
கஷ்டப்பட இஷ்டப்படு
வான் வழியே நானும் தலைப்பில் என் அனுபவத்தை உங்களிடம் சென்ற இடுகையில் சொன்னேன் அல்லவா. ஒரு விஷயம் சொல்லாமல் விட்டு விட்டேன்
அதாவது நான் அலுவலக வேலையாக சென்றேன் என்று சொன்னேன் அல்லவா எனது துறை சம்பந்தப்பட்ட வேலை அது என்பதால் நான் சென்றேன் எனது துறை பற்றி நான் அடிக்கடி சலிப்பாகவும் கோபமாகவும் இப்படி சொல்வதுண்டு ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் வேலை போதாதா இந்த துறையை வேறு நான் பார்க்க வேண்டுமா இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே இது தேவையா . இதனால் எனக்கு என்ன பயன் இந்த துறைக்காக எனக்கு தனியாக சம்பளம் தருகிறார்களா என்று சக ஊழியர்களிடமும் ஏன் எம் .டி யிடமே நான் கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தான் இந்த வேலை முடிக்க வேண்டும் என்ற அளவுக்கு எனக்கு இந்த துறை நான் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது எனும் போது கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற வரிகள் உண்மை என்பதை தான் எனது இந்த பயணம் தெளிவு படுத்தியிருக்கிறது
ஒரு நிமிஷம்
நான் எனது தாத்தா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் அதுக்கு என்ன இப்ப அப்படிங்கறீங்களா விஷயம் இருக்கு என் அம்மாவுடன் பிறந்தவர்கள் தாய் மாமா நான்கு ,பேர் சித்தி ஒருவர் இவர்கள் தான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தார்கள் நான்கு மாமன்களில் ஒருவர் மும்பையில் பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறார் அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் நான் என் வாழ்க்கையில் முன்னேற, எடுத்து கொண்ட ரோல் மாடல்களில் அவரும் ஒருவர் அவர் சிறு வயதில் என்னை தோள் மீது வைத்து பாட்டு பாடி தூங்க வைப்பார் என்று எங்கள் வீட்டில் எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன் எனக்கும் நினைவிருக்கிறது அவர் நன்றாக பாடுவார் அவர் பாடுவதை பார்த்து தான் நானும் பாட பழகினேன் (எதோ கொஞ்சம் ஓரளவு பாடுவேன் என்று வைத்து கொள்ளுங்கள் ) அவர், எனது மன்னிக்கவும் நமது குடந்தையூர் தளம் பார்த்து படித்து விட்டு அனுப்பிய கருத்துரையை உங்களோடு பகிர்கிறேன்
ஒரு சிறு வயது குழந்தை பள்ளியில் ப்ரைஸ் வாங்கி கொண்டு வந்ததை, தாய் உச்சி முகர்ந்து எப்படி பாரட்டுவாரோ அந்த பாராட்டில் குழந்தை எப்படி மகிழுமோ அதே மகிழ்ச்சியில் இந்த கருத்துரையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்