வெள்ளி, மே 04, 2012

நான் சொல்வது யாதெனில்....


நான் சொல்வது யாதெனில்....

(சுஜாதா என்றொரு சிகரம் + சில மனிதர்கள் + வேகம் விவேகமல்ல + மின் வெட்டிலும் மின்சாரம்)

படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு சுஜாதா சார் எழுத்துக்கள் என்றால் கொள்ளை பிரியம் சிறு வயதில் கொலையுதிர்காலம் என்ற தொடர் குமுதத்தில் வந்தது அந்த தொடரை படிக்க ஆரம்பித்தவன் தான்.அதிலிருந்து அவரது ரசிகன் ஆகி விட்டேன் .அவர் பெயரிட்ட ஒரு புத்தகத்தையும் விடுவதில்லை. சமீபத்தில் அவரது குறு நாவல்கள் தொகுதி படித்தேன். சென்னை பாரி முனையில் உள்ள தம்பு செட்டி தெரு செல்லும் போதெல்லாம், கணேஷ் வசந்த் நினைவு வந்து விடும் எனக்கு. கூடவே சுஜாதா வின் நினைவும். சுஜாதாவின் அற்புத படைப்பு கணேஷ் வசந்த்.என்றால் கடவுளின் மிக அற்புதமான படைப்பு சுஜாதா அவர்கள். ( ஹாப்பி பர்த்டே சுஜாதா சார். நாங்கள் உங்கள் எழுத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் )

------

ஊருக்கு செல்ல ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்டில் ஏற நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன் ரயில் பிளாட்பாரம் வந்து கொண்டிருந்தது நின்று கொண்டிருந்தவர்கள் வரிசையில் சுறுசுறுப்பாக, வரிசையில் நிற்காதவர்கள் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள முனைய ஒரே கூச்சல். அப்போது எனக்கு முன்பு ஒருவர் நுழைய முயல அவரை திட்டி நாங்கள் வெளியேற்றி னோம். கூடவே எனக்கு முன் நின்றிருந்த ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். "நாங்க எவ்வளவு மணி நேரமா நிக்கிறோம் நீ இப்ப வந்துட்டு உள்ளே நுழைய பார்க்கிறே" என்று அவர் சொல்ல, உள்ளே நுழைய முயன்றவர் அதற்கு பதில் கொடுத்தார் பாருங்கள்." நீயே இப்ப தான் உள்ளே நுழைந்தாய் நீ என்னை சொல்கிறாயா என்று சொன்னதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பே நின்று கொண்டிருந்ததால் எப்படியும் கண்டிப்பாக இரண்டு மணி நேரமாவது நின்றிருப்பார்.அப்படி நின்றவரை பார்த்து , தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி சர்வ சாதரணமாக சொல்லும் இவரை பற்றி நினைக்கையில் என்ன மனிதன் இவர் என்று நினைக்க தோன்றுகிறது (சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி?)

------

சென்ற வாரம் நான் திருப்பூர் வரை சென்றிருந்தேன் நான் இரவில் சென்ற கரூர் டு ஈரோடு தனியார் பேருந்தில் முன் இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம் டிரைவர் வேர்கடலை சாப்பிட்டு கொண்டே பேருந்தை ஓட்டி கொண்டிருந்தார் பின் போன் வரவே செல் போன் பேசிய படியே வண்டி ஓட்டினார் பின் அவர் நண்பர் ஒருவர் வரவே பக்கத்தில் அமர்ந்த அவருடன் பேசிய படியே ஓட்டி கொண்டிருந்தார் அவரது பொறுப்பற்ற இந்த செயல்கள் என் முதல் இருக்கையில் அமர்ந்த படி சென்று கொண்டிருந்த் எங்களின் பி பி யை எகிற வைத்தது ( உங்கள் கவனம் வண்டி ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தேவலை)

------

நான் ஏறிய மற்ற அரசு பேருந்துகளில் எல்லாம் டிரைவர் சீட்டுக்கு முன் உள்ள கண்ணாடியில் ஒரு சிறுமியின் போட்டோவுடன் அப்பா ப்ளீஸ் வேகமா போகாதீங்க என்ற எழுத்துக்களுடன் ஸ்டிக்கர் ஓட்டபட்டிருப்பதை பார்த்தேன். வேகமாய் சென்று கொண்டிருக்கும் டிரைவர்கள் இந்த வாசகம் பார்க்கும் போது தானாகவே வேகத்தை குறைக்கும் எண்ணம் வரும். கண்டிப்பாக இந்த வார்த்தைகளுக்கு பலன் இருக்கும் என்று நினைக்கிறேன் இது நல்ல முயற்சி (வேகத்திற்கு விடை கொடுப்போம் )

------

மின்வெட்டிலும் மின்சாரம் இது எப்படின்னு கேட்கறீங்களா
மின் வெட்டின் கொடுமை தாங்காமல் வீட்டில் இன்வெண்டர் வாங்கி போட்டு விட்டேன். பொருத்திய பின் அடுத்து மின் வெட்டு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகி விட்டது.(திட்டாதீங்க இன்வெண்டர் செக் செய்வதற்காக தான் ) ஆனால் பாருங்கள் தினமும் நைட் மின் வெட்டு படுத்தி எடுக்கும் அன்று பார்த்து பவர் கட்டே ஆகவில்லை. பவர் கட் ஆனது உடனே மீண்டும் வந்து விட்டது.(நிஜமாகவே நைட் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கட் ஆகும் கரண்ட் ஒரு மணி நேரம் கழித்து வரும் இப்போது அப்படியில்லை கட் ஆனாலும் உடனே வந்து விடுகிறது பகலில் மட்டும் கட் ஆகிறது ) நான் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தீங்களா இவ்வளவு செலவு பண்ணி இன்வெண்டர் போட்டவுடன் பவர் கட் ஆகலை பாருங்க என்றேன் கொஞ்சம் நொந்து போய்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான அம்மா சொன்னார்கள். "நீங்க பண்ணின செலவால் எல்லாருக்குமே நல்லது நடந்திருக்கு னு சந்தோசபடுங்க தம்பி" என்றார். ( கண்டிப்பாக இது எனக்கு சந்தோசமான ஒன்று தான் )

ஆர்.வி.சரவணன்

4 கருத்துகள்:

  1. சந்தோஷம்...(இன்வெர்ட்டர் வெச்சதுக்கு பார்ட்டி வைக்கலாமே?)

    பதிலளிநீக்கு
  2. அருமை... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாமே 05, 2012 12:59 PM

    அனுபவங்களை நல்லப் பகிர்ந்து இருக்கீங்க அண்ணா

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ,,..
    சும்மா கலந்து கட்டி அடிசிருக்கிங்க சார் ..
    அதுவும் பேருந்து ஓட்டுனரை என்ன சொல்வது ..
    அவர்களா பார்த்து உணரனும் ...

    அப்புறம் invertar விசயம் சூப்பர் ..சார் ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்