செவ்வாய், ஜூன் 21, 2016

உறியடி






உறியடி 

ரீலீசாகும் வரை ஒரு படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமலிருந்து , படம் வெளியான பின் அந்தப் படம் நல்லாருக்குப்பா என்கிற பாசிட்டிவ் ரிவ்யூக்கள் தொடர்ந்து வருகையில் எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துடணும் என்ற ஆர்வம் வருமே. அது சமீபத்தில் உறியடி திரைப்படம் மூலமாக நிகழ்ந்தது.

சென்ற வாரம் நான், அரசன், கோவை ஆவி மூவரும் சந்தித்த போது படம் பார்க்கலாமே என்றவுடன் எங்களது முதல் சாய்ஸ் இந்தப்படமாக தான் இருந்த்து. அடுத்த நிமிடமே எஸ்கேப்புக்கு எஸ்கேப் ஆகி விட்டோம்.

ஹீரோயின், காமெடி, கமர்சியல் விசயங்கள், இப்படி ஏதுமில்லாமல் சாதியால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்களை பற்றிய கதைக்களனை மையமாக கொண்டு புதுமுகங்களுடன் (ஓரிருவர் பழைய முகங்கள் ) இயக்குனர் விஜய் குமார் தந்திருக்கும் ஆக்‌ஷன் ஆச்சரியம். நால்வரில் ஒருவராக அவரே நடித்துமிருக்கிறார்.

கல்லூரி என்றால் அங்கே காதலும் உண்டு தானே. ஆரம்பத்தில் சக மாணவியுடன் காதல் என்பது கதைக்கு தேவையில்லாத ஒன்று என்று தோன்றினாலும் கதை நகர அந்த கேரக்டரும் ஒரு காரணம் என்பதால் அது அவசியமாகிறது.
அனாவசியம் என்றால் அது மாணவர்கள் அடிக்கடி குடிப்பதாக காட்டியிருப்பது. கொஞ்சம் அவர்கள் படிப்பதாகவும் காட்டியிருக்கலாம்.


படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது இடைவேளையின் போது தாபாவில் நடைபெறும் சண்டை காட்சியும் ஹோட்டலில் நடைபெறும் சண்டை காட்சியும் தான். இந்த இரண்டு காட்சிகளும், அந்த காட்சிகளை நோக்கிய படத்தின் கதை நகர்வும் படத்தை அலேக்காக தூக்கி நிறுத்தி விடுகிறது. அந்த இரண்டு காட்சியிலும் நம்மை அரங்கத்திலிருத்து தூக்கி சென்று சம்பவ இடத்திலேயே நாற்காலி போட்டு அமர வைத்தது போல் ஏற்படும் ஓர் பிரமையை, படம் முடிந்து வெளியேறி வந்த பிறகும் தத் தகிட தத் தகிட என்று நமக்குள் தக்க வைத்திருப்பதன் மூலம் இயக்குனர் விஜய்குமார் சினிமாவிற்கான தன் வரவை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

5 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்