செவ்வாய், நவம்பர் 16, 2010

சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே ....


சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே ....

மனம் கவர்ந்த பாடல்கள் 7


பாடலாசிரியர் வாலி அவர்களுக்கு என்பதாவது பிறந்த நாள் திரை இசையை மிகரசிக்கும் நான் அவரது பாடல் வரிகளை

ரசித்திருக்கிறேன்.அவரது எழுத்துக்களை கண்டு வியந்திருக்கிறேன்

வாலிக்கு இதோ சில வரிகளில் என் பிறந்த நாள் வாழ்த்து

உம் எழுத்தால் எமை வசீகரிப்பதில் நீ வசீகர வாலி

உம் இளமை வரிகளால் எமை ஈர்ப்பதில் நீ வாலிப வாலி

உன் எழுத்துக்கள் என்றும் பதினாறாய்

இன்றும் அவை வற்றாத வார்த்தை ஊற்றாய்

உமை வாழ்த்த வயதில்லை வாலி

எனினும்

தமிழ் தாயின் ஆசியுடன்

வாலி

நீவிர் நீடுழி வாழி

வாலி அவர்களின் வாலிப வரிகளில் நம் இசை அரசர் இளையராஜா இசைவார்ப்பில் பாலசுப்ரமணியம் ,ஜானகி யின் வசீகர குரல்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,ஸ்ரீ தேவியின் அசத்தலான நடிப்பில் உருவான ஓர் அற்புதம்


சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே .... இந்த பாடலை நான் எப்பொழுது கேட்கநேர்ந்தாலும் தென்றல் எனை தழுவியது போல் ஒரு இன்பம் தருகிறது இந்த பாடல்


இதோ உங்களுக்கு அந்த அற்புதம்



******************************************************************

வலைத்தள நண்பர்களுக்கும்

அவர்கள் தம் குடும்பத்தினர்களுக்கும்

என் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

*********************************************************************

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. வாலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அருமையான பாடலை பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வாலி சாருக்கு வாழ்த்துக்கள்; வாலி, இளையராஜா கூட்டணியில் ரஜினியின் பாடல்கள் அனைத்துமே சூப்பர். அதிலும் சந்தன காற்றே ஒருபடி மேல்.

    பதிலளிநீக்கு
  3. பாடலைப் பற்றிய விளக்கம் அருமை!
    வீடியோவும் பகிர்ந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கவிக்கு கவிதையில் வாழ்த்து! நல்லா இருக்கு சரவணன்.

    பதிலளிநீக்கு
  5. எஸ்.. எனக்கும் வாலி அவர்களின் பாடல்கள் பிடிக்கும்..

    என்றும் மாறா இளமையுடன் வாலியின் வரிகள்...அருமை தான்..

    "சந்தனக் காற்றே......" சாங்.. செம செம சூப்பர்.. :-))

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமார்
    நன்றி ஜீவதர்ஷன்
    நன்றி கலையன்பன்
    நன்றி சைவ கொத்து பரோட்டா
    நன்றி ஆனந்தி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்