சனி, டிசம்பர் 04, 2010

வெட்கச் சிணுங்கல்


வெட்கச் சிணுங்கல்


அன்பே
உன் பெற்றோர்க்கு
கவிதை வருமா
என்றேன்
இல்லையே என்றாய் நீ
வரும் என்றேன்
எப்படி என்றாய் புரியாமல்
இதோஅழகான கவிதையாய்
உனை
படைத்திருக்கின்றனரே
என்றேன்
ச்சீ என்றாய்
வெட்க சிணுங்கலுடன்
என் கன்னம் தட்டி
அடுத்து
நீ என் கன்னம் தட்ட
வார்த்தைகளுக்கு
யோசிக்கிறேன்

உன் பார்வை எனை அள்ளி உன் அருகே வைத்தாலும் உன் வெட்கம் என்னவோ எனை தள்ளி உன் எதிரே வைக்கிறது


முன்னே வந்து விழும் முடிகற்றைகளை அழகாய் ஒதுக்கும் நீ கொஞ்சம் வெட்கம் ஒதுக்குவாயா


உனக்கு வெட்கம் என்பது அணிகலனா அல்ல ஆயுதமா எனும் தர்க்கம் என் மன அரங்கில் எப்போதும் இருக்கிறது



ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. காதலாய் கவிதையாய்....அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  2. சந்தேகமே வேண்டாம் வெட்கம்..அணிகலன் தான்..

    சூப்பர்..

    பதிலளிநீக்கு
  3. கவிதையாய் காதலா?
    காதலாய் கவிதையா?
    அருமை..! அருமை..!!

    பதிலளிநீக்கு
  4. க‌விதை ந‌ல்லாயிருக்கு ச‌ர‌வ‌ண‌ன் வாழ்த்துக்க‌ள்..:)

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயந்த்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஸ் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியவில்லையே ஹரிஸ் ஹா ஹா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சைவ கொத்து பரோட்டா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்