புதன், ஏப்ரல் 19, 2017

எதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதை



எதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதை 

 ச்சே” என்ற படி நின்றிருந்த புறநகர் ரயிலிலிருந்து ஒவ்வொருவராக கீழே குதிக்க தொடங்கினர். அவர்கள் சொன்ன ச்சே வை இன்னும் அழுத்தி உச்சரித்தவாறு கீழே குதித்தான் அருண். யாரோ ஒருவர் போகிற போக்கில் "ஸ்ட்ரைக் நடந்துட்டிருக்கு" என்று சொல்லவும் தான் குழப்பத்தில் இருந்தவர்கள் ச்சே என்று சலிப்பு காட்டி இறங்க ஆரம்பித்தனர்.எதிரே இருந்த சாலையை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தனர்
10 மணிக்கு அலுவலகத்த்தில் இருந்தாக வேண்டும். மணி இங்கேயே 10 ஆகி விட்டது. “முன் அறிவிப்பில்லாமல் எதுக்குங்க ஸ்ட்ரைக்பண்றாங்க” அருண் தன் பக்கத்தில் கூடவே இறங்கி வந்து கொண்டிருந்த அந்த நபரை கேட்டான்.

"முன் அறிவிப்போடு ஸ்ட்ரைக் பண்ணா பரவாயில்லியா ” என்று வியர்வையை கை குட்டையால் துடைத்தவாறு அருணை திருப்பி கேட்டார் அவர்பெண்கள் கஷ்டப்பட்டு கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

யாரும் ஸ்ட்ரைக் பண்ண கூடாது னு ஒரு ஸ்ட்ரைக் பண்ணா நல்லாருக்கும்” இப்படி நக்கலடித்த படி கடந்தார் இன்னொருவர்.


அருண் அடுத்த ட்ராக்கையும்  கடந்து ரயில்வே இரும்பு வேலியையும் தாண்டி பஸ் பிடிக்க ரோட்டுக்கு வந்தான். 

எதுக்காக ஸ்ட்ரைக் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு ” கடுப்படித்த படி வந்து கொண்டிருந்த அந்த முதியவரிடம் எதுக்காக ஸ்ட்ரைக் பண்றாங்க சார்”  ஆவலாய் கேட்டான் அருண்.

ம்... ரயிலெல்லாம் டயத்துக்கு வராம லேட்டா தான் வருதாம். அதுக்காக பயணிகள் தண்டவாளத்தில் உட்கார்ந்து ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருக்காங்களாம்."

ஆர்.வி.சரவணன் 

குமுதம் 14-09-2016 இதழில் வெளியான எனது ஒரு பக்கக் கதை இது. 
நன்றி குமுதம் ஆசிரியர் குழு.

3 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்