செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்வீட் காரம் காபி - ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​





ஸ்வீட் காரம் காபி 
---------------------------------------------
ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 


நேரம் 

சமீபத்தில் பார்த்த படங்களில் நேரம் படத்திற்கு செலவிட்ட நேரம் (பணம் )
திருப்தியாய் இருந்தது. (நேரம் விமர்சனத்தை நேரத்தோட எழுத மாட்டியா நீ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.என்ன பண்றது டைம் தான் பிரச்னை) ஒரே நாளில் நடப்பதாக வரும் கதையில், நேரம் சரியில்லாத போது ஏற்படும் பிரச்னைகள் நேரம் சரியானவுடன் எப்படி சரியாகிறது (என்ன இது விசு டயலாக் மாதிரி வருது)  என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர்.


ஹீரோ நிவின் கேரக்டருகேற்ற  இயல்பை தந்திருக்கிறார் தன் நடிப்பில் 
 என்றாலும் ஹீரோயின் நஸ்ரியா வெரி நைஸ். அவரை கார் டிக்கியில் போட்டு விட்டு நகரும் பல காட்சிகள் நமக்கு ஏமாற்றத்தை தருகிறது.வில்லன் சிம்ஹா, (இந்த கேரக்டரை இன்னும் சீரியஸ் ஆக்கி இருக்கலாம்) நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் கேரக்டர்களை ரசிக்க முடிகிறது.எனக்கு பிடித்த காட்சி என்றால் அது ஹோட்டல் காட்சி தான். பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும் நிவினை அவரது நண்பர் திட்டி விட்டு பணம் கொடுத்து  அழைத்து காட்சி நெகிழ்ச்சி 

ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கிறது. முக்கா முழம் போடு பாடல் நம் எதிரில் டேபிள் இல்லாவிட்டாலும் எதிரில் இருப்பவர் முதுகில்  தாளம் போடலாமா என்று  தோன்ற வைக்கிறது 

நேரம் (பட குழுவினருக்கும்)  நல்லாருக்கு 

 
சிங்கம்-2

 சிங்கம் முதல் பாகம் பார்த்து இம்ப்ரெஸ் ஆனவன், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்று எதிர்பார்த்தேன்.மேலும் என்  மகன் ஹர்ஷவர்தனுக்கு இப்போது சூர்யா பிடித்த நடிகர். போனாலே ஆச்சு என்று ஒரே வம்பு  ( சின்ன வயசுல நான் பண்ண மாதிரி ) சரி என்று அவனை அழைத்து சென்றேன் 

இரண்டாம் பாகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முதல் பாகத்தில் இருந்த காதல் மற்றும் குடும்ப காட்சிகள் இதில் கம்மி. (முதல் பாகத்தில் 
சூர்யா குடும்பத்துடன் அளவளாவும் காட்சிகள் மற்றும் அனுஷ்கா வுடன் காதல் என்றெல்லாம் ரசிக்கும் படி இருக்கும்.) வில்லன் டேனி திரையை ஆக்ரமித்தது போல் ஆக்சன் காட்சிகள் ஆக்ரமிப்பு தான் நிறைய. வேகம் வேகம் என்றுதிரைக்கதையால்  இயக்குனரும்,நடிப்பால் சூர்யாவும் தன் வெயிட் டை காட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு சூப்பரா செட்டாயிருக்கு. ( ஓரிரு சீன்கள் தவிர மற்ற இடங்களில் கத்தி பேசுவதை குறைத்திருக்கலாம்) ஹன்ஷிகா பள்ளி மாணவியாக (நம்பி தான் ஆக  வேண்டும்) சூர்யாவை காதலிக்கிறார்.தன் பதவி உயர்வுகேற்றவாறு விவேக் (முதல் பாகம் போல் இல்லாமல் ) பேசியிருக்கிறார். தன் கவுன்ட்டர் களால் சந்தானமும் ரசிக்க வைக்கிறார். அனுஷ்கா வரும் காட்சிகளை இன்னும் அதிகபடுத்தி இருக்கலாம்.


இப் படத்தில் எனக்கு பிடித்தது  மேலும் வில்லன் டேனியை சூர்யா கைது செய்து சிறையில் அடைக்கும் பர பர காட்சிகள்.பொது சொத்தை சூரையாடுபவர்களை  சூர்யா தண்டிக்கும்  காட்சி.  தப்புல்ல என்று கர்ஜிப்பார் சூர்யா. (தண்டிக்கும்  விதம் ரைட்டுல்ல  நான் சொல்றேன்) 

சிங்கம் வெயிட்  

 
------

ஆபீஸ் சீரியல் 






நான் டி.வி சீரியல்கள் பார்ப்பதில்லை. (நாங்க மட்டும் பார்க்கிறோமா 
என்று முறைக்காதீங்க.) இருந்தும் நான் பார்க்கும் சீரியல் விஜய் டிவி யில் வரும் ஆபீஸ்.  முழுக்க  முழுக்க  (சில நேரங்களில் வீடு பிக்னிக் என்று காட்சிகள் வருகிறது) அலுவலகத்தை ,மையமாக கொண்ட கதை. பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. கண்களால் பேசும் ஹீரோயின் எப்போதும் லொட லொட என்று பேசும் அவரது தோழி, ஹீரோவின் தோழன்  இவர்களை ரசிக்க முடிந்த அளவுக்கு காமெடி என்ற பெயரில்  
மூவர் அடிக்கும் கொட்டம்  ரசிக்க முடியவில்லை. சில இடங்களில் புன்னகைக்கும் படியும் சில இடங்களில்  கடுப்பை கிளப்புவதாகவும்
 இருக்கிறது.  எப்போதும் எல்லாரும் பேசி கொண்டே இருக்கிறார்கள். வேலைக்கு நடுவில் கொஞ்சம் காதல் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் வஞ்சம் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இது மாதிரி ஆபீஸ்ல எல்லாம் நமக்கு வேலை கிடைக்கலியே.அந்த மாதிரி ஆபீஸ் ல எல்லாம் உனக்கு வேலை கிடைக்காது. வேணும்னா நீ  முன்னுக்கு வந்து   அந்த மாதிரி கம்பெனி க்கு எம்.டி ஆகிடு  என்று நக்கலடிப்பது வேற யாரு மை மைண்ட் வாய்ஸ் தான்

------

காதல் கடிதம் போட்டி 

இணைய நண்பர் சீனு திடங்கொண்டு போராடு அறிவித்திருந்த 
போட்டியான   காதலன், காதலிக்கு எழுதிய அல்லது எழுத நினைத்த  
காதல் கடிதம். நானும் கலந்து கொண்டுள்ளேன்.இதன் மூலம் கிடைத்த 
பயன் புதிய அறிமுகங்கள் நிறைய கிடைத்திருக்கிறது  நட்பு வட்டம் பெரிதாகவும் உதவியிருக்கிறது.  போட்டியில் கலந்து கொண்டவர்களின் கடிதங்கள் எண்ணற்ற உணர்வுகள் படிக்க  வேண்டுமா  இங்கே சென்று படியுங்கள் http://www.seenuguru.com/2013/07/love-letter-contest.html வாழ்த்துக்கள் சீனு


------

ஒரு வரி தந்த நிறைவு 

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் சென்னை செல்ல ரயிலுக்காக
வெயிட் பண்ணிய போது ஒரு வி.ஐ.பி யை சந்தித்தேன். அருகில் 
பார்த்தவுடன் நான் விஷ் பண்ண அவரும் விஷ் பண்ணியதோடு மட்டும் இருந்திருந்தால் இங்கே குறிப்பிட விஷயம் ஏதுமில்லை . 
ஏதோ நெடு நாள் பழகிய ஒருவரை பார்க்கும் போது கேட்பது போல் "நல்லாருக்கீங்களா" என்றும் கேட்டார்.  எல்லோரையும் அவ்வாறே 
நலம் விசாரித்து  கொண்டிருந்தார். அவர் நடிகர் திரு .டெல்லி கணேஷ். தன் கோச் நிற்கும் இடம் நோக்கி கிளம்பும் போதும் வரேன் என்று எல்லோரிடமும் விடை பெற்றே கிளம்பினார்.(ஒரு வார்த்தை னாலும் அது அவரை மனசுல  உயர்த்திருச்சு)

------




டி .எம்.எஸ் 

சமீபத்தில் மறைந்த பாடகர் டி .எம்.சௌந்தரராஜன் அவர்கள்  பாடிய பாடல்களில் பல எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை. (திரை பாடல்களுக்கு ரசிகனான எனை ஈர்ப்பவை). முக்கியமாக, கண்ணை நம்பாதே, ஏன் என்ற கேள்வி, நான் ஆணையிட்டால்,ஆறு மனமே ஆறு  எங்கே நிம்மதி என்ற கொள்கை பாடல்களும் டூயட் பாடல்களில் ஆடலுடன் பாடலை, ஒருவர் மீது ஒருவர் ,பச்சைக்கிளி,  பாட்டுக்கு பாட்டெடுத்து, அமைதியான  நதியினிலே ஓடம் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் என் விருப்ப 
 கலெக்சனில் இருக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் பாடல் 
கேட்கும் போதெல்லாம் அவர் நம்மிடையே இருந்து கொண்டிருப்பது போன்றே உணர்வு. அவரது பாடல்களில் எனக்கு பிடித்த இன்னொரு
பாடல், செந்தமிழ் பாடும் சந்தன காற்று.... (டூயட் பாடல்) அந்த பாடல் வரிகளையே இங்கே அவருக்கு  புகழாரமாக சூட்டுகிறேன்.
(ஆம் அவர் செந்தமிழ் பாடும் சந்தன காற்று)

------



என்றென்றும் வாலி 

வாலி மறைந்ததில் வலி மிகுந்தது  தமிழுக்கு என்ற வரிகளை படித்தேன் 
 பல வருடங்களுக்கு முன் வெளியான ஒரு வார இதழில் (குமுதம் )வாலி பற்றி வந்திருந்த செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.வாலியிடம் ஒரு 
நண்பர் கேட்டாராம் ஏன் நீங்கள் இந்த பெயர் வைத்து கொண்டீர்கள் 
என்று. இராமாயணத்தில் வாலி யாருடன் மோதுகின்றானோ 
அந்த எதிரியின் வலிமை அவனுக்கு வந்து விடும் சக்தி பெற்றவன் 
அவன். அது போல் நான் யாரை சந்திக்கின்றேனோ அவரது அறிவும் எனக்கு வந்து  விட வேண்டும் என்று தான் இந்த பெயர் வைத்து கொண்டேன் 
என்று சொல்லியிருக்கிறார் வாலி. நண்பர் ஜாலியாக, அப்படி ஒன்றும் 
நீங்கள் அறிவாளி ஆனது போல் தெரியவில்லையே என்றாராம். அதற்கு 
வாலி  கொடுத்த பதிலடி.  அப்ப நான் இன்னும் அறிவாளி யாரையும்
சந்திக்கவில்லை போலிருக்கிறது.இப்படி வார்த்தைகளில்விளையாடும் 
வாலி நின் புகழ் நீடுழி வாழி

-----





 வேண்டுகோள் ஒன்று  

எனக்கு  இயக்குனர் ஆக வேண்டும் என்பதில் விருப்பமுண்டு 
குறும்படம்  எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக சில  கதைகளும் 
ரெடி செய்திருக்கிறேன். இருந்தும்  தொழில் நுட்ப ரீதியில் நான் எந்த   பயிற்சியும் மேற் கொள்ள இயலவில்லை. எந்த ஒரு படபிடிப்பிலும் நான் பார்வையாளனாக கூட இருந்ததில்லை. எனவே என் தளம் தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் (?) யாரேனும்  குறும்படம்  எடுக்கும் போது எனக்கு தெரிவித்தால் நானும் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் 
சொல்வீர்களா ?


ரசித்த போட்டோ 





மன உறுதிக்கு இதை விட ஒரு சான்று வேண்டுமா என்ன 




செய்திகள் சில வரிகளில் 

தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்துள்ளார். நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள் 

நீதிக்கு தலை வணங்கி வரவேற்கிறோம் 

கஞ்சா கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறு அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்.இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

கஞ்சா கருப்பின் மனசு வெள்ளை


------


FINAL PUNCH




எனது நண்பர் ஒருவர்  நீங்கள் ப்ளாகில் எழுதுவது  சரி அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் பத்திரிகைகளுக்கு எழுத  முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.நானும் விடாது ஒரு மாதமாக முயற்சித்ததில் விளைந்த பயன், நான் எழுதி அனுப்பிய கட்டுரை  குடிக்காதது குத்தமாய்யா விகடன் டைம் பாஸ் இதழில் 12-07-2013  வெளியானது. விளம்பர வால் பேப்பரில் கடைகளில் இந்த தலைப்பை பார்த்து இன்னும் சந்தோசமானேன். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. (முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்த்திய  நிகழ்வு இது)   




ஆர்.வி .சரவணன் 

19 கருத்துகள்:

  1. பெயரில்லாஜூலை 30, 2013 10:16 AM

    டைம் பாஸ் வாழ்த்துகள்
    கோகுல்.,

    பதிலளிநீக்கு
  2. டி .எம்.எஸ் குரலிலும் வாலி பாடல் வரியிலும், அனைவரின் மனதிலும் இருப்பார்கள்...

    ஸ்வீட் காரம் காபி நல்ல சுவை... பாராட்டுக்கள்...

    விகடன் டைம் பாஸ் இதழில் கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    பதிலளிநீக்கு
  4. டைம் பாஸ் விகடனில் படைப்பு வெளியானதற்கு வாழ்த்துக்கள்! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. டைமுக்கு பாஸ் பண்ணியதற்கு வாழ்த்துக்கள்.
    ஆஹா... அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வலைச்சர அறிமுகத்திகு
    வாழ்த்துகள்..!

    http://blogintamil.blogspot.in/2013/08/4.html

    பதிலளிநீக்கு
  7. மூன்று சுவைகளும் சரிவிகிதத்தில் உள்ளன சார் ..

    பதிலளிநீக்கு
  8. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ரசித்த படம் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. டெல்லி கணேஷ் பற்றிய தகவல் ஆச்சரியமாக இருந்தது. எல்லோர் நினைவிலும் வாழும் டி.எம்.எஸ் மற்றும் வாலி...

    பதிலளிநீக்கு
  9. தொடர் பதிவெழுத அழைத்திருக்கிறேன் . தென்றல் வருக வருக...

    பதிலளிநீக்கு
  10. தொடர்பதிவு :

    அழைப்பு :http://veesuthendral.blogspot.in/2013/08/blog-post_3.html

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. விகடன் டைம்பாஸ்க்கு வாழ்த்துக்கள்...
    குறும்படம் எடுக்க வாழ்த்துக்கள் (நமக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கு... அபுதாபியில் இருப்பதாலும் வாழ்க்கைத் துரத்தலாலும் ஆசை அப்படியே.... பார்க்கலாம்)

    எல்லாமே நன்று,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குமார்

      குறும் பட ஆசை இருக்கிறதா கண்டிப்பாக நான் எடுக்கும் போது உங்களையும் சேர்த்துக்கிறேன்

      நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்