ஞாயிறு, அக்டோபர் 07, 2012

ஸ்வீட் காரம் காபி ( 08-10-2012)


ஸ்வீட் காரம் காபி
_________________________
08-10-2012


தாண்டவம் படம் பார்த்தேன். படத்தில் விக்ரம் கொலைகள் செய்வதில் கொஞ்சமேனும் நகம் கடிக்க வைக்கும் அளவுக்கு கூட  பரபரப்பு இல்லாதது, மேலும் விசாரணை செய்யும் நாசரும் ஒவ்வொரு கொலைக்கும் சந்தானத்தை அழைத்து கொண்டு வந்து  விசாரிப்பதோடு கடமை முடிந்து விட்டது போல் இருப்பதாக தோன்றுவது,   அடுத்த காட்சிகள் இப்படி தான் நகரும் என்று நம்மை அனுமானிக்க வைப்பது இதெல்லாம் படத்திற்கு மைனஸ்.  விக்ரம், அனுஷ்கா மற்றும் உயிரின் உயிரே பாடலும் அது படமான விதமும் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ்  (படம் முடிந்து வெளி வரும் போது ஒரு படம் பார்த்த எபெக்ட்டே இல்லை )

------


ஹைக்கூ வின் மூன்று  குணாதிசயங்கள்  நேரடி அனுபவம்,உவமை உருவகம் கூடாது ,மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் ,கணையாழி யின் கடைசி பக்கங்களில் ஹைக்கூ கவிதை எழுதுவது பற்றி   திரு.சுஜாதா அவர்கள் 

------




காவிரி நீர் பிரச்னைலே வழக்கம் போல் கர்நாடகா பந்த் ஆர்ப்பாட்டம் என்று முரண்டு 
பிடிப்பது பார்க்கிறப்ப ஒரு சின்ன விஷயம் எனக்கு ஞாபாகம் வருது இரு நாட்கள் முன்பு 
நான் ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தேன் இலையும் போட்டாச்சு கூட்டு பொரியல்,சாம்பார், சாதம்,என்று அனைத்தும் வந்து விட்டது ஆனால் தண்ணீர் கொண்டு வந்து வைப்பவர் வராததால் எதையும் சர்வர்களால் பரிமாற முடியவில்லை அப்போது என் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட தொடங்கியவர் இதை கவனித்து அவருக்கு வைத்திருந்த தண்ணீரை என் பக்கம் நகர்த்தி நான் இன்னும் குடிக்கலை நீங்க இலையில் துடைச்சிக்குங்க என்றார் எப்படியும் ஒரு நிமிடத்திலாவது அந்த தண்ணீர் வந்திருக்கும் ஆனால் அது வரை என்னை காத்திருக்க வேண்டாம் என்று அந்த ஒரு டம்ளர் தண்ணீர் தந்த அந்த நல்ல மனிதரின் மனசு ஆர்ப்பாட்டம்  பண்றவங்களுக்கு எப்ப வரும்.(இந்திய நாடு நம் வீடு இந்தியன் என்பது நம் பேரு....இருப்பதை பகிந்து உண்போம்....)

------










பாடல் சிறப்பாக உள்ளது உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால் உச்சம் தொட்டிருப்பீர்கள் வாழ்த்துக்களுடன்

என்று தீதும் நன்றும் பிறர் தர வாரா  ரமணி சார் எனது சினிமா பாடல் பற்றிய பதிவிற்கு கருத்துரை இட்டிருந்தார். அதை பார்த்த பின் அன்று முழுவதும் (மோதிர கையால் குட்டு வாங்கின மாதிரி) ஒரு வித சந்தோச உணர்விலேயே இருந்தேன். அலுவலகத்தில் எல்லோரும், என்ன சந்தோசமா இருக்கீங்க எதாவது குட் நியூஸ் என்று கேட்குமளவுக்கு இருந்தேன் என்றால் பார்த்துக்குங்க.நல்லதா ஒரு நாலு வார்த்தை கேட்கிறப்ப கிடைக்கும் எனெர்ஜி என்னை மிகவும் வியக்க வைத்தது. (அந்த நாள் எனக்கு இனிமையாய் ஆனதற்கு முழு பொறுப்பும் திரு. ரமணி சார் அவர்களை சாரும். ) படம் நன்றி வீடு திரும்பல் மோகன் சார் 

------

நான் சென்னையில் தங்கி இருக்கும் வீட்டில் எலி தொல்லை ஜாஸ்தி. நான் இருக்கும் வரை வராது. நான் அலுவலகம் கிளம்பி சென்றவுடன் அது என் ரூமை அபகரித்து கொண்டு விடும் ஒரு பொருளை கூட விட்டு வைக்காது.  ஒரு நாள் நான் அலுவலகம் கிளம்ப தாமதமாகி விட்டது. கிச்சன்  பக்கம்  சென்ற போது அங்கே அந்த எலி வந்திருந்தது என்னை பார்த்தது 
எனது அடுத்த நடவடிக்கை என்ன என்று பார்த்து அதை வைத்து அங்கிருந்து வெளியேற 
அது  தயாராய் இருந்தது.அப்போது  அது என்னை பார்த்த பார்வை  நானே டயத்துக்கு   வந்திட்டேன் நீ ஏண்டா டயத்துக்கு ஆபீஸ் போகமே இங்கே  சுத்திகிட்டுருக்கே னு கேட்டது போல் இருந்துச்சு (எலி மை  பாச்சிலர் பிரெண்ட் )


-------


பதினான்கு மணி நேரம் மின் வெட்டால் வீட்டில் போட்ட இன்வேர்ட்டர் கூட  மின்சாரம்   கிடைக்காமே திணர்ற நிலைமை வந்தாச்சு   (போற போக்கை பார்த்தா இன்வேர்டர்ட்டர்க்கும்  இன்வெண்டர் வைக்க வேண்டி  வருமோ)


------


போட்டோ கார்னர் 


இது கும்பகோணம் அருகில் உள்ள ஐராவதேஸ்வர் கோவிலில் நான்  எடுத்தது 
இது எண்ணுறு  ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது 



------


சுந்தர பாண்டியன் படத்தில் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த லட்சுமி மேனன் இந்த வார ஸ்வீட் காரம் காபி யில் இடம் பெற்றிருக்கிறார் 




ஆர்.வி.சரவணன் 


7 கருத்துகள்:

  1. செம கலக்கல் சார் ...
    அனைத்தும் கலந்த ஒரு செழிப்பான கலவை இந்த வார படைப்பு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இது கும்பகோணம் அருகில் உள்ள ஐராவதேஸ்வர் கோவிலில் நான் எடுத்தது
    இது எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் 1

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்