இளமை எழுதும் கவிதை நீ....6
அத்தியாயம் 6
உன் கண்ணீர் துளியை தாங்கும் வலிமை கூட இல்லாதது
என் கருங்கல் இதயம்
தான் வந்தது பற்றி அலட்டி
கொள்ளாமல் அலட்சியமாய் சாய்ந்திருக்கும் சிவாவை பார்த்த போது இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு அப்படியே நாலு மிதி மிதிக்கலாமா என்று தான் தோன்றியது
கொள்ளாமல் அலட்சியமாய் சாய்ந்திருக்கும் சிவாவை பார்த்த போது இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு அப்படியே நாலு மிதி மிதிக்கலாமா என்று தான் தோன்றியது
"கேட்கறேன்லே சொல்லு" என்று அதட்டினார்
சிவா அவருக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் விரல்களால் அவசரமாக தன் நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பினான். இதை கவனித்த அவர் உடனே செல் போனை பிடுங்கினார்
"உங்களுக்கு இங்கே என்ன வேணும் எதுக்கு வந்தீங்க "
"தவறு எங்கே நடந்தாலும் நாங்க வருவோம் "
சிவா உடனே "நீ கிளம்பு" என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னான்
"போக கூடாது ஏய் நில்லு" என்று அவர் சொன்னவுடன் அந்த பெண் அங்கேயே நின்று விட்டாள்.
"பழி வாங்கறீங்க இல்லே "
"உனக்கு அப்படி தோணலாம் எனக்கோ இது கடமை"
"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை"
"நீங்க கெட்டது பண்ணுவீங்க அதை தடுத்து பிடிக்கலாம்னு வந்தா உங்களுக்கு நல்லாயில்லை யா வெட்டி பேச்சு பேசாதே கிளம்பு"
"வரலைனா"
"சட்டையை கொத்தா பிடிச்சு தர தர னு இழுத்துட்டு போவேன் மீடியாவை கூப்பிட்டு உன்னை சந்தி சிரிக்க வச்சுடுவேன்"
எழுந்த சிவாவுக்கு அப்பொழுது தான் உரைத்தது. கார்த்திக் மாட்டிற போறானே என்று. தான் மாட்டினாலும் பரவாயில்லை தம்பிக்கு எந்த இழுக்கும் வர கூடாது என்று கொஞ்சம் பதைப்புடன் அவசரமாக வெளி வந்தான்
தொடரும்
நண்பர்களே நிறைய பேர் இந்த எனது தொடர்கதையை படிக்கிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி நீங்கள் மனதில் நினைப்பதை கருத்துரையிடுங்கள
The story copyrighted to kudanthaiyur may not be reproduced on other websites.