வியாழன், டிசம்பர் 27, 2012

இளமை எழுதும் கவிதை நீ-17

இளமை  எழுதும் கவிதை நீ-17





நீ எனக்கிடும் உணவில் அன்பை சேர்க்கிறாயா 
விதைக்கிறாயா அறியும் கணக்கியலில் நான் 



பொழுது புலரும் முன்பே கோவிலில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாய் ஆரம்பித்திருந்தன.சிம்பிளா பண்ணிடலாம் என்று தான் ராஜேஷ்குமார் சொல்லி இருந்தார் . சிம்பிளாக ஆரம்பித்த  கல்யாண ஏற்பாடுகள்  தான் பெரிய அளவில் வந்து நின்றிருந்தது. சொந்தகாரர்கள் அனைவருக்கும் நண்பர்களில் முக்கியமான  சிலருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தனர்.கட்சிகாரர்கள்  பத்திரிகைகளுக்கு அழைப்பில்லை. காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம் என்பதால் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில்  மிகுந்த பரபரப்பு இருந்தது. வீடியோ கிராபர் லைட் செட்டிங்கில் பிஸியாக இருந்தார்   

வரவேற்க வாசலில்  ராஜேஷ்குமார்  சிவகுமார் இருவரும்  நின்றிருந்தனர் 

 
தொடரும்

ஆர்.வி.சரவணன் 

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

12 கருத்துகள்:

  1. சரவணன் சார், மொத்த பதிவுகளையும் "இளமை எழுதும் கவிதை நீ" என்ற பெயரில் -டாக் பண்ணி இருந்தால், என்னை போல் முதல் பாகத்தைத் தேடுவோர் சிரமப் பட வேண்டி இருக்காது... எல்லா பதிவுகளிலும் இந்த குறிச்சொல்லை சற்று சிரமம் பார்க்காமல் வைத்து விடுங்களேன்... எம் போன்ற புதியவர்கல்க்கு சற்றே வசதியாய் அமையும்.....

    பதிலளிநீக்கு
  2. கதை நகர்வு மிக அற்புதமாக செல்கிறது சார் ...
    சிவகுமார் அவளை அருகில் அழைத்து ராஜேஷ்குமரிடம் நம் காலேஜ் சேர்மன் என்று அறிமுகபடுத்தினார்//

    இதை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கறேன் ...

    பதிலளிநீக்கு
  3. எம் போன்ற புதியவர்கல்க்கு சற்றே வசதியாய் அமையும்.....//

    யோவ் சீனு உம்மை புதியவன் என்று சொன்னதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. //பில் நான் தர//

    எங்கூர்ல பில் கடைக்கார( விற்பனையாள)ர்தான் தருவார். பணம்தான் நான் தர....ணும்.

    பதிலளிநீக்கு
  5. ''பில் நான் தர'

    எங்கூர்ல பில் கடைக்காரர்தான் தருவார்.

    பதிலளிநீக்கு
  6. தடபுடலாய் திருமணம் முடிந்தது. சிவா நேரில் வராமலேயே.

    பதிலளிநீக்கு
  7. சிவா அப்பா ஹெலி.யில் புறப்பட்டுவிட்டார், வீடியோகிராபர் மேலே எந்த பிரச்னையும் செய்யாமல். நிம்மதி!

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல என் ரசனை அந்த இரண்டு வரிகளை தாண்டி வர மறுக்கிறது. வீடியோ வாழ்த்து ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்