டிவியில் ஒரு நாள் இரவு கழுகு படம் ( எந்த விளம்பரமுமின்றி ). இந்த படம் இது வரை பார்த்ததில்லை. பார்க்காம இருந்த படங்களை டைம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு.அதனால் படம் பார்க்க அமர்ந்து விட்டேன். பார்த்தவுடன் எழுதிடணும் னு தோணுச்சு எழுதிட்டேன். ஆனால் பாருங்க பழைய படத்தை பத்தி இப்ப பதிவு தேவையா என்று எழுதியதை அப்படியே ஓரமா வச்சிட்டேன். இப்ப எடுத்து பார்க்கிறப்ப நல்லாருக்கிற மாதிரி தோணுச்சு உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்களேன்
நரபலி கொடுக்கும் சாமியார் ஒருவரை அவரது கும்பலை சூப்பர் ஸ்டார் ரஜினி பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார் என்பதே கதை. தலைவர் ரஜினி இதில் ஜாலி, காதல் ,ஹீரோயிசம், என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார் என்பதை சொல்வது சூரியனுக்கு டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான் (இத எங்கியோ படிச்சேன்)
ரஜினிக்கு ஜோடி ரதி. இருவரின் ஆரம்பகட்ட காதல் மோதல் காட்சிகள் நல்ல கலகலப்பு.வி.கே.ராமசாமியிடம் ரஜினி முதல் நாள் ஒரு லவ் லெட்டர் கொடுத்து அவரது
பெண்ணிடம் கொடுக்க சொல்வதும் , மறுநாள் வேறொரு பெண்ணுக்கு அது என்று திரும்ப வாங்கி கொள்வதும் கலாட்டா.
இந்த படத்தில் கவனிக்க வேண்டிய ஒரு டயலாக் என்ன தெரியுமா
போனில் ராமசாமி" உன் பேர் என்ன" என்று கேட்கும் போது ரஜினி "கமல்ஹாசன்" என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் "என்ன அவர் பேர் சொல்றே" என்று சீரியசாக "கமல் என் பிரெண்ட் தான் நான் சொல்லிக்கிறேன் விடு" என்று ரஜினி கூலாக சொல்ல, "இவர் பெரிய ரஜினிகாந்த்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் பதில் கொடுப்பார்
மூட நம்பிக்கை யுடன் சாமியார் தான் தெய்வம் என்று இருக்கும் தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு அண்ணனாக வருகிறார். வனிதா சுட்டி பெண்ணாய் வந்து ரஜினி ரதிக்கு உதவி செய்கிறார். அவர் நரபலி கொடுக்கப்பட்ட மறுநாள் போலிஸ் வந்து விசாரிக்கும் போது அப்படி ஒரு பெண்ணே ஊரில் கிடையாது எனும் போது கதையில் திகில் ஆரம்பிக்கிறது
சங்கிலி முருகன் தான் சாமியார். நரபலி கொடுக்கும் காட்சியில் முகமூடி அணிந்து
வரும் அவர் கண்கள் கொஞ்சம் திகிலை கிள்ளப்புகிறது. வனிதா நரபலி
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம்
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம்
சங்கிலி முருகனுக்கு உதவியாளராக சுருளிராஜன் வருவது சீரியஸ் குறைக்க உதவும் ரிலாக்ஸ் என்றாலும், டெரர் சங்கிலி முருகனுக்கு ஏற்றவாறு வில்லத்தனம் கொண்ட இன்னொரு கேரக்டரையும் போட்டிருக்கலாம். ஏனெனில் சாமியார் அநியாயங்களை கண்டுபிடித்து எழுத வந்திருக்கும் பத்திரிகையாளர் சோ வை அவர் மிரட்டி பணிய வைப்பது காமெடிக்கு ஓகே ஆனால் த்ரில்லர் கதையின் டெம்போ வை கொஞ்சம் குறைய வைக்கிறது. ரதியையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வந்து ரஜினி வில்லனை தேடுவது போலில்லாமல் ரதியும், ரஜினியின் அண்ணன் மகளும் சங்கிலி முருகனிடம் சிக்கி கொண்டு விட அவர்கள் இருக்கிறார்களா பலியாகி விட்டார்களா என்று தெரியாமல் ரஜினி ஆக்ரோசமாய் தேடுவது போல் அமைத்திருந்தால் இன்னும் நகம் கடிக்கும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும்
நரபலியை பார்த்ததினால் ரஜினி அன் கோவை அவர்கள் துரத்த அவர்கள் பஸ்சுடன் தப்பிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் கடைசியில் பஸ்ஸை அவர்கள் தீப்பந்தத்துடன் துரத்த ரஜினி அவர்களுக்குள் பஸ் சை செலுத்தி மீண்டு வரும் காட்சி நன்றாக இருக்கிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பூவனத்திலே,பொன்னோவியம்,
தேன் என்றாலும் தேனில் ஊறிய பலா போன்றது காதல் என்னும் கோயில் பாடல். ஒரு அருமையான காதல் மேலோடி என்றே சொல்லலாம் இந்த பாடல் ஏற்கனவே நான் கேட்டிருந்தாலும் இந்த படத்தோடு பார்க்கையில் எனக்கு இப்போது இந்த பாடல் favourite
சாங் ஆகி விட்டது அடிக்கடி ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த படத்தில் வரும் பஸ் வடிவமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது உள்ளேயே பாத்ரூம் கிச்சன் படுக்கை அறை பைக் வைக்க இடம் என்று சூப்பர் ஆக இருக்கிறது இது இப்போது
அதிசயமல்ல தான் ஆனால் 1981 ஆம் வருடம் அது புதுமை தானே. எது எப்படி இருப்பினும் தலைவர் ரஜினி படமாதலால் அவரது ஆடல் பாடல் ஸ்டைல் மற்றும் சண்டைகளுடன்
நம்மை ஈர்த்து விடுகிறது
FINAL PUNCH
மூட நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் ஒரு படம் அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட தேவை தான் என்பதை இந்த படம் உணர்த்தினாலும் இது அந்த காலத்திலேயே வந்திருப்பது தான் மிகுந்த ஆச்சரியமான ஒன்று .
ஆர்.வி.சரவணன்