ஞாயிறு, நவம்பர் 25, 2012

இளமை எழுதும் கவிதை நீ-14

இளமை எழுதும் கவிதை நீ-14





உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  

மையம் கொண்ட புயல் ஒன்று எந்த திசை நோக்கி திரும்பும் என்று பயத்துடன் எதிர்பார்த்திருக்கையில் அது வலுவிழந்து போனால் எப்படி இருக்கும் அப்படி தான் இருந்தது அந்த வகுப்பறையில் இருந்தவர்களுக்கு. சிவா  எதுவும் நடவாதது போல் டெஸ்க்கிலிருந்து 
தன் புத்தகங்களை எடுத்து கொண்டு கடைசி பெஞ்சுக்கு செல்ல கிளம்பினான்.  தன் கோபத்தை வெளி காட்டாது மறைக்கவும் அதை கட்டுபடுத்தவும் மிகவும் பிரயத்தனப்பட்டான். அந்த பதட்டத்திலேயே  அவன் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி தரையில் விழுந்து திசைக்கொன்றாய் சிதறின. அதை பார்த்த பயோ டேட்டா பாலு உட்பட சில மாணவர்கள் அவசரமாய் எழுந்து வந்தனர்.

 தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

 ஓவியம் : நன்றி திரு.இளையராஜா 

 

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

  

11 கருத்துகள்:

  1. நோட்டிஸ் போர்டை பார்த்ததும் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கதையின் மேலுள்ள ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. கதை நகர்வு மிகவும் இயல்பாக செல்கிறது சார் ...
    எதையும் முன் கூட்டியே யூகிக்க இயலவில்லை ..

    பதிலளிநீக்கு
  3. நோட்டீஸ் போர்டு ஆவலை அதிகம் செய்து விட்டது...

    பதிலளிநீக்கு
  4. இவ்வத்தியாயம் முழுதும் உணர்ச்சிக் குவியலாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  5. நோட்டீஸ் போர்டில் நிறுவனரின் நேரடி தொலைபேசி எண் காணவில்லையே? #ச்சும்மா.

    பதிலளிநீக்கு
  6. //இவரகழி பார்த்தனர்//
    சரி செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
  7. இடையில் கொஞ்சநாள் எந்த பதிவுகளையும் பாதிக்கவில்லை. மிஸ் பண்ணதை படிக்கவேண்டும். :)

    பதிலளிநீக்கு
  8. "அந்த கிளாஸ் முடிந்து அவர் எப்போது கிளம்புவார் என்று வம்பு பேசவும் சிவாவுக்கு சப்போர்ட் பண்ணவும் தவித்த மாணவ மாணவிகள் அவர் சென்ற பின் பேச ஆரம்பித்தனர்."

    நல்லா இருக்கு.. நானும் இந்த நிலையில் இருந்தால்.. கிளம்புன உடனே பேசணும் என்று நினைப்பேன்.

    "அங்கே இருந்த பிரின்சிபால் "சார் நீங்க பேசிட்டிருங்க நான் அப்புறம் வரேன் "என்று நாகரீகமாய் அங்கிருந்து அகன்று கொள்ள"

    :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்