சனி, செப்டம்பர் 07, 2013

பதிவர் திருவிழா 2013 ஒரு பார்வை






பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை 

இதை பத்தி எல்லாரும் தான் எழுதுவாங்களே நாம புதுசா என்னத்தை 
எழுதிட போறோம்னு நினைச்சேன். ஆனால் அரசன் கண்டிப்பா 
எழுதுங்க சார் என்றார்.  மேலும் முக நூலில் ஒரு வாரத்திற்கு எல்லாரும் 
இதை பத்தி எழுதுவாங்க என்ற பேச்சு வந்த போது  நண்பர் நாஞ்சில் மனோ (எனக்கு இது வரை அறிமுகமில்லை இருந்தும் நண்பருக்கு  
நண்பர்  எனக்கும் நண்பர் தானே )  சொன்னதை படிக்க நேர்ந்தது.



உங்களுக்கு நண்பர்கள், நட்பு, அன்பு பற்றி தெரியலையோ, முகமறியா நண்பர்களை நேரில் பார்க்கும் பரவசம் இருதயத்தின் இன்பம் புரியலையொன்னு நினைக்கிறேன்.

பதிவர் சந்திப்பு பற்றி வரும் பதிவுகளை கிண்டல் செய்யவேணாம் பிளீஸ்... அவரவர் பதிவர் சந்திப்பின் அன்பினை சொல்ல விடுங்கள்.


 
என்று சொல்லியிருந்தார். சரி பதிவர் சந்திப்பை பற்றி படிக்க எல்லாரும் விருப்பமுடன் இருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற  ஆர்வம் வந்து  எழுதிட்டேன். (வேலை பளு மற்றும் நெட் சென்டர் சென்று பதிவு எழுதுவதால்  பதிவு  கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு)

இந்த (அவசர கால)  இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக 
சென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது 
இது.இவ் வரிகள் வார்த்தை அலங்காரத்திற்காக  சொல்லப்பட்டதல்ல.
நான் எப்போதுமே எந்த ஒரு சிறு நிகழ்வானாலும் அதை ஒரு தனி அழகியலுடன் தள்ளி நின்று ரசிப்பதுண்டு. அப்படி ரசித்ததை தான் 
இப்படி குறிப்பிடுகிறேன்


சனியன்று காலை  நண்பர் ராஜ பாட்டை ராஜா "சென்னை மண்ணில் நான்" என்று முக நூலில் ஸ்டேடஸ் போட ,அந்த அதிகாலை தூக்க கலக்கத்திலும் நான் பதிலுக்கு "வெல்கம் ராஜா" என்று போட்டேன். அடுத்து அவர் "எங்க இருக்கீங்க எப்ப வருவீங்க" என்று பதிலிட நான் "மாலை வருகிறேன்" என்று தெரிவித்தேன்.(அரசன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் சார் சனி மாலையே வந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்) 

மாலை ஹோட்டலுக்கு வந்த போது செல்வின்,பிரபாகரன், ராஜா,
தனபாலன் சார், நக்கீரன் சார் வெற்றிவேல் ,சதீஷ் செல்லதுரை, 
ஆரூர் முனா செந்தில்,ரூபக் ராம் என்று பதிவுலக தோழமைகளை சந்தித்தேன்


செந்திலிடம் நான் சரவணன் என்ற போது தெரியும் சார் என்று  
தோளில் அனைத்து வரவேற்றார். பின் ரூம் நம்பர் சொன்னதுடன்
மட்டுமில்லாமல் அந்த ரூமுக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால், சென்ற வருடம் நான் எடுத்திருந்த அவரது போட்டோவை முகநூலில் வெளியிட்டிருந்தேன் பார்த்து விட்டு நானே பார்க்காத என் போட்டோ நன்றி சரவணன் என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தை தான் இப்போதைய திருவிழாவில் நண்பரிடம் கேமரா வாங்கி கொண்டு வந்து படம் எடுக்கும் ஆர்வத்தை எனக்கு தந்தது

பத்து மணிக்கு மேலாகி விடவே, தனபாலன் சார் திருப்பூரிலிருந்து 
ஜோதிஜி வந்து கொண்டிருப்பதாகவும் எப்படி அவரை அழைத்து வருவது  என்று கேட்க, நான் சென்று அழைத்து வருகிறேன் என்று 
சொல்லி விட்டு பேருந்து நிறுத்தம் சென்று அழைத்து வந்தேன். 
இப்போது தான் ஜோதிஜி அறிமுகம் என்பதால் என்னை பற்றி 
முழுதும் அவர் கேட்டறிந்தார்

காலையிலேயே எனக்கு காய்ச்சல் வந்து மாத்திரை எடுத்து கொண்டு 
தான் வந்திருந்தேன்.இருந்தும் இரவு எனக்கு மீண்டும்  காய்ச்சல் எட்டி 
பார்க்க  ஏதடா வம்பா போச்சு இது  நம்மை முடங்க வைத்து விடுமோ 
என்று கலவரமாகி உடனே பார்மசி சென்று மாத்திரை வாங்கி போட்டு கொண்டு அதை விரட்டி அடித்தேன்.

காலையில் நண்பர் சதீஷ் சங்கவி, சேலம் தேவா மற்றும் கோகுலத்தில் சூரியன் வெங்கட் (இவரது சுவாரஸ்யமான எழுத்துக்களை முக நூலில் 
படித்து ரசித்தேன் ) அழைத்து வந்து அறிமுகபடுத்தினார். அவர்களிடம் 
சில நிமிடங்கள் பேசி விட்டு ஜோதிஜி,தனபாலன்
,நான்  மூவரும் கிளம்பினோம்

நாங்கள் அரங்கத்திற்கு வரும் போது தலை கலைந்து  விட்டதால் அதை பார்க்கிங்கில் நின்று சரி செய்து கொண்டோம். யாராவது இதை போட்டோ எடுத்து கலாய்க்க போறாங்க சார் என்று சிரித்து கொண்டே நான் 
சொன்னேன்

உள்ளே நுழையும் போது கோவை நேரம் ஜீவா வரவேற்று நில்லுங்கள் 
என்று சொல்லி போட்டோ எடுத்தார் (சென்ற வருடம் வேட்டி சட்டையில் வந்திருந்தவர் இந்த வருடம் டீ சர்ட் பேன்ட்)

சென்ற வருடம் வருண பகவான் பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்.இந்த வருடமும் வருவார் என்று நான் நினைத்திருக்க மாறாக சூரியன் வந்து 
கலந்து கொண்டார். அவரது ஆர்வம் வியர்வை மழையில் எங்கள் 
எல்லாரையும் நனைய வைத்து விட்டது (ஒரு வேலை இந்த 
வருடம் நான் கலந்து கொள்கிறேன் என்று  இவர் சொல்லி 
விட்டதால் அவர்  வரவில்லை போலிருக்கிறது)

பால கணேஷ் சார், கண்ணா உன் புத்தகமும் வெளியாகி யிருக்க வேண்டியது. இந்த திருவிழாவில் இருந்தாலும் பரவாயில்லை. 
விரைவில் அசத்திடலாம்  என்று என்னை உற்சாகமூட்டினார்

புலவர் அய்யா,சென்னை பித்தன் அவர்களை அருகில் சென்று வணங்கி 
நலம் விசாரித்தேன்

சேட்டைக்காரன் அவர்களிடம் பேசும் போது சமீபத்தில் அவர் எழுதிய பதிவை குறிப்பிட்டு பேசினேன்.சென்ற வருடம் அவரை பற்றி நான் குறிப்பிடும் போது, "உட்கார்ந்து யோசிப்போம் ல என்பது  அவரது தளத்தில் இருக்கும் கேப்சன் வரிகள். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் அப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு எழுதுபவராக தெரியவில்லை " என்று எழுதியிருந்தேன்
அது இன்னும் உறுதியாகிறது

பெண் பதிவர் தென்றல் சசிகலா அவர்களிடம், உங்களது அடுத்த புத்தக வெளியீடு எப்போது என்று கேட்டதோடு, இன்னும் சிறப்பாய் புத்தகம் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தேன்.

எனது ஊர் காரரும் பதிவுலக நண்பருமான வீடு திரும்பல் மோகன்குமார்  பார்த்ததும் அவரது புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். நலம் விசாரித்ததோடு,உங்கள் பிளாக் ல வெற்றி கோடு பற்றி எழுதுங்க சரவணன் என்றார் (எழுதறேன் சார் )

இரவின் புன்னகை வெற்றிவேல் முகத்தில் அப்போதும் (பகலிலும்) 
புன்னகை இருந்தது. பேசும் போது அவர் கவிதைகளை படிப்பதை பற்றி 
கூறி  அவரது ஊர் பெயரை குறிப்பிட்டு சாலையகுறிச்சி எங்கே இருக்கிறது என்று கேட்டேன். (தூத்துக்குடி திருநெல்வேலி பக்கம் என்று நான் நினைத்து கொண்டிருக்க) அவர் அரியலூர் அருகில் எனும் போது ஆச்சரியமாய் 
இருந்தது. என் போட்டோ போடணும் சார் நீங்க என்று அன்பாக 
உத்தரவிட்டார். (போட்டோ வெளியிட்டு விட்டேன் வேல் வேல் 
மன்னிக்கவும் வெற்றி வேல் )

மதுமதி என்னிடம் பேசும் போது என்னை பற்றி
கேட்டறிந்தார். எல்லோருக்கும் அறிமுகபடுத்தறேன் வாங்க 
என்று கை பிடித்து அழைத்து சென்று அறிமுகபடுத்தினார் 

ஸ்கூல் பையன் எனக்கும் அவ்ருக்குமுள்ள சில ஒற்றுமைகளை 
பற்றி என்னிடம் ஆச்சரியமாய் விவரித்தார்

ஜாக்கி சேகர் போன வருடம் பார்த்தது அடுத்து இப்ப தான் 
பார்க்கிறோம்  இல்லையா என்று தொடர்ந்த சிநேகத்துடன் 
புன்னகைத்தார்

பதிவர் அறிமுகத்தில் தைரியமாக மேடை ஏறிய எனக்கு வார்த்தையே வரவில்லை (வெறும் காத்து தாங்க வந்தது)  என் பெயரும் தளத்தின் பெயரும் மட்டும் சொல்லி விட்டு இறங்கி விட்டேன் இன்னும் சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றினாலும் மேடை பயம் என்னை கீழே விரட்டியடித்து விட்டது.





பாமரன் அவர்களின் பேச்சில் அனல் தெரித்தது என்று சொல்வதை 
விட அதில் கிண்டல் தூவப்பட்டு, நகைச்சுவை என்ற கோட்டிங் கொடுக்கபட்டிருந்தது அவரது பேச்சில் மட்டும் விநாடி முள் நிமிட கணக்கில் கடந்ததோ என்று நினைக்க தோன்றியது (டயம் போனதே தெரியலை இதை தான் சுத்தி வளைச்சி சொல்றேன்)
நான்அவருடன் போட்டோ எடுத்து கொண்டு பேசிய போது
பத்திரிகைகள் நம்மை தேடி வரும் படி நம் எழுத்துக்கள் 
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
சிவகுமாரை பார்க்கணும் நான் வரட்டுமா  என்று அனுமதி
போல் கேட்டு  விட்டு அவர் அகன்றது அவர் மேல் இன்னும் 
மரியாதையை ஏற்படுத்தியது



இறைவனடி சேர்ந்த பதிவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

சாப்பாட்டு இடைவேளை வந்தது நான் தட்டுடன் அருகே செல்ல
கேபிள் சங்கர் சார் வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று கேட்டார் நான் வெஜ் என்றேன். வரிகளை சேர்த்து பாஸ்டாக சொல்லியிருந்தால் என் தட்டில் 
நான் வெஜ் வைக்கபட்டிருந்திருக்கும்.


கேபிள் சங்கரிடம் அவர் துவங்கவிருக்கும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால் சென்ற வருடம் அவரிடம் என்னை அறிமுகபடுத்தி கொண்ட போது அவர் நீங்கள் என்று கேள்விக்குறியாய் பார்க்கவே, நான் நீங்கள் இப்போது இருக்கும் உயரத்திற்கு வர ஆசைபடும் 
ஒரு சாமான்யன் என்று சொல்லவே  சிரித்த படியே கை குலுக்கி  என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னார்

காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் தன் அறிமுகத்தின் போது பலத்த கர கோஷத்துடன் பேசினார்.அதே போல் கூல் ட்ரிங்க்ஸ் கொடுப்பது தண்ணீர் தருவது என்று வேலைகளை அவரே விருப்பமுடன் செய்தார் நான் மேடம் என்று அழைக்க அவர் மேடம் சொல்லாதீங்க அக்கா அல்லது தங்கை னு சொல்லுங்க என்றார் சரிக்கா  என்று நான் சொல்ல, இங்க பாருங்க நான் இவருக்கு அக்காவாம் என்று எல்லோரிடமும் சொன்னார் (என்னை கலாய்ச்சிட்டாங்கலாமாம் )

அதே போல் நண்பர் சதீஷ் செல்லதுரை குடும்பத்துடன்
வந்திருந்தும், பதிவர் சந்திப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டது வியக்க வைத்தது

தமிழ் வாசி பிரகாஷிடம், அவரது தளத்தில் பதிவு பார்த்து தமிழ் சாப்ட் வேர் என் சிஸ்டத்திற்கு டவுன்லோட் செய்து கொண்டதை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்

மதியம் சாப்பாட்டுக்கு பின் கவிதை படிக்க மயிலன் தயார் ஆகி கொண்டிருந்தார். (பாராட்டையும் பெற்றார்) நான் பாரதிராஜா 
போல் பேசுவதற்காக மேடை ஏறினேன் பயந்து கொண்டே. தொகுப்பாளர் சுரேகாவிடம்  (இவரது குரலுக்கும் தொகுப்புரைக்கும்
 ரசிகன் நான்) மதுமதி தெரிவிக்க, நான் கொஞ்சம் டென்சன் குறையட்டும் அப்புறம் கூப்பிடுங்க என்றேன். அவர் இல்லே இப்ப பேசுங்க என்று என் பெயரை உடனே அறிவித்தார் ஆகா சிக்கிட்டோம் டா என்று மைக் அருகே வந்தேன். நல்ல வேளை அந்த டேபிள் என்னை தைரியபடுதியது என்று நினைக்கிறேன். கொஞ்சம் டென்சன் குறைந்து பாரதிராஜா குரலில் ஆரம்பித்தேன். போக போக பாரதிராஜா குரல் குறைந்து நம் குரல் வெளிபடுகிறதோ என்ற தயக்கம் தோன்றியது. வடிவேல் காமெடி காட்சி போல் நான் ஒழுங்கா தான் பேசறேனா என்று நான் கேட்பதற்கு அருகில் யாரும் இல்லை. பேசி முடித்து இறங்கினேன் என் திறமையை காட்ட வேண்டும் என்று மேடை ஏறியதை விட என் மேடை பயம் போக வேண்டும் என்பதற்காக தான் ஏறினேன்.( சுரேகா சார் உடனே என் பெயரை அறிவிச்சது பத்தி சொல்லணும் னா, நீச்சல் தெரியாத ஒருத்தன் கரையில நின்னுகிட்டு எப்படி இறங்கறது என்று பயத்தில் இருக்கும் போது தள்ளி விடுவார்களே அது போல் தான் இது. நன்றி சுரேகா சார்)

அடுத்து கண்மணி குணசேகரன் பேச வந்தார் அவரது தமிழ் பேச்சு 
கேட்க நன்றாக இருந்தது அதிகப்படியானது போலவும் இருந்தது 
(ஸ்வீட்டாஇருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட முடியாதே  
அதனால் இருக்கலாம் )

பின் நடந்த புத்தக வெளியீட்டில் தீஷ் சங்கவி, மோகன் குமார்,சேட்டைக்காரன், யாமிதாஷா,மற்றும் சுரேகா எழுதிய
புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் ஐந்து புத்தகங்கள் என்பதால் கொஞ்சம் நேரம் அதிகமானது என்றாலும் எழுத்தாளர்களின் பேச்சிலும் முகத்திலும் தெரிந்த சந்தோஷ திருப்தி முக்கியம் அல்லவா.
( நண்பர்கள் அனைவரும் வெற்றி எனும் கோட்டை தொட எனது வாழ்த்துக்களும் அடுத்த நூல் வெளியீட்டிற்கு 
இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களும் )

 ரஞ்சனி நாராயணன் அவர்கள் என்னை பார்த்தவுடன் பதிவுகள் படிக்கிறேன் நல்லாருக்கு என்று சொன்னது மட்டுமில்லாமல் விழா முடிந்த அடுத்த 
நாள் முக நூலில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும்  செய்தி அனுப்பியிருந்தார் (எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அம்மா ) 

 நண்பர் சீனு பற்றி சொல்வதென்றால் சென்ற பதிவர்திருவிழாவில் 
தான் அறிமுகம் அதற்கு பின் செல் போனிலும் பதிவுகளிலும் 
மட்டுமே பேசியிருக்கிறோம். அன்று நிறைய பேசலாம் என்றிருந்தோம் டயமில்லாததல் முடியவில்லை. இதை நான் சொல்லலீங்க சீனு என்னிடம் சொன்னது.(நான் கிளம்பும் நேரத்தில் கொஞ்ச நேரம் இருங்க சார் போகலாம் என்று அடங கொண்டு எனை நிறுத்தி 
வைத்தது அவரது அன்பு)


தளிர் சுரேஷ் அரங்கத்திற்குள் வர அவரை பார்த்தவுடன் நலம் விசாரித்ததோடு மட்டுமில்லாமல் அவர் பதிவுகள் படிப்பதை யும் 
செல் போன் மற்றும் அலுவலகத்தில் படிப்பதால் தமிழில் கமெண்ட் 
போட முடியவில்லை என்பதையும் தெளிவு படுத்தினேன் 






கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் ஆனந்தவிஜயராகவன் (கோவை ஆவி) இப்போது தான் அறிமுகம். என்னை கண்டதும் 
நீங்க தானா அது என்று ஆர்வமுடன் பேசினார் கூடவே அவர் 
எழுதி மெட்டமைத்த பாடலை பாடுவதற்கு என்னையும் சேர்த்து கொண்டார்.(அதாவது கோரசுக்கு ஒரு ஆள் குறையுது நீங்களும் 
வாங்க என்று) நானும் நான் எங்க எப்படி இருந்திருக்க வேண்டியவன் என்ற கவுன்டமணி டயலாக் மனதில் தோன்ற அவரிடம் சிக்கினேன். 
பின் அவரிடம் நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டோம். இருந்தும் மேடையில் ராகம் மறந்துட்டால் என்னாவது என்ற பயம் வந்தது
அந்த பயம் இவனுங்க சொதப்பிட்டால் என்னாவது என்று அவருக்கும் இருந்திருக்கும். இருந்தும் மேடையில் பாடி முடித்த பொது கிடைத்த 
கை தட்டல்கள் அந்த பாடலுக்குண்டான வெற்றி. this credit only goes to 
ஆவி நண்பா இன்னும் சில சரணங்களை சேர்த்து மியூசிக் ஆல்பம் 
மாதிரி போட்டுடுங்க பின்னிடலாம். (எனக்கும் சான்ஸ் உண்டு தானே)

மதுமதியின் குறும்படம் ஒரு வலி மிகுந்த வறுமையை இளமையை   கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்பதை அழுத்தமாக பதிவு செய்தது. இருந்தும் அந்த பெண்ணின் பள்ளியில் ஏற்படும் கஷ்டங்களை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்பது 
எனது தாழ்மையான கருத்து. இருந்தும் கண்டிப்பாக பார்க்கும்
ஒவ்வொருவரின் மனதில் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனபது 
திண்ணம். வாழ்த்துக்கள் மதுமதி சார்


லியோனி பட்டிமன்றத்தில் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் திரு .கவிஞர்.முத்துநிலவன் அவர்களை சந்தித்தது ஒரு இனிய அனுபவம். அவரது தளம் பற்றி நான் கேட்டு தெரிந்து கொண்டேன் எனது தளம் பற்றியும் தெரிந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது மதுமதி குறும்படம், பாதிப்பை ஏற்படுத்தியதை பற்றி சொல்லி ஒவ்வொருவரும் அவரவர் தளங்களில் நண்பர்கள் எடுக்கும் குறும்படங்களை பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அவரை நானும் டி.என்.முரளிதரன் அவர்களும் வழியனுப்பிய போது போட்டோ 
எடுத்து கொண்டோம்



எழுத்தாளர் வா.மு.கோமு சிறுகதைகளை தொடர்ந்து ஆனந்த 
விகடனில் படிப்பதை அவருடன் பேசும் போது தெரிவித்தேன்


ரமணி சார் பற்றி சொல்வதென்றால் நான் மதுரை வந்திருந்த போது தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் முடியவில்லை என்று ஒரு முறை தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் சொல்லியிருந்தால் நானே உங்களை வந்து பார்த்திருப்பேனே என்றார். அந்த அளவுக்கு அவர் பதிவுலக தோழமை மேல் கொண்டிருக்கும் நட்பு வியக்க வைக்கிறது.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் பார்த்து விட்டு வந்தது பற்றி அவர் குறிப்பிட்டு சந்தோசப்பட்டார் 


நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்கள் எனக்கு அறிமுகமில்லை. இருந்தும் டில்லியிலிருந்து வந்து குடும்பத்துடன் அவர் கலந்து கொண்டது ஒரு சிறப்பான விஷயம் என்றால் அவருடன் அவரது மனைவி மற்றும் 
மகளும் கூட தளம் ஆரம்பித்து எழுதுவது இன்னும் ஒரு சிறப்பு 
பதிவுலகம் மேல் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு வியக்க 
வைக்கிறது வாழ்த்துக்கள் சார்


கே.ஆர.பி.செந்தில் சைதை அஜீஸ் இந்த விழாவில் தான் 
எனக்கு அறிமுகம் இன்னும் பலருடன் ஒரு ஹலோ மற்றும்
புன்னகையோடு கடந்து சென்றேன் (அறிமுகமில்லாததால்)







இதில் ஒரு முக்கியமான் விஷயம் என்னவென்றால் நான் இதில் கலந்து கொண்டது இத்தனை நண்பர்கள் எனக்கு கிடைத்தது இவையெல்லாம் 
இனிய நண்பர் கரை சேரா அலை அரசனால் தான். மேலும் அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் என்னிடம் மாத்திரை எடுத்து கொண்டீர்களா இப்போ எப்படி இருக்கு என்று அவ்வபோது கேட்டவாறே இருந்தார் 

(நன்றி அரசன்) 

குறைகள் ஏதேனும் இல்லியா என்றால் நேரமின்மையும் 
இடமும் மட்டுமே. எந்த ஒரு செயலையும் 100% யாராலும்
சரியாக முடித்து விட முடியாது. ஏதேனும் சில குறைகள் இருக்க 
தான் செய்யும். அவை இந்த விழாவுக்கான திருஷ்டி என்றே எடுத்து கொள்ள வேண்டும். மேலும் நான் மேலே குறிப்பிட்டதை போல் 
நிழல் தரும் மரத்தடியில் இளைப்பாறும் போது மர இலைகளின் 
ஊடே வெளிப்படும் வெயில் வந்து நம் மேல் தாக்கினால் அதற்காக
மரத்தை குற்றம் சொல்ல முடியுமோ 


இப்படி எல்லோருடனும் கலந்துரையாடி விட்டு விழா முடிந்து
கிளம்ப வேண்டிய தருணம் வந்த போது வாசலுக்கு கால்கள் முன்னெடுக்க மறுக்கின்றன.கல்லுரி நாட்களில் என்.எஸ்.எஸ் கேம்ப் முடித்து விட்டு கிளம்புகையில்,வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்று முடிந்த பின், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு கிளம்பும் தருணங்களில்,மனதில் ஒரு இனம்புரியா உணர்வு தோன்றுமே அதே உணர்வு தான் அப்போதும் தோன்றியது.

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி தந்து உழைத்திட்டவிழா குழுவினருக்குகும் கலந்து கொண்டு சிறப்பித்த பதிவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் 
  
FINAL PUNCH 

சென்ற வருடத்தை விட இவ் வருடம் நான் அதிகளவில் எல்லோராலும் அறியபட்டிருக்கிறேன். (சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தேன் பல 
பேருக்கு என்னை அடையலாம் தெரியல. ஒரு வேலை ஆளில்லாத கடையில் டீ ஆத்திகிட்டு இருக்கோம் போலிருக்கு என்று) நீங்க 
தானா அது என்று ஆச்சரியத்துடன் கை கொடுத்தார்கள். என் எழுத்து எனக்கு கொடுத்திருக்கும் வெளிச்சம் இது. இன்னும் என்னை மேம்படுத்தி 
கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு (என் எழுத்துக்கும்) இருக்கிறது


ஆர்.வி.சரவணன் 

திங்கள், செப்டம்பர் 02, 2013

தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ்






தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ் 

நேற்று பதிவர் திருவிழா வெற்றிகரமாக சிறப்பாக இனிதே நடைபெற்றது. அதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட (நான் நண்பரிடம் கேமரா கடன் வாங்கி) 
ஒரு போட்டோ கிராபர் போல் (?) சுற்றி சுழன்றதில் கிடைத்த படங்களில் சில  உங்கள் பார்வைக்கு.மேடையில் எழுத்தாளர்கள்  
வா .மு.கோமு,பாமரன், உடன் புலவர் அய்யா ,சென்னை பித்தன்,
கேபிள் சங்கர் பாரதி மணி 






 பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன்,
டி .என்.முரளிதரன் 


            சென்னை பித்தன் ,மதுமதி 


வெற்றிவேல் ,அரசன், ஜெய்  


மதுரை சரவணன் ,கவியாழி .கண்ணதாசன்,பாலகணேஷ் ,சேட்டைக்காரன் தமிழ்வாசி பிரகாஷ் 



 சுரேஷ்குமார் ,ஆரூர் மூனா செந்தில் , 
சிவகுமார், கோகுல் 




கேபிள் சங்கர்,திண்டுக்கல் தனபாலன் 


பாலகணேஷ் ,சேட்டைக்காரன், சீனு  




நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேகா 


பதிவுலக நண்பர்கள் 


பதிவர் திருவிழா குறித்த எனது (பார்வை ) பகிர்வை 
விரைவில் தருகிறேன் 

ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு





நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு


திங்கள் கிழமை ஒரு நெருங்கிய சொந்தத்தின் கல்யாணம் தஞ்சாவூரில். நடந்தது. அங்கு சென்றிருந்த போது ஒரு ஆவல் பிறந்தது. அது கரந்தையில் உள்ள நம் வலைபதிவர் நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களை சந்தித்து விட்டு வரலாமே என்று.உடனே  கிளம்பினேன்.

அவருடன் அறிமுகமானது பற்றி சொல்ல வேண்டுமானால்,ஒரு 
நாள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த போது கரந்தை
ஜெயக்குமார் http://karanthaijayakumar.blogspot.com/ என்ற ப்ளாக் கண்ணில் 
படவே நம் ஊர்  பெயர் கொண்ட பதிவர் என்றவுடன் உடனே அவர் தளத்திற்கு சென்றேன். நண்பராக்கி கொண்டேன். கரந்தை தமிழ் சங்க 
கல்வி நிலையங்களில் ஒன்றான உமா மகேஸ்வர மேனிலை பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராக பணியாற்றுகிறார்.தமிழ் பற்றி தமிழ் அறிஞர்கள்  பற்றி அவர் தொடர் பதிவுகள் எழுதி வருகிறார்.
கணித மேதை ராமானுஜம் பற்றி அவர் எழுதிய தொடர் பதிவு படித்து
வியந்தேன்.இப்போது கரந்தை மலர் என்ற தொடர் பதிவை எழுதி வருகிறார் 

அவர் பணி  புரியும் பள்ளிக்கு வந்து,ஆசிரியர்கள் அறையில் நுழைந்து என்னை  அறிமுகபடுத்தி கொண்டு ஜெயகுமாரை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்த போது எனக்குள் தயக்கம் இருந்தது. ஏனெனில் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. கூடவே முதல் முறை பார்க்க வருவதால் எப்படி என்னை எதிர் கொள்வாரோ என்ற தயக்கமும் இருந்தது. அவரை செல் போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் என்னை பற்றி
சொல்லி அழைக்கவும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார்.கை குலுக்கி கொண்டோம். அவரை பற்றி, என்னை பற்றி, பதிவுலக நண்பர்கள் பற்றி, பதிவர் சந்திப்பு பற்றி பேசினோம். 

எனக்கு ஒரு ஆசை தோன்றியது. என் செல் போன் காமெராவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமே என்று. இருந்தும் எப்படி கேட்பது 
என்று நான் தயக்கமாய் இருக்கையில் என் தயக்கத்தை அவரே தகர்த்தார்.  
சார் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமா என்று அன்புடன் கேட்டார். சந்தோசமாய் தலையசைத்தேன். கேமரா வும் கண் அசைத்தது. 

அவரது நண்பர்களான  திரு. துரைபிள்ளை நடராசன் மற்றும் திரு.கரந்தை சரவணன் இருவரையும் அறிமுகபடுத்தினார். அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டை பரிசளித்தார். விடை பெற்று கிளம்பும் போது நீங்கள் நடந்து செல்ல வேண்டுமே  நான் உங்களை கொண்டு வந்து விடவா என்றும் கேட்டார். நான் அன்போடு மறுத்து விட்டு  கிளம்பி வந்த பிறகும் அவரின் சந்தோசமும் உபசரிப்பும் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருந்தது. பதிவுலகம் ஏற்படுத்தி கொடுத்த  நட்பை கொண்டாடிய  நிமிடங்கள் அவை என்று சொன்னால் அது மிகையல்ல.அவரது தமிழ் பணி வெற்றியுடன் 
தொடரட்டும். ஒரு நல்ல நண்பனாய் நானும் தொடர்கிறேன்.

வலை பதிவர்,திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் 
சந்தித்த அந்த நிமிடங்கள் தந்த சந்தோஷம் ஒரு ஆரம்பம் 
என்பதை போல் இதோ சந்தோஷம் தொடர்கிறது  
நூற்றுகணக்கில் வலை பதிவர்களை ஒன்றாக ஓரிடத்தில் 
இணைக்கும் பொன்னான வாய்ப்பை தந்திருக்கிறது. 
செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெறும் 
தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா 

நிகழ்ச்சி நிரல் இதோ 




சிறப்புரையாற்றும் திரு.பாமரன் அவர்கள், திரு.கண்மணி குணசேகரன் அவர்கள்  மற்றும் பதிவர்களின் தனி திறன் நிகழ்ச்சிகள், பதிவுலக தோழமைகளின் நூல்கள் வெளியீடு என்று கோலாகலமாக நடைபெறும் இப் பதிவர் சந்திப்புக்கு, இன்னுமொரு சிறப்பு சேர்க்கிறது நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ்  புத்தக அரங்கு 






நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த நட்புக்கு நாம் மரியாதை செய்யும் 
விழா. மகிழ்ந்து கொண்டாட வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று (விழா குழுவினர் சார்பாகவும்) குடந்தையூர் சார்பாகவும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் 

வருங்காலம் நமதாகட்டும் 
வெற்றி நம் வசமாகட்டும் 

ஆர்.வி.சரவணன் 

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?




எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?


அப்படி என்ன நடந்துச்சு னு தானே கேட்கறீங்க 
வாங்க என் கூட 

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் 
வாழைபழம் விற்பவரிடம் இரண்டு பழம்  கேட்டேன்.அவர் கொடுத்ததில் ஒன்று நன்கு கனிந்திருந்தது. நான் "சார் ஏற்கனவே கனிஞ்சிருக்கு 
வீட்டுக்கு போறதுக்குள்ளே இன்னும் கனிஞ்சிரும் அதனாலே வேற கொடுங்க" என்றேன் மென்மையாக.அவரோ கடுப்பாகி என்னது நான் 
கொடுத்த பழம் கணிஞ்சிருக்கா சான்சே இல்லை என்று அதிமேதாவி 
தனமாக சிடுசிடுத்தவர், பழத்தை வாங்கி பார்த்து விட்டு இது 
எங்கே கனிஞ்சிருக்கு என்று (சந்திரமுகி யில் ஜோதிகா கேட்பாரே எனக்கா எனக்கா என்று அது போல் ) கோபமாய் கேட்டார். நான் அமைதியாகவே, "கொஞ்சம் கொடுங்க இப்படி" என்று அதை வாங்கி அவருக்கு எதிரிலேயே தோலை உரித்தேன். பாதிக்கு மேல் நன்றாக கனிந்திருந்தது. பல்ப் வாங்கியவர் போலானது அவர் முகம். அவர் மனைவி உடனே வேறு பழம் எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் நீங்க வேற பழம் கொடுக்கணும் னு நான் இதை உரிக்கலை. கனியவே இல்லைன்னு சார் சொன்னாரே அதை ப்ரூப் பண்ண தான் இப்படி செஞ்சேன். இதையே சாப்பிட்டுகிறேன் என்றவாறு இடத்தை விட்டகன்றேன்.ஒரு பழம் கணிஞ்சிருக்கா இல்லியா என்று தெரியாமல் எப்படி தான் வியாபாரம் பண்றாங்களோ. ஒரு வேலை கனிந்ததை விற்பதற்கான வியாபார தந்திரமாக கூட இருக்கலாம். (ஒரு பழத்துக்கு இவ்வளவு பிரச்னையா னு கேட்கறீங்களா வாங்க அடுத்த பிரச்னைக்கு .  

மறு நாள் காலை செல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்தேன். 
ஒரு ரூபாய் சில்லறை கேட்டார் கடையின் முதலாளி ( வயதானவர் ). நான் இரண்டு ஐம்பது காசுகள் கொடுத்தேன். அவர் பார்த்து விட்டு ஒரு ரூபாய் இருந்தால் கொடுங்க என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்னை இருந்திருக்காது. அதற்கு பதில் " பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் 
இதை போய் நான் எப்படி வாங்கறது" என்றார் எடுத்த எடுப்பிலே. 

எனக்கு கோபம் வந்து விட்டது. " பிச்சைக்காரன் வாங்க மாட்டான் என்றால் அவனுக்கு காசோட அருமை தெரியவில்லை என்று அர்த்தம். அவனுக்கு 
நீங்க சப்போர்ட் பண்றீங்க என்றால் அவன் உழைக்காமல் சோம்பேறியாய் இருப்பதற்கு உதவுகிறீர்கள் என்று அர்த்தம்" என்று நான் சொன்னவுடன் அவர், "ஐம்பது காசு எல்லாம் இப்ப யாரும் வாங்கறதில்லே கொடுக்கறதில்லே" என்றார் சிடுசிடுப்புடன். "அது இங்கேயே உட்கார்ந்திருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும். டெய்லி ஊர் சுத்தி வரவங்களை கேளுங்க அவங்களுக்கு தெரியும். என்றேன். "நான் வாங்கறதில்லே சார் " என்றார் முடிவாய் . "வாங்க விருப்பமில்லை சொல்லுங்க" என்று சொல்லி விட்டு வெளி வந்தேன்.

ரொம்ப நேரத்திற்கு அவர் சொன்ன வார்த்தை என்னை டென்சனாக்கி கொண்டே இருந்தது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் என்றால் நீ வாங்கியிருக்கே என்று நக்கலடிக்கிராரோ என்றும் தோன்றியது. 

அதோடு முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு
 பிரச்னை வந்தது 

காலையில் சாப்பிடவில்லை என்பதால் சரி ஹோட்டல் போகலாம் 
என்று ரயில் நிலையத்தில் இருக்கும் பிரபல உணவகத்தில் சாப்பிட சென்றேன் அங்கே ஸெல்ப் சர்வீஸ். பரோட்டா வாங்கி கொண்டு சாப்பிட
ஆரம்பித்தேன். அவர்கள் கொடுத்த குருமா ஒரு பரோட்டாவுக்கு தான் கரெக்டா இருந்திச்சு. சரி னு அடுத்த பரோட்டா வுக்கு குருமா வாங்க  
நான் சென்ற போது  கூட்டம் அதிகமாக இருந்தாலும் பொறுமையாய்
நின்று (இரண்டு நிமிடம் இருக்கும்) வாங்கி கொண்டு வந்து பார்க்கிறேன். 
நான் சாப்பிட்ட இடத்தில் பரோட்டா பிளேட்டை காணும். அந்த இடத்தில் வேறொருவர் வேறு ஏதோ சாப்பிட்டு கொண்டிருந்தார். 

நான் கடுப்பாகி காசாளரிடம் வந்து சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்து விட்டது இருந்தும் அதை வெளி காட்டாமல்  மேலாளரிடம் சொல்ல, 
அவர் டேபிள் கிளீன் செய்யும் பெண்ணிடம் விசாரித்தார். " சாப்பிட வந்தவங்க சாப்பிட்ட தட்டு  ஏன் எடுக்காமே வச்சிருக்கீங்க எடு னு சொன்னாங்க. எடுத்துட்டேன்" என்றார் சர்வ சாதாரணமாக. 

நான் கோபமாகி "என்ன சார் இது. ஆரம்பத்திலேயே குருமா கொஞ்சம் கூட கேட்டால் சாப்பிடுங்க தரோம் னு சொல்றீங்க, சரி னு பாதி சாப்பாட்டுல வந்து கேட்டா இப்படி தட்டையே எடுத்துடறீங்களே " என்றேன். "சாரி சார் 
ஒரு பரோட்டா தானே. நான் தர சொல்றேன். ஆர்க்யுமென்ட் வேண்டாம் ப்ளீஸ்" என்றார்."சண்டை போட்டு கேட்டு வாங்கி சாப்பிடறது  அசிங்கம். 
நீங்க முதல்ல சர்வீசை ஒழுங்கா பண்ணுங்க" என்று கத்தி விட்டு 
வந்து விட்டேன்


முதல் நாளிரவு பத்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் பிரச்னைகள் இப்படி வரிசை கட்டி வந்தன. இதை படித்த உங்களுக்கு,  இந்த முணு இடத்திலும் நான் ஏதோ விட்டு கொடுத்துட்டு (கத்திட்டு) வந்துட்டதா தோணும். எனக்கென்னமோ என் எதிர்ப்பை பலமா பதிவு பண்ணிட்டு வந்ததா தான் தோணுது 


FINAL PUNCH

மேற் கண்ட நிகழ்வுகளின் follows 

* வீட்டில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்து வாங்கிய 
பழத்தை தெருவிலேயே சாப்பிட்டவாறு செல்ல வேண்டியதாயிற்று 

*அந்த இரண்டு ஐம்பது காசுகளை அன்றே வேறொரு கடையில் 
கொடுத்த போது வாங்கி கொண்டார்கள் . சமீபத்தில் வேறொரு 
கடையில் இதே போல் ஐம்பது காசுகள் கொடுத்தார்கள். வாங்க மாட்டேங்கறாங்க என்றேன். பரவாயில்ல என் கிட்டே கொண்டு வாங்க நானே வாங்கிக்கிறேன் என்றார் அந்த கடைக்காரர். இது எப்படி இருக்கு 

*அன்னிக்குன்னு பார்த்து பரோட்டா முறுகலா சூப்பரா இருந்துச்சு 


ஆர்.வி சரவணன் 

படம் நன்றி முக நூல் 

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)







மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)

இப்படி ஒரு தலைப்புல தொடர் பதிவு பதிவுலகில் தொடர்ந்திட்டிருக்கு.முதன் முதலில் ப்ளாக் ஆரம்பிச்சு தளத்தில் எழுதிய மகிழ்வான தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். நானும் எழுதணும்னு அழைப்பு விடுத்த பதிவுலக தோழி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி. 


பதினான்கு வயது முதல் எழுத ஆரம்பித்தேன். வார  இதழ்களில் என் படைப்புகள் வெளியாக வேண்டும் என்று நான் விரும்பி அனுப்பிய எதுவும் அவர்கள் விரும்பாததால் வெளி வரவில்லை.  சீசீ இந்த பழம் புளிக்கும் போலிருக்கிறது என்று நான் முயற்சியை கை விட்டு விட்டேன். ஏக்கமுடன் மற்றவரின் படைப்புகளை மட்டுமே படித்து வந்தவனுக்கு இணையம்
(கை கொடுத்தது) கீ போர்டு கொடுத்தது. இணையம் பால் ஈர்க்கப்பட்டேன். பதிவுகளை  படித்து கருத்துரை  இட ஆரம்பித்தேன்.  அதற்கு பதில் கமெண்ட் வந்ததை பார்த்தவுடன் சுவாரசியம் இன்னும் அதிகமாகவே இணையத்தில் படிப்பதை தொடர்ந்தேன்.(என் கமெண்டுக்கு வந்த பதில்கமெண்ட்டையே  
ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்) இப்படியே செல்கையில் மிக முக்கியமான் மூவர்  அப்போது எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள் 

என்வழி வினோ என் வழி

கிரி ப்ளாக் கிரி http://www.giriblog.com/

எப்பூடி  ஜீவதர்ஷன் எப்பூடி

 அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.விரும்பி படித்து பின்னூட்டமிட்டு நட்பை வளர்த்து கொண்டேன். இதில் என்வழி வினோ நீங்களும் படைப்புகள் எழுதலாமே என்று எழுத அழைத்தார். சொன்னவுடன் (இதுக்காக தானே காத்துகிட்டு இருந்தோம்) எழுதினேன் ஒரு கவிதை.அது  
என் வழியில் வெளியாக அதற்கு வந்த கமெண்ட் எனக்கு தொடர்ந்து எழுதும் எண்ணத்தை தூண்டியது. அடுத்து இளையராஜா பாடல்கள் பற்றி எழுதிய பதிவு க்கு வந்த பின்னூட்டம் பார்த்து இன்னும் சந்தோஷம் கரை புரண்டது. அப்போது தான் எனக்கும் ஆர்வம் அதிகமாகி  நாமும் தளம் தொடங்குவோம்
என்று ஆரம்பித்தது தான் குடந்தையூர். என்ற எனது இந்த தளம்.  நண்பர்கள்  மூவருக்கும் தெரிவித்தேன் சந்தோசமாய் வாழ்த்தினர்.

 என் எழுத்துக்கள் படித்து யாரும்  முகம் சுளிக்க கூடாது. களிப்படையும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கவனமுடன் தொடங்கினேன்.
முதல் பதிவாக கடவுள் பற்றிய கட்டுரை தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் திருப்பதி சென்றிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவத்தை முதல் பதிவாக எழுதினேன்.அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான்  (படித்து பாருங்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும் உங்களுக்கு) இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள் 
என்று பார்த்தது தனி கதை. இரவில் கண் விழிக்கும் போது இப்போது யாரேனும் படித்து கொண்டிருப்பார்களோ என்றெல்லாம் நினைத்து கொள்வேன். அடுத்தடுத்து பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.கூடவே  தினம் 
ஒரு தளமாக சென்று இணைந்து பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன்.நண்பர் ஜீவதர்ஷன் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் எனது ஐம்பதாவது பதிவாக கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தது. அந்த பதிவு 
பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்பது தலைப்பு 
http://www.kudanthaiyur.blogspot.in/2010/08/blog-post_21.html


* தொடர்ந்து எழுதி நான் நூறை எட்டினேன். அந்த  நூறாவது 
பதிவு  ஆனந்த விகடனின் குட் ப்ளாக் பகுதியில் இடம்
பிடித்தது. http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_08.html

 * என் விகடனில் இரண்டு பக்கங்கள் என் தள பதிவுகள் வந்தது. 

* இணையம் மூலம் அறிமுகமான நண்பர் திரு எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா 
 வார இதழில் எனது கருத்துக்களை தொடர்ந்து இடம் பெற வைப்பதோடு 
 திரு.கே.பாக்யராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையையும் அவருடன் நான் நண்பரான ஒரு மாதத்திலேயே நிறைவேற்றி கொடுத்தார். 
இரு அனுபவ கட்டுரை கூட பாக்யாவில் வெளி வந்தது.

 * ஜூலை மாதம்  டைம் பாஸ் வார இதழில் நான் எழுதிய ஒரு 
   கட்டுரை வெளி வந்தது. 

 * என்  தளத்தில்  நான் எழுதிய இளமை எழுதும் கவிதை நீ http://kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html தொடர்கதை யை  
(பதிவுலக நண்பர்களின் ஊக்கத்தால்) வெற்றிகரமாய் எழுதி 
முடித்தேன். 






வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமும் ஆற்றலும் தரும் என்று சொல்வார்கள். அப்படி ஆர்வத்தில் முடிவெடுத்து
அவரசரத்தில் தொடங்கிய என் தளம் இன்று முன்னூறு இடுகைகளை 
நெருங்கி  கொண்டிருக்கிறது. மூன்று நண்பர்களுடன் இருந்த எனது 
நட்பு வட்டம் (முக நூல் நண்பர்கள் உட்பட) இன்று முன்னூறுக்கும் மேல்.
என் எழுத்து எனக்கு வழங்கிய கொடையாகவே இதை நினைத்து மகிழ்கிறேன் 


எனக்கு பிடித்த துறையில் செயலாற்றும் மகிழ்ச்சி இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது  ஆத்ம திருப்தியுடன் எழுதி வருகிறேன். என்றேனும் நானும் சிகரம் எட்டுவேன் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது என் 
தளமும் பதிவுலக நண்பர்களும் தான்.யோசித்து பாருங்கள் நான் மட்டும் அன்று  இந்த தளத்தை தொடங்கவில்லை என்றால் இதெல்லாம் நான் அடைத்திருக்க முடியுமா. 

இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான, 
என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான 
தருணம் தான். 

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

பதிவர் திருவிழா 2012 & 2013 - ஒரு பார்வை


பதிவர் திருவிழா 2012 &  2013 - ஒரு பார்வை 







இணைய நண்பர்களுக்கு வணக்கம். சென்ற வருடம் வலைபதிவர் திருவிழா 2012 மிக 
சிறப்பாக நடைபெற்றது அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கிறதென்றால் அதுவே அந்த விழாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும்.

என்னை பொறுத்தவரை சென்ற வருட பதிவர் திருவிழா எனது நட்பு வட்டம் 

பெரிதாக மிகவும் உதவியது என்று சொல்லலாம். என் இனிய நண்பர் கரை சேரா அலை 
அரசன், அறிமுகத்தில்இந்த பதிவர் திருவிழா மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள் 
பாலகணேஷ்மின்னல் வரிகள் ,ரமணி சார் தீதும் நன்றும் பிறர் தர வாரா,மோகன் குமார் 
வீடு திரும்பல் ,சீனு திடங்கொண்டு போராடு, கேபிள் சங்கர், மயிலன்,சுரேகா, தென்றல் சசிகலா, மதுமதி, ஜெயக்குமார் ,கோகுல் கோகுல் மனதில், திண்டுக்கல் தனபாலன், வேடந்தாங்கல் கருண் .... என்று தொடர்கிறது  நண்பர்கள் வரிசை.  நினைத்து பார்த்தால் பெருமை மேலிடுகிறது. அந்த விழா வை பற்றிய  எனது அனுபவ பதிவு 

 http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

அந்த விழாவில் நான் மற்றும் அரசன் (கேமரா வை என் கையில் கொடுத்து விட்டு முடிந்த 
வரை எடுத்து தள்ளுங்கள் சார் என்றார் ) எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன்.






சி.பி.செந்திகுமார் பேசி கொண்டிருக்க 
மேடையில் கேபிள் சங்கர், சங்கவி


உரையாற்ற தோதாய் மீசை முறுக்கும் நண்பர் அரசன் 






வரிகளில் சேட்டை நிகழ்த்துபவர் 



நண்பர் பதிவர் ஆரூர் மூனா செந்தில் 



மயிலன் பேசுவதை  ரசிக்கும் 
ஜெயக்குமார் ,சிபி . செந்தில்குமார் கேபிள் சங்கர் 





கேபிள் சங்கருடன் உரையாடி கொண்டிருக்கும் 
மதுமதி,ஜாக்கி சேகர்,சி.பி.செந்தில்குமார் 


லட்சுமி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் 
திரு . பட்டுகோட்டை பிரபாகர் 



அரங்கத்தில் ஒரு பகுதி 




சசிகலா அவர்கள் எழுதி வெளியிட்ட தென்றலின் கனவு 
நூல் வெளியீட்டு நிகழ்வில் 
ரமணி சார் , பி.கே.பி சார் ,ராமானுசம் அய்யா ,கவிஞர் திரு.கணக்காயன்  





பி.கே.பி அவர்களின் உரை 



பெரியோர்கள் முன்னிலையில் 




சி.பி.செந்தில்குமார் ,மதுமதி,  மோகன்குமார் 
போட்டோ சிரிப்பு  



சீனா அய்யா, ராமானுசம் அய்யா,கணக்காயன் அவர்களுடன்  அரசன் 



இயக்குனர் கேபிள் சங்கருடன் நானும் சீனுவும் 


பால கணேஷ் சார், கோகுல், அரசனுடன் 
திருவிழா அரங்கத்தின் வாயிலில் 




இந்த படங்களை பார்க்கும் போது அந்த மகிழ்வான தருணங்கள் நம் கண் முன்னே 
சிறகடிக்கின்றன. ஒரு வருடம் ஆனது போல் தெரியவில்லை. இதோ அடுத்த பதிவர் 
திருவிழா வந்து விட்டது 

செப்டம்பர் 1ம் தேதி மாதத்தின் முதல் நாள் முதல் தரமாய் முத்திரை பதிக்க விழா ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவர் திருவிழாவை முன்னின்று சிறப்பித்த குழுவே, இந்த ஆண்டும் இன்னும் மென் மேலும் சிறப்புடன் நடத்த முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள். பதிவர் திருவிழா 2013 க்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் அதன் விபரங்களை http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று தெரிந்து கொள்ளலாம் 


இவ்வருடமும் பதிவர்களின் அறிமுகம், கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை 
நூல் வெளியீடு, சிறப்பு அழைப்பாளர் உரை, இதனோடு பதிவர்களின் பன் முக திறமைகளை வெளிபடுத்தும்  நிகழ்ச்சி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடனம்,பாடல், நடிப்பு,பல 
குரல் பேசி அசத்துதல், மற்றும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு நாடகம் என்று பதிவர்களின் 
 திறமைகள் உலகறிய செய்யும் நிகழ்ச்சி அரங்கேறுகிறது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், திரு.மதுமதி அவர்களின் 9894124021 என்ற அலை பேசி எண்ணிலோ,  kavimadhumathi@gmail.com 
என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்கலாம்.நானும் இதில் கலந்து கொண்டுள்ளேன் (அதுக்காக பயபடாதீங்க நீங்க பயபட்டால் நான் எப்படி மேடை ஏறுவது )


இவ் விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்கள் முன்னதாகவே கீழ் காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு (உணவு மற்றும் உப்சரிப்புக்காக)  தங்களின் வருகையை  மின்னஞ்சலில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள் 


ஆரூர் மூனா செந்தில் 
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்


விழா சிறக்க பொருளாதாரம் முக்கியமல்லவா.எனவே நன்கொடை தர விரும்பும் பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம், சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை 
ஒட்டி இடது புறத்தில் இருக்கும் CINE MUSICIAN’S UNION”  க்கு சொந்தமான கட்டடம்  
எங்கெங்கோ பூத்த மலர்கள் சேர்ந்து உருவாக்கும்  நந்தவனம் இங்கே தான் 


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம் 




நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்

ஆர்.வி.சரவணன்