
புதன், மே 23, 2012
தஞ்சை பெரிய கோயில்

வியாழன், மே 17, 2012
அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9

புதன், மே 09, 2012
கடந்து செல்கையில் ....

வெள்ளி, மே 04, 2012
நான் சொல்வது யாதெனில்....

புதன், ஏப்ரல் 18, 2012
ஒரு கல் ஒரு கண்ணாடி

திங்கள், ஏப்ரல் 16, 2012
விழி மீன்கள்....

புதன், ஏப்ரல் 04, 2012
இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....
இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....
மனம் கவர்ந்த பாடல்கள்
இசை சக்கரவர்த்தி இளையராவின் இன்னிசை மழையில் என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு இசை, நம் இசை அரசர் இளையராஜா தான்

இளமைக் காலங்கள். படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் இதில் ஜானகி அவர்கள் தேன் குரலில் ராகம் ஆரம்பிக்க கூடவே கோரஸ் ராகம் கோர்க்க இசை அரசரின் இசை உத்வேகம் எடுக்கும் பாருங்கள். தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இப் பாடலுக்கு அழகூட்டும் அதிசயம்
அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.
ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…
இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையை அந்த இடத்தில் தந்திருப்பார் நம் இளையராஜா
படம்: இளமை காலங்கள் (1984)
தயாரிப்பு: கோவைத்தம்பி
இயக்கம்: மணிவண்ணன்
நாயகன்: மோகன், நாயகி: சசிகலா
பாடல்: வைரமுத்து
இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.
பாட வந்ததோர் கானம்..
ஈரமான ரோசாவே…
ராகவனே ரமணா ரகுநாதா…
படிப்புலே ஹீரோ …
இன்ப வேளையில் சுக ராகம்.... என்ற வரிகளை போலவே இந்த பாடல் ஒரு சுக ராகம் தான்
ஆர்.வி.சரவணன்
புதன், மார்ச் 28, 2012
ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்

செய்யவில்லை எனும்போது மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது .
திங்கள், மார்ச் 26, 2012
வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா









வியாழன், மார்ச் 22, 2012
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
மனம் கவர்ந்த பாடல்கள்
இசை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.
நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!
ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்

ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!
இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.
அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.
தொடர்ந்து வரும் பல்லவி,
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…
அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்
ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.
இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!
ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.
இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா
பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி
இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்
இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).
பாடலை எழுதியவர்: வைரமுத்து
இந்த பதிவு எனது நண்பர் வினோ அவர்களின் என்வழி வலைத்தளத்தில் 2010 ம் வருடம் நினைவுகளை மீட்டும் இசை தலைப்பில் வெளியானது. உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன்
ஆர்.வி.சரவணன்
வியாழன், மார்ச் 15, 2012
கொஞ்சலும் கெஞ்சலுமாய்....








