட்டுகிறார்கள்) 

இந்த படத்தின் திரைக்கதை சில பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து கொண்டுள்ளது. உதாரனமாக ஒரு காட்சியை எடுத்து கொள்வோம். ஹீரோ கார்த்தி தன் காதலியுடன் ரொமாண்டிக் மூடுடன் ஹோட்டலுக்கு வருகிறார். அதே ஹோட்டலில் இரண்டாக பிரிந்து நின்றிருந்த கொண்டிருந்த அதிகார மையங்களான வில்லன் குரூப் ஒன்று சேர்ந்து அறைக்குள் பேசி கொண்டிருகிறது. அங்கே பேச்சு வார்த்தையும் இங்கே ததும்பி வழியும் காதலும்  நடந்து கொண்டிருக்க இரண்டையும் மாறி மாறி இயக்குனர் காட்டும் போது, வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ் படங்களின் காட்சிகள் போல் கார்த்தியும் வில்லனும் சந்திக்க போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், வேறொரு வகையில் அந்த காட்சியை புத்திசாலிதனமாக அமைத்திருப்பார் இயக்குனர். இது போல் பல காட்சிகளில் தன் திரைக்கதையால் நம்மை படத்தில் ஒன்ற வைத்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கூட இப்படி தான் நாம் எதிர்பாராத வண்ணம் அதிரடி காண்பித்திருப்பார்.

கார்த்தியிடம்  மெட்ராஸ் மொழி அவரிடம் கஷ்டப்பட்டு
வெளிபட்டாலும் ஹீரோயிசம் இல்லாத நடிகராக இதில் தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கோபத்தில் அடித்து விட்டு பின் பயப்படுவதும் காதலுக்காக உருகுவதும் பெற்றோரிடம் எகிறுவதும்  
ரசிக்க முடிகிறது. அவ என்னை வேணாம் னுட்டாடா என்று 
சரக்கடித்து விட்டு அவர் புலம்பி அழும் இடம் செம. 

ஹீரோயின் கேத்தரின் வரும் முதல் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தம் சொல்லி விடுகிறது. அவர் தந்திருக்கும் ஈர்ப்பை. (படம் வந்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் சென்று பார்த்தேன்) தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க அவர் வந்து நிற்கும் காட்சியிலும் என்னை கல்யாணம் பண்ணிகரியா என்று கேட்பதிலும், கைகளை மறைத்து கொண்டு கிஸ் கொடுப்பதும் என்று கார்த்தியுடனான காட்சிகள் கலகலப்பு.



அடுத்து அன்பு கதாபாத்திரத்தில் கலையரசனும்  மேரி கேரக்டரில் வரும் ரித்விகாவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் அந்த அன்னியோன்யம் கோபம் ஆகா. அன்பு புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று எகிறுவதும் மேரியின் பார்வையில் கிறங்கி போய் பேசுவதும் என்று அதகளபடுத்த, அன்பு இறந்த பின் மேரி அழும் அழுகையும் சாக்கடை தண்ணீரை எடுத்து கொண்டு வந்து உக்ரத்துடன் வில்லன் முகத்தில் வீசும் போது காட்டும் முக பாவம் வாரே வா என்று சொல்ல வைத்து விடுகிறது.

பாடல்களில் ஆகாயத்தில் தீப்பிடிக்க பாடல் காட்சியின் விசுவல் ரசனை ரகம். பின்னணி இசையில் நம்மை சுண்டி இழுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவு முரளி. அடுக்கு மாடி குடியிருப்பின் இண்டு இடுக்கு விடாமல் அனைத்து பகுதிகளிலும் படம் பார்க்கும் நம்மை விட்டு விடாமல் இழுத்த சென்ற படி சுற்றி வந்திருக்கிறது. அதிலும் அந்த சுவர் நிறைய முறை பல ஆங்கிள்களில் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தத்தை தருகிறது என்று சொல்லலாம் 

கார்த்தியின் அம்மா அப்பா வெத்தலைக்கு காசு கேட்கும் பாட்டி, ஜானி மற்ற நடிகர்கள் என்று ஒவ்வொரு கேரக்டரும் நம்மை ஈர்க்க வைப்பதில் போட்டி போட்டு கொண்டு ஸ்கோர் செய்கிறார்கள். 







கிளைமாக்ஸ் சண்டையில் வட சென்னையின் இருட்டில் நடப்பதை ரசித்தாலும் வில்லனை பழிவாங்குவதை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டாம் அதையும் அங்கேயே செய்திருக்கலாம்.மாரி கேரக்டரின் போக்கு ஆரம்பத்திலேயே புரிபட்டு விடுவது, அன்பு கேரக்டரின் உயரம் குறைவு, இடைவேளை வரை உள்ள யதார்த்தம் இடைவேளைக்கு பின் இல்லாதது கார்த்தி அன்பின் நட்பு நெருக்கதை இன்னும் காட்சிபடுத்தி இருந்திருக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் அதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல என்று அவற்றை பின்னுக்கு தள்ளி இயக்குனரின் திரைக்கதையும் விசுவல் நேர்த்தியும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறது.

FINAL TOUCH 


கிளைமாக்ஸ் க்கு முன் கார்த்தி சுவரின் முன்னே நிற்கும் போது 
அந்த சுவற்றில் அவரது நிழல் படிந்து சுவர் அளவுக்கு உயர்வது போல் அமைத்திருப்பார்கள். இதில் நடித்திருப்பவர்களுடன் இயக்குனரும் உயர பெருமளவில் உதவியிருக்கிறது இந்த மெட்ராஸ் 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜூலை 20, 2014

சதுரங்க வேட்டை





சதுரங்க வேட்டை

செய்திதாள்களில் நாம் பார்க்கும் ஏமாற்று நிகழ்வுகளை எல்லாம் அழகாக தொகுத்து சுவாரஸ்ய திரைக்கதையாக்கியிருப்பதன் மூலம், அறிமுக இயக்குனர் வினோத் ஆடியிருக்கும் வேட்டை இது. (தயாரிப்பு நடிகர் இயக்குனர் மனோபாலா)

கதாநாயகன் ஏமாற்றும் வித்தைகளையும்,(அந்த எம்.எல்.எம் பிசினெஸ் பக்கா) அதற்கு அவர் போடும் ஸ்கெட்ச்களையும் நாவலில் வரும் அத்தியாயங்கள் போல் தலைப்பு கொடுத்து (உதாரணம் பணம் அச்சடிக்கப்பட்டஆயுதம்) திரையில் நன்றாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

கதாநாயகன் நடராஜ் இந்த கேரக்டருக்கு நன்றாக பொருந்துகிறார்.  
அந்த ரைஸ் புல்லிங் ஏமாற்றுதலில் அவரது வேடமும் நடிப்பும் வில்லன் சொல்வதை போல் கச்சிதம். உதாரணமாக அவர் நீதிமன்றத்திலிருந்து பேசி கொண்டே இறங்கி வரும் காட்சியில் (நடிப்பில்) மேலேறுகிறார் என்று சொல்லலாம்.




கதாநாயகி இஷாரா அறிமுக காட்சியில் உள் நுழையும் போது பரிதாபப்படும் ஜீவனாக இருக்கிறதே ஹீரோ இவரையும் ஏமாற்றி விட போகிறாரோ என்ற தவிப்பை தரும் கேரக்டர். ஹீரோ அவரை விட்டு சென்ற பின் அவர் நிலை என்ன என்பதை பற்றி காட்டியிருக்கலாம். 
அவர் ஹீரோவுக்கு உதவுவதை கூட காதலித்த பாவத்திற்காக செய்வதாக 
காட்டி பின் ஹீரோ திருந்தி விட்டார் என்ற உண்மை நிலை தெரிய 
வரும் போது அவர் மேல் இம்ப்ரெஸ் ஆவதாக காட்டி அவர் மனப்பான்மையை தெளிவுபடுத்தி இருக்கலாம்

“காசில்லாதவன் உடம்பை வச்சி கத்துக்கோ காசிருக்கிறவன் 
உடம்பை வைத்தியம் செய்து சம்பாதிச்சிக்கோ இப்படியான வசனங்கள் ஒவ்வௌன்றும் நெத்தி(யில் சுத்தியை வச்சி நச் என்று இறக்குவது போல்)அடி.

பாம்பு இளைக்க கூடாது என்பதற்காக இளவரசு வேண்டுமானால் மௌன விரதம் இருக்கலாம். அதுக்காக அவரை (நடிப்பை) பற்றி பேசாமல் நம்மால் மௌனமாக இருக்க முடியாது. இப்படியெல்லாம ஏமாறுவீங்க என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசரடிக்கிறார்.

நடராஜின் முன்கதையை ஓவியங்களால் சொல்லியிருப்பது, சுத்த தமிழில் பேசும் வில்லன் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டே வானத்து நிலவை ரசிக்கும் அவரது கேரக்டர் நம்மால் ரசிக்க முடிகிறது. அந்த தாடி வில்லன் எப்படியும் இஷாராவை காப்பாற்றுவான் என்று தெரிந்து விடுவதால் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்க முடியவில்லை. அவனது இளகிய மனசை காட்டாமலே இருந்து கடைசியில் வெளிப்படுவதாய் அமைத்திருக்கலாம். இருந்தும் பணத்தை அவன் காலடியில் நடராஜ் கொட்டி எடுத்துக்கோ எனும் போது அவர் சொல்லும் டயலாக் கை தட்டல் ரகம். நடராஜ் பற்றிய வழக்கு கோர்ட்டில் ஆரம்பிக்கும் போது அது  தலைப்பு செய்தியாவதும் வழக்கு விசாரணை தொடர தொடர அதன் செய்திகள் எட்டாம் பக்கத்துக்கு பெட்டி செய்தி போல் ஷிப்ட் ஆவது போல் காட்டியிருப்பது நச். 

ரைஸ் புல்லிங் விசயத்தில் தொழிலதிபர் ஏமாறுவது கூட ஓகே 
ஆனால் அதிகாரி ஏமாறுவது ஏற்புடையதாக இல்லை. நடு இரவில் நகைக் டைக்கு முன்பு பணத்தாசையில் கூடும் மக்கள் கூட்டத்தை 
நம்ப முடிந்தாலும் போலீஸ் நம்புவதை ஏற்க முடியவில்லை.

சீன் ரோல்டனின் பின்னணி இசையும், பச்சை வயல்களுக்கு நடுவே இருக்கும் அந்த குடிசையை காண்பிக்கும் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. 

பணத்தாசையை துறந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம். அடுத்தவரின் 
காசை சூறையாடும் நோக்கம்  இல்லாமலிருந்தால்  ஏமாற்றும் எண்ணத்திலிருந்தும் தப்பிக்கலாம் இப்படி எல்லாம் சொன்னால் 
போங்கய்யா நீ என்ன சொல்றது என்று சொல்லி விடுவார்கள். அதையே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து எடுத்து கொண்டு சுவாரஸ்யமாய் விழிப்புணர்ச்சி தரும் விதத்தில் தந்திருப்பதால் படம் பார்க்க தியேட்டருக்கு படையெடுக்கலாம்.



FINAL TOUCH 

ஏமாறுபவர்கள் உண்டு எனில் ஏமாற்றுகாரர்களும் (அதற்கு தக்க 
விதத்தில் )வித விதமாய் உண்டு. ஏமாறுபவர்களின் புத்திக்கு ஏற்ப 
ஏமாற்றுகாரர்களின் புத்தியும் செயல்படும் என்பதை பொடனியில்
அடித்து சொல்கிறது படம் 


ஆர்.வி.சரவணன் 

புதன், ஜூலை 09, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்





கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்


முதலில் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடன் என் அறிமுகம் பற்றி பார்ப்போம். ஆனந்த விகடனில் ப்ளாக் எழுதுபவர்களை பற்றி ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். அதில் முதலில் இடம் பெற்றவர் கேபிள் சங்கர். அதை படித்த போது தான் அவரை பற்றி முதன் முதலாக தெரிந்து கொண்டேன். 

முதல் முறை பதிவர் திருவிழா 2012 இல் தான் அவரை நான் சந்திக்க நேர்ந்தது.அவர் நீங்க என்றவாறு  கேள்விகுறியுடன் எனை பார்க்க, நான் இப்படி பதிலளித்தேன்.நீங்க இப்ப இருக்கிற இடத்துக்கு வர முயற்சி பண்ணிட்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதன் என்று.இப்படி சொன்னவுடன் கேள்வி அகன்று போய் அவர் முகத்தில் சந்தோஷம் மின்னியது. என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னதுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள் என்றும் சொன்னார். அடுத்து புத்தக கண் காட்சியில்  
சந்தித்த போது அவரது ப்ளாக் தொடர்ந்து படித்து வருவதையும் முகநூளில் தொடர்வதையும்  சொன்னேன். அவர் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது எனக்கு பிடித்த ஒன்று. 

எனக்கு எப்போதுமே ஒருவரின் அறிமுகம் கிடைத்தால்  அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முயற்சிப்பேன். அந்த வகையில் அவர் எழுதிய மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா வியாபாரம்,கொத்து பரோட்டா  
புத்தகங்களை வாங்கினேன்.சினிமா வியாபாரம் புத்தகம் படித்தேன்.
அதில் சினிமா வியாபாரம் பற்றி கரைத்து (குடித்திருக்கிறார் ) கொடுத்திருக்கிறார் 

மீண்டும் ஒரு காதல் கதையில் தனக்கு படம் இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிவித்திருப்பார்.

கொத்து பரோட்டா உண்மையாகவே கொத்தி போட்ட பரோட்டா தான் அதை படித்த பின் பரோட்டாவுக்கு (பதிவுக்கு) ரசிகன் ஆனேன்.

எனது நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்த போது அவர் பட வேலையில் பிஸி என்பதால் நேரமிருப்பின் அவசியம் கலந்து கொள்கிறேன் என்று வாழ்த்தி  பதில் அனுப்பினார்.




 அவர் தொட்டால் தொடரும் படம் தொடங்கியது முதல் படம் 
பற்றிய செய்திகளை தொடர்ந்து ஆர்வமுடன் கவனித்து வந்தேன். 
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  பற்றிய அறிவிப்பு  வந்த போது 
எனக்கு விழாவுக்கு செல்லும்  ஆர்வம் வந்தது.இதற்கு ஏதேனும் அனுமதி சீட்டு உண்டா எப்படி எங்கு  யாரை கேட்பது என்ற யோசித்ததில் அவரையே கேட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து  அவருக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.  அவர் தாராளமா வாங்க  என்று  பதில் அனுப்பினார்.




பதிவுலக நண்பர்கள் சிவகுமார்  மற்றும் பாலகணேஷ் இருவரையும் தொடர்பு கொண்ட போது காலை ஏழரை மணிக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். நான் வந்து கொண்டிருக்கையில் ஸ்கூல் பையன் சரவணன் எங்கே சார் இருக்கீங்க என்று போன் அடித்தார்.பத்து  நிமிடத்தில் உங்கள் அருகே வந்து விடுவேன் என்றேன் . 8 மணிக்கு சத்யம் தியேட்டர் வந்தேன். ஸ்கூல் பையன் சரவணன் மற்றும் கே.ஆர்.பி செந்தில் சிவகுமார் பாலகணேஷ் உடன் பேசி கொண்டிருந்த போது சுரேகா சார் வந்தார். எல்லோரும் ஒரே வரிசையில் அமர்ந்தோம்.



 விழா (தாமதமாக) தொடங்கியது.


விழாவில் கலந்து கொண்ட கே.ஆர் பேசுகையில்
ஐந்து  படங்கள் தயாரித்தும் தயாரிப்பாளர் முகத்தில் தெரியம் புன்னகை சந்தோசமான விஷயம் இது தொடர வேண்டும் என்று பாராட்டினார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது தானே படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேபிள் சங்கரிடம் பேசிய போது அவர் விவரித்ததில் 
படம் தயாரிக்காமல் தப்பித்து விட்டதை குறிப்பிட்டார்.

இயக்குனர் பத்ரி பேசும் போது கேபிள் சங்கர் நிறைய விசயங்களை தொட்டிருக்கிறார்.அவற்றை தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்பதுடன்,தனது  அடுத்த படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கேபிள் சங்கர் நடித்திருப்பது பற்றி குறிப்பிட்டார் (தகவல் வெளியிட்டார்) 

தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் பேசும் போது  விழா 8.30 மணிக்கு என்பதால் அப்போதே வந்து விட்டதை பற்றி குறிப்பிட்டு இது விழாக்களில் சகஜம் தான்  என்று குறிப்பிட்டார் 

இசையமைப்பாளர் பி.சி.சிவன் நிறைய பேரை மேடையில் குறிப்பிட்டு
பேசினார்.சீக்கிரம் பேசி முடிங்க என்ற வேண்டுகோள் மீறி பேசினாலும் 
அவர் வார்த்தைகளில் நெகிழ்ச்சி எட்டி பார்த்தது.  

கதாநாயகி அருந்ததி பாஸு பாடல் பற்றி குறிப்பிட்டு கேபிள் சங்கரை பாராட்டினார்

ஹீரோ தமன் ரொம்ப சிம்பிளாக மேடையோரம் கேபிள் சங்கருடன் பேசியவாறு இருந்தார். எனக்கு அவரை அங்கே பார்க்கும் போது, இந்த படம் ஹிட் ஆகிய பின் அவரே நினைத்தால் கூட அப்படி ஓரமாய் நிற்க முடியுமா நிற்க தான் விடுவார்களா என்று பரந்த விரிந்த என் கற்பனை யை இழுத்து நிறுத்தினேன். ( கற்பனை தான் எனினும் உண்மையாகட்டுமே) 

இசையமைப்பளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது தனது அட்ட கத்தி சாங் நன்றாக இருக்குனு சொன்னவர் பீட்சா பட சாங் நல்லாயில்ல என்று என்னிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல் கூடவே ஆன் லைனிலும் அதை போட்டுட்டார் என்றதோடு இந்த படத்தை அவரே நல்லா இருக்குனு எழுதற அளவுக்கு படம்   இருக்கும் என்றார் 




கே.ஆர். இசை தட்டை வெளியிட ஏ .எம் . ரத்னம் பெற்று கொண்டார். விழாவில் முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. 

விழா முடிந்த பின் நாங்கள் எழுந்து கிளம்ப தயாரானோம். கேபிள் சங்கர்  அவர்களை பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல நினைத்தேன்.இருந்தும் அவர் மேடையில் பிஸி யாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கஷ்டமாகவும்  இருந்தது.இருந்தும் விழாவுக்கு வந்து விட்டு ஒரு வாழ்த்து  கூட சொல்லாமல் செல்லவும்  மனது இடம் கொடுக்கவில்லை. 
எனவே சரி என்று மேடைக்கு அருகே சென்று கீழே நின்ற படி அவரை அணுகினேன். கை குலுக்கி வாழ்த்து  சொன்னேன். கூடவே அவருடன் நின்றிருந்த ஹீரோ தமனுக்கும் கை குலுக்கி வாழ்த்து சொன்னேன். சத்யம் தியேட்டருக்கு இது வரை படம் பார்க்க மட்டுமே சென்றிருக்கிறேன். ஒரு ஆடியோ விழாவுக்கென்று சென்றது இது தான் முதல் முறை  

படம் பற்றிய தகவல்கள் 

இந்த படத்தின் கதாநாயகன் தமன்,கதாநாயகி அருந்ததி, ஹலோ எப்.எம் பாலாஜி, வின்சென்ட் அசோகன் போன்றாரும் நடித்திருக்கும் இந்த படம் 
ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்.பி.சி.சிவன் இசை அமைக்க நா .முத்துக்குமார் 
மற்றும் கார்க்கி பாவா கேபிள் சங்கர் பாடல்கள் எழுத விஜய்ஆர்ம்ஸ்டராங்க் 
ஒளிப்பதிவில்   FCS கிரியேசன்ஸ் சார்பில் துவார் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். கேபிள் சங்கர் எழுதி இயக்கியிருக்கிறார்.பாடல்கள் டைகர் ஆடியோ வெளியிட்டிருக்கிறது.





தொட்டால் தொடரும் படத்தின் ட்ரைலர்  http://t.co/k8Tocf3AIx


பாடல்கள் பற்றிய என் பார்வை சில வரிகளில் 

பாஸு பாஸு 

இப் பாடல் இணையத்தில் ஆடியோ வெளியீட்டிற்கு முன்னரே வெளியாகி முன்னணியில் இருக்கிறது. இந்த பாடல் பற்றி நான் முகநூலில் குறிப்பிட்டிருந்ததை இங்கே தருகிறேன் 



இயக்குனர் Cable Sankar ன் தொட்டால் தொடரும் பட பாடலான யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு பாடல் சிவனின் இசையை தொட்டு கொண்டு கார்க்கி பாவா மற்றும் கேபிள் சங்கரின் வரிகளில் நாட்டின் அவலங்களை விளாசியிருக்கிறது. ஒரு வரி கேட்டவுடன் அடுத்த வரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது. உதாரணத்திற்க்கு ஆரம்ப வரியையே எடுத்து கொள்வோமே. யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு என்று சாடலுடன் ஆரம்பமாகி, எல்லார்க்கும் வேலை வெட்டி இருக்குதாம்பா என்ற சலிப்புடன் அடுத்த வரிக்கு தாவுகிறது. எப்படி ? வேலைக்கு லீவு விட்டால் இரக்கம் வருமா பாஸு பாஸு என்ற வரிகள்  நக்கலுடன் கெஞ்சலையும்  குழைத்து கொள்கிறது. இப்படியான வரிகள் தான் பாடலெங்கும் சமுதாய அவலத்தை தொட்டு பாடல் முழுக்க தொடர்கிறது.பாடலை கேட்டு முடித்த பின் பாடலின் இடையே நான்கு பேர் கோரஸ் பாடும் ஹோ ஹோ என்பது போல் நம்மையும் சொல்ல வைக்கிறது என்றால் அது மிகையல்ல. தொட்டால் தொடரும் படத்தின் பீவரை ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த பாடல் படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல ஒப்பனிங்.


பெண்ணே பெண்ணே 

எனக்கு மேலோடி சாங் எப்போதுமே ரொம்ப பிடிக்கும் உதாரணமாக ரஜினி ஷங்கர் படங்களில் ஏதாவதொரு மெலடி சாங் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் பட ஆடியோ வெளி வரும் போது இதை கவனிப்பேன். இந்த படத்தில் மனதை மயக்கும் மெலடிக்காக ஆர்வமாய் காத்திருக்க,
பெண்ணே பெண்ணே என்ற இந்த மெலடி  பாடல் ஏனிந்த மயக்கம் 
என்ற கேள்வியுடன் என் இப்போதைய ஹம்மிங்காக இருக்கிறது.  

யாருடா மச்சான் 

இந்த பாடலில் ஒலிக்கும் குரல்களின் இனிமை எனை கவர்ந்தது. இப் பாடலில் ஒரு வரி வருகிறது. உன்னை ஒரு முறை பார்த்தால் ஒரு நாள் ஆயுள் கிடைக்கும் என்று. இந்த பாடல் கேட்கும் போது மீண்டும் ஒரு முறை கேட்கும் ஆர்வம் நமக்கு போனசாக கிடைக்கும்.

பூ போல பூ போல  

இந்த பாடல் கொஞ்சம் பாஸ்ட் ஆக இருந்தாலும் இதில் வரும் சரணங்களின் ராகம் எனக்கு பிடித்திருக்கிறது.  

kiss of the fate 

இசையமைப்பாளர் பாடியுள்ள இரண்டு நிமிட பாடல் இது 


நல்லதொரு விமர்சகராக ஹிட் அடித்த  கேபிள் தன் முதல் படமான இதிலும் ஹிட் கொடுக்க வேண்டும்.  எவ்வளவு உயரம் சென்றாலும் அவரது  சிம்பிளாக பழகும் இந்த தன்மையும் தொடர வேண்டும்.

FINAL PUNCH 

சொல்றது எல்லாம் சொல்லிட்டே இன்னும்  என்ன இருக்கு னு கேட்றீங்களா சொல்றேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும் போது  வீடியோ ஷாப் நடத்தி கொண்டிருந்த ராம்கோபால் வர்மா படங்கள் பார்த்து கற்று கொண்டு இன்று பெரிய இயக்குனர் ஆகியிருக்கிறார்  என்றும் கே.ஆர்  பேசும் போது  ஏற்கனவே இவர் பெயரில் ஒரு பெரிய இயக்குனர் சங்கர் இருக்கிறார் என்றும் மேற்கோள் காட்டி அது போல் இவர் வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்கள்.  

இனி வர போகும் புது இயக்குனர்களுக்கு உதாரணமாக யாரையேனும் குறிப்பிட வேண்டும், மேற்கோள் காட்ட வேண்டும் என்றால்  கேபிள் சங்கரை குறிப்பிட வேண்டும்  என்று ஒரு நண்பராக விரும்புகிறேன். வாழ்த்துகிறேன் 

 படங்கள் சத்யம் அரங்கில் நான் க்ளிக்கியது 

ஆர்.வி.சரவணன் 

புதன், மே 28, 2014

கோச்சடையான் ஒரு பார்வை




கோச்சடையான் ஒரு பார்வை 

கோச்சடையான் அனிமேசன்  படமாக  உருவாகிறது என்ற போது ரஜினி ரசிகனுக்கு ஒரு சுவாரசியம் வந்தது. அதுவும் தலைவர்  நலமான பின் வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக ஆரம்பித்தது. இருந்தும் படம் வெளி 
வர  தாமதமாகவே டென்சனில் நகம் கடிக்க ஆரம்பித்தான். ஆடியோ ரீலீஸ் டென்சனை குறைத்தாலும், அடுத்து வந்த ட்ரைலர்  அவ்வளவாக 
நம்பிக்கை ஊட்டவில்லை. அதற்காக  அவன் கலங்கவில்லை இருந்தும் 
கேலியும் கிண்டலும்  அவனை சுற்றலில் விட்டிருந்தன.மௌனமாக அனைத்தையும் கிரகித்து கொண்டு மிகுந்த பொறுமையுடன் 
காத்திருந்தான். 

இப் படத்தில்  சூப்பர் ஸ்டார் சொல்லும், "தண்ணீரே ஆனாலும் அது 
பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் சல்லடையில் அள்ளலாம்" 
என்ற வார்த்தை அவனுக்கு மெய்யானது. கோச்சடையான் மூலம் ரஜினி ரசிகன் காத்திருந்ததற்கு பலனாய், உற்சாகத்தை  வட்டியும் முதலுமாக பெற்று கொண்டு விட்டான் 

ஒரு படத்துக்கு மிக பெரிய எதிரியே அதிகமாக அதன் மேல் கொள்ளும் எதிர்பார்ப்பு  தான். அந்த படம் சரியாக வந்திருந்தாலும் கூட, அதையும் 

தாண்டி நிற்கும் எதிர்பார்ப்பு  படத்தை டேமேஜ் செய்து விடும் வாய்ப்பிருக்கிறது. இது அதிக அளவு விளம்பரம் செய்யப்படும் படங்களுக்கு மட்டும் இல்லாமல் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர் என்ற புதிய 
பிரபலமான கூட்டணி சேரும் போது கூட எதிர்பார்ப்பு எகிறி விடும் வாய்ப்பிருக்கிறது. சூப்பர் ஸ்டாரை  பொறுத்தவரை அவர் 
நின்றால் செய்தி நடந்தால் செய்தி  (அவர் எது செய்தாலும் ஆதரிப்போரும் உண்டு எதிர்ப்போரும் உண்டு) என்ற நிலையில் அவரது படங்களுக்கு எப்போதும் உச்சகட்ட  எதிர்பார்ப்பு உண்டு.அதில் கோச்சடையான் இன்னும் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகனை தலை கிறுகிறுக்க வைத்து விட்டது 

கிண்டலும் கேலியும் டிராபிக் ஜாம் போல் ஆகி விட்டாலும், சீறி பாயும் குதிரையில் எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் என்றவாறு எதிர்மறை விமர்சனங்களின் மேல் ராஜ பாட்டை போட்டு கொண்டு தலைவர் வருகையில்,
 எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளி வருவதில் தாமதம் இதெல்லாம் படத்தை எதிர்பார்ப்பில்லாமல் செய்து விட்டிருந்தாலும்
அந்த மைனஸ் இங்கே பிளஸ் ஆகி போனது. விளைவு தியேட்டர்களில் கோச்சடையான் ஆட்சி.




 டைட்டிலை 3Dயில் பார்க்க நன்றாக இருக்கிறது.  படைகள் பின் தொடர பாய்ந்து வரும் குதிரையின் முகம் கீழே இறங்க அறிமுகமாகும் 
ரஜினி எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் 
நாமும் என்று பாடிய படி அறிமுகமாகிறார். அனிமேசன் என்பதால் கேரக்டர்களுக்குள் ஒன்ற கொஞ்ச நேரம் ஆகிறது. தளபதியாய் களிங்கபுரி நாட்டின் பதவி ஏற்ற ராணா தந்திரமாக  கோட்டைபட்டினம் வந்து சேர்ந்து சரத்குமாருடன் நண்பா என்று கை கோர்ப்பதும் கூடவே இளவரசி மீதும் 
காதல் பார்வை கோர்ப்பதும் ,என்று ராணா செய்யும் அதிரடிகள் ஏன் 
எதற்காக என்ற கேள்விகளை எழுப்புகிறது. மன்னனை கொல்ல 
முயற்சிக்கும் போது  சிறையில் அடைபடுகிறான்.இடைவேளைக்கு 
முன் எழுந்த  கேள்விகளுக்கெல்லாம் பின் பாதியில்
சுவாரஸ்யமான திரைக்கதையில்  பதில் தருகிறார்கள்.
கோச்சடையான் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் செம விறுவிறுப்பு 


கோச்சடையானாக வரும் ரஜினி முகத்தில் தோன்றும்
அந்த தெய்வீகமான அமைதி  சண்டையில் வெளிப்படும் வீரம், ராணா ரஜினியிடம் வெளிப்படும் குறும்பு அதிரடியாய்  கத்தியை உருவும் லாவகம் என்று கேரக்டர் வடிவமைப்புடன் முக வடிவமைப்பும்  
அசத்தலாக  இருக்கிறது.ரஜினியின் அந்த காந்த குரல் இது அனிமேசன் தானே என்ற எண்ணத்தை ஓரமாக ஒதுங்கி போ என்று  சொல்ல 
வைத்து விட்டு தன்னுடன் ஒன்றி  விட  சொல்கிறது  

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்,கோச்சடையானுக்கு தண்டனை நிறைவேற்ற படும் போது மகன் வந்து அப்பா நீங்க உங்க கடமையை முடிச்சுட்டீங்களா என்று கேட்க, இல்லப்பா என்று சொன்னவுடன் நான் நிறைவேத்தறேன் அப்பா என்று கூறி அவன் 
அப்பாவை முத்தமிடும் போது பார்ப்பவர்கள் கண்கள் கலங்கி போகும்  
அளவு படத்துடன் ஒன்ற முடிகிறது 

வசனங்கள் அவருக்கென்று தனியாக  அமைந்து விடுவது ஆச்சரியம் தான். அவர் பேசும் ஒவ்வௌரு வசனமும் வாள் வீச்சு போல் தான்"வேஷம் என்று வந்து விட்டால் பகலென்ன இரவென்ன,  நாடகத்தை நடத்தியது நீங்கள்  முடித்து வைக்க போவது நான்" "வாய்ப்புகள் தானே அமையாது.நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும் " என்று தொடரும்  வசனங்கள்
பார்வையாளருக்கு இணையாக கை தட்டல்களையும் தியேட்டரில் முண்டியடிக்க வைக்கிறது.  

அடுத்து இதே போல் முக வடிவமைப்பில் ஈர்ப்பவர்கள்  நாசர்,சோபனா, மற்றும் ஆதி.அதிலும் நாசர் முகபாவத்தில் கொண்டு வரபட்டிருக்கும் நயவஞ்சகம் மற்றும் வெறுப்பு பாராட்டதக்கது.
திரு .நாகேஷ் அவர்களை உடல்மொழி மற்றும் குரலில் உயிர்ப்பித்து மரியாதை செய்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட கலைஞன் அவர் என்று 
மனது மீண்டும் சிலாகிக்கிறது.

ஜாக்கிசெராப் சரத்குமார் ருக்மணி என்ற கேரக்டர்களின் முக அமைப்பை 

கூட விட்டு விடலாம்.ஆனால் தீபிகா படத்தின் ஹீரோயின் எனும் போது ரஜினிக்கு நிகராக அவரையும் அனிமேசனில் கொண்டு வந்திருக்க வேண்டும். இதனால் தீபிகா ரஜினி மேல் கொள்ளும் காதலில் நம்மால் ஒன்ற முடியவில்லை. 

இருவருக்கும் வரும்  டூயட் பாடல் காட்சியும்  நடனமும் வெகு அழகு.
இடைவேளைக்கு பின் வரும் அந்த சோக பாடல்  தேவை தானா. ஏனெனில் (பாடல் காட்சியும் தீபிகா நடனமும் நன்றாக இருப்பினும்)
பரபரப்பான சாலையில் இடர்படும் ஸ்பீட் ப்ரேகர் போல் ஆகி விடுகிறது 

ரஜினி தீபிகா மோதும் சண்டை காட்சி,  கப்பல் சண்டை, கிளைமாக்ஸ் போர்க்கள காட்சிகள்,ருத்ர தண்டவ நடனம் இதெல்லாம் அனிமேசனில் சிறப்பு.

ராணா  அதிரடியானவர் எனும் போது கோட்டை பட்டினம் வந்தவுடன் மன்னரை போட்டு தள்ள வேண்டியது தானே.  மறைந்திருந்து தாக்க வேண்டிய அவசியம் என்ன. அண்ணன் சேனா வை பற்றி ஒரு முறை விசாரிப்பதோடு விட்டு விடுகிறார் ஏன் அண்ணனை தேட முயற்சி மேற் கொள்ளவில்லை. தேடி கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு காட்சி யாவது  வைத்திருக்கலாமே. கேரக்டர்களின் நடை மற்றும் கண்களில் தேவையான உயிர்ப்பு இல்லாதது இதெல்லாம் இன்னும் கவனம் எடுத்து மெனக்கெட்டிருக்க வேண்டிய அம்சங்கள்.

கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை வசனம் என்ற மேடையில்  
ஏ .ஆர்.ரகுமான் என்ற குடையின் கீழ் சூப்பர் ஸ்டாரை (தான் ஒரு 
ரசிகையாக இருந்து) கம்பீரமாய் உலவ விட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் செய்திருக்கும் இந்த மோஷன் கேப்சரிங் அனிமேஷன் 
முயற்சிக்கு பாராட்டுக்கள் 





நான் 25 வருடங்களுக்கு முன்  கும்பகோணம் பரணிகா தியேட்டரில் ராஜாதிராஜா படத்தை ரீலீஸ் ஆனஅன்று பார்த்தேன். அதற்கு பின் 
இத்தனை வருடங்களாக மற்ற  படங்கள் அனைத்தையும்  சென்னையில் 
தான் பார்த்திருக்கிறேன். இப்போது கோச்சடையான் அங்கே தான் 2D யில் பார்த்தேன்.அடுத்து 3D  சத்யம் தியேட்டரில் பார்த்தேன். இரு முறை பார்க்கும் போதும் படம் முடிந்த பின்னும், படத்தின் மேக்கிங்  பற்றி காட்டும் போது மக்கள் அமர்ந்து அதை முழுக்க பார்த்து வீட்டு தான் நகர்கிறார்கள் 

FINAL PUNCH 

மற்ற படங்களோடு ஒப்பிடுவது எல்லாம் அனாவசியம். 
படம் முழுக்க மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான ஒரு 
இந்திய படம் (இனி வர போகும் அனிமேசன் படங்களுக்கு ஒரு ஆரம்பத்தை தந்திருக்கிறது ) என்ற வகையில் இந்த கோச்சடையான் திரைப்படம் 
அவசியமான (முக்கியமான) ஒன்று 

ஆர்.வி.சரவணன்