வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு





நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு


திங்கள் கிழமை ஒரு நெருங்கிய சொந்தத்தின் கல்யாணம் தஞ்சாவூரில். நடந்தது. அங்கு சென்றிருந்த போது ஒரு ஆவல் பிறந்தது. அது கரந்தையில் உள்ள நம் வலைபதிவர் நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களை சந்தித்து விட்டு வரலாமே என்று.உடனே  கிளம்பினேன்.

அவருடன் அறிமுகமானது பற்றி சொல்ல வேண்டுமானால்,ஒரு 
நாள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த போது கரந்தை
ஜெயக்குமார் http://karanthaijayakumar.blogspot.com/ என்ற ப்ளாக் கண்ணில் 
படவே நம் ஊர்  பெயர் கொண்ட பதிவர் என்றவுடன் உடனே அவர் தளத்திற்கு சென்றேன். நண்பராக்கி கொண்டேன். கரந்தை தமிழ் சங்க 
கல்வி நிலையங்களில் ஒன்றான உமா மகேஸ்வர மேனிலை பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராக பணியாற்றுகிறார்.தமிழ் பற்றி தமிழ் அறிஞர்கள்  பற்றி அவர் தொடர் பதிவுகள் எழுதி வருகிறார்.
கணித மேதை ராமானுஜம் பற்றி அவர் எழுதிய தொடர் பதிவு படித்து
வியந்தேன்.இப்போது கரந்தை மலர் என்ற தொடர் பதிவை எழுதி வருகிறார் 

அவர் பணி  புரியும் பள்ளிக்கு வந்து,ஆசிரியர்கள் அறையில் நுழைந்து என்னை  அறிமுகபடுத்தி கொண்டு ஜெயகுமாரை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்த போது எனக்குள் தயக்கம் இருந்தது. ஏனெனில் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. கூடவே முதல் முறை பார்க்க வருவதால் எப்படி என்னை எதிர் கொள்வாரோ என்ற தயக்கமும் இருந்தது. அவரை செல் போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் என்னை பற்றி
சொல்லி அழைக்கவும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார்.கை குலுக்கி கொண்டோம். அவரை பற்றி, என்னை பற்றி, பதிவுலக நண்பர்கள் பற்றி, பதிவர் சந்திப்பு பற்றி பேசினோம். 

எனக்கு ஒரு ஆசை தோன்றியது. என் செல் போன் காமெராவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமே என்று. இருந்தும் எப்படி கேட்பது 
என்று நான் தயக்கமாய் இருக்கையில் என் தயக்கத்தை அவரே தகர்த்தார்.  
சார் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமா என்று அன்புடன் கேட்டார். சந்தோசமாய் தலையசைத்தேன். கேமரா வும் கண் அசைத்தது. 

அவரது நண்பர்களான  திரு. துரைபிள்ளை நடராசன் மற்றும் திரு.கரந்தை சரவணன் இருவரையும் அறிமுகபடுத்தினார். அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டை பரிசளித்தார். விடை பெற்று கிளம்பும் போது நீங்கள் நடந்து செல்ல வேண்டுமே  நான் உங்களை கொண்டு வந்து விடவா என்றும் கேட்டார். நான் அன்போடு மறுத்து விட்டு  கிளம்பி வந்த பிறகும் அவரின் சந்தோசமும் உபசரிப்பும் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருந்தது. பதிவுலகம் ஏற்படுத்தி கொடுத்த  நட்பை கொண்டாடிய  நிமிடங்கள் அவை என்று சொன்னால் அது மிகையல்ல.அவரது தமிழ் பணி வெற்றியுடன் 
தொடரட்டும். ஒரு நல்ல நண்பனாய் நானும் தொடர்கிறேன்.

வலை பதிவர்,திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் 
சந்தித்த அந்த நிமிடங்கள் தந்த சந்தோஷம் ஒரு ஆரம்பம் 
என்பதை போல் இதோ சந்தோஷம் தொடர்கிறது  
நூற்றுகணக்கில் வலை பதிவர்களை ஒன்றாக ஓரிடத்தில் 
இணைக்கும் பொன்னான வாய்ப்பை தந்திருக்கிறது. 
செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெறும் 
தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா 

நிகழ்ச்சி நிரல் இதோ 




சிறப்புரையாற்றும் திரு.பாமரன் அவர்கள், திரு.கண்மணி குணசேகரன் அவர்கள்  மற்றும் பதிவர்களின் தனி திறன் நிகழ்ச்சிகள், பதிவுலக தோழமைகளின் நூல்கள் வெளியீடு என்று கோலாகலமாக நடைபெறும் இப் பதிவர் சந்திப்புக்கு, இன்னுமொரு சிறப்பு சேர்க்கிறது நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ்  புத்தக அரங்கு 






நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த நட்புக்கு நாம் மரியாதை செய்யும் 
விழா. மகிழ்ந்து கொண்டாட வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று (விழா குழுவினர் சார்பாகவும்) குடந்தையூர் சார்பாகவும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் 

வருங்காலம் நமதாகட்டும் 
வெற்றி நம் வசமாகட்டும் 

ஆர்.வி.சரவணன் 

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?




எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?


அப்படி என்ன நடந்துச்சு னு தானே கேட்கறீங்க 
வாங்க என் கூட 

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் 
வாழைபழம் விற்பவரிடம் இரண்டு பழம்  கேட்டேன்.அவர் கொடுத்ததில் ஒன்று நன்கு கனிந்திருந்தது. நான் "சார் ஏற்கனவே கனிஞ்சிருக்கு 
வீட்டுக்கு போறதுக்குள்ளே இன்னும் கனிஞ்சிரும் அதனாலே வேற கொடுங்க" என்றேன் மென்மையாக.அவரோ கடுப்பாகி என்னது நான் 
கொடுத்த பழம் கணிஞ்சிருக்கா சான்சே இல்லை என்று அதிமேதாவி 
தனமாக சிடுசிடுத்தவர், பழத்தை வாங்கி பார்த்து விட்டு இது 
எங்கே கனிஞ்சிருக்கு என்று (சந்திரமுகி யில் ஜோதிகா கேட்பாரே எனக்கா எனக்கா என்று அது போல் ) கோபமாய் கேட்டார். நான் அமைதியாகவே, "கொஞ்சம் கொடுங்க இப்படி" என்று அதை வாங்கி அவருக்கு எதிரிலேயே தோலை உரித்தேன். பாதிக்கு மேல் நன்றாக கனிந்திருந்தது. பல்ப் வாங்கியவர் போலானது அவர் முகம். அவர் மனைவி உடனே வேறு பழம் எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் நீங்க வேற பழம் கொடுக்கணும் னு நான் இதை உரிக்கலை. கனியவே இல்லைன்னு சார் சொன்னாரே அதை ப்ரூப் பண்ண தான் இப்படி செஞ்சேன். இதையே சாப்பிட்டுகிறேன் என்றவாறு இடத்தை விட்டகன்றேன்.ஒரு பழம் கணிஞ்சிருக்கா இல்லியா என்று தெரியாமல் எப்படி தான் வியாபாரம் பண்றாங்களோ. ஒரு வேலை கனிந்ததை விற்பதற்கான வியாபார தந்திரமாக கூட இருக்கலாம். (ஒரு பழத்துக்கு இவ்வளவு பிரச்னையா னு கேட்கறீங்களா வாங்க அடுத்த பிரச்னைக்கு .  

மறு நாள் காலை செல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்தேன். 
ஒரு ரூபாய் சில்லறை கேட்டார் கடையின் முதலாளி ( வயதானவர் ). நான் இரண்டு ஐம்பது காசுகள் கொடுத்தேன். அவர் பார்த்து விட்டு ஒரு ரூபாய் இருந்தால் கொடுங்க என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்னை இருந்திருக்காது. அதற்கு பதில் " பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் 
இதை போய் நான் எப்படி வாங்கறது" என்றார் எடுத்த எடுப்பிலே. 

எனக்கு கோபம் வந்து விட்டது. " பிச்சைக்காரன் வாங்க மாட்டான் என்றால் அவனுக்கு காசோட அருமை தெரியவில்லை என்று அர்த்தம். அவனுக்கு 
நீங்க சப்போர்ட் பண்றீங்க என்றால் அவன் உழைக்காமல் சோம்பேறியாய் இருப்பதற்கு உதவுகிறீர்கள் என்று அர்த்தம்" என்று நான் சொன்னவுடன் அவர், "ஐம்பது காசு எல்லாம் இப்ப யாரும் வாங்கறதில்லே கொடுக்கறதில்லே" என்றார் சிடுசிடுப்புடன். "அது இங்கேயே உட்கார்ந்திருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும். டெய்லி ஊர் சுத்தி வரவங்களை கேளுங்க அவங்களுக்கு தெரியும். என்றேன். "நான் வாங்கறதில்லே சார் " என்றார் முடிவாய் . "வாங்க விருப்பமில்லை சொல்லுங்க" என்று சொல்லி விட்டு வெளி வந்தேன்.

ரொம்ப நேரத்திற்கு அவர் சொன்ன வார்த்தை என்னை டென்சனாக்கி கொண்டே இருந்தது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் என்றால் நீ வாங்கியிருக்கே என்று நக்கலடிக்கிராரோ என்றும் தோன்றியது. 

அதோடு முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு
 பிரச்னை வந்தது 

காலையில் சாப்பிடவில்லை என்பதால் சரி ஹோட்டல் போகலாம் 
என்று ரயில் நிலையத்தில் இருக்கும் பிரபல உணவகத்தில் சாப்பிட சென்றேன் அங்கே ஸெல்ப் சர்வீஸ். பரோட்டா வாங்கி கொண்டு சாப்பிட
ஆரம்பித்தேன். அவர்கள் கொடுத்த குருமா ஒரு பரோட்டாவுக்கு தான் கரெக்டா இருந்திச்சு. சரி னு அடுத்த பரோட்டா வுக்கு குருமா வாங்க  
நான் சென்ற போது  கூட்டம் அதிகமாக இருந்தாலும் பொறுமையாய்
நின்று (இரண்டு நிமிடம் இருக்கும்) வாங்கி கொண்டு வந்து பார்க்கிறேன். 
நான் சாப்பிட்ட இடத்தில் பரோட்டா பிளேட்டை காணும். அந்த இடத்தில் வேறொருவர் வேறு ஏதோ சாப்பிட்டு கொண்டிருந்தார். 

நான் கடுப்பாகி காசாளரிடம் வந்து சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்து விட்டது இருந்தும் அதை வெளி காட்டாமல்  மேலாளரிடம் சொல்ல, 
அவர் டேபிள் கிளீன் செய்யும் பெண்ணிடம் விசாரித்தார். " சாப்பிட வந்தவங்க சாப்பிட்ட தட்டு  ஏன் எடுக்காமே வச்சிருக்கீங்க எடு னு சொன்னாங்க. எடுத்துட்டேன்" என்றார் சர்வ சாதாரணமாக. 

நான் கோபமாகி "என்ன சார் இது. ஆரம்பத்திலேயே குருமா கொஞ்சம் கூட கேட்டால் சாப்பிடுங்க தரோம் னு சொல்றீங்க, சரி னு பாதி சாப்பாட்டுல வந்து கேட்டா இப்படி தட்டையே எடுத்துடறீங்களே " என்றேன். "சாரி சார் 
ஒரு பரோட்டா தானே. நான் தர சொல்றேன். ஆர்க்யுமென்ட் வேண்டாம் ப்ளீஸ்" என்றார்."சண்டை போட்டு கேட்டு வாங்கி சாப்பிடறது  அசிங்கம். 
நீங்க முதல்ல சர்வீசை ஒழுங்கா பண்ணுங்க" என்று கத்தி விட்டு 
வந்து விட்டேன்


முதல் நாளிரவு பத்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் பிரச்னைகள் இப்படி வரிசை கட்டி வந்தன. இதை படித்த உங்களுக்கு,  இந்த முணு இடத்திலும் நான் ஏதோ விட்டு கொடுத்துட்டு (கத்திட்டு) வந்துட்டதா தோணும். எனக்கென்னமோ என் எதிர்ப்பை பலமா பதிவு பண்ணிட்டு வந்ததா தான் தோணுது 


FINAL PUNCH

மேற் கண்ட நிகழ்வுகளின் follows 

* வீட்டில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்து வாங்கிய 
பழத்தை தெருவிலேயே சாப்பிட்டவாறு செல்ல வேண்டியதாயிற்று 

*அந்த இரண்டு ஐம்பது காசுகளை அன்றே வேறொரு கடையில் 
கொடுத்த போது வாங்கி கொண்டார்கள் . சமீபத்தில் வேறொரு 
கடையில் இதே போல் ஐம்பது காசுகள் கொடுத்தார்கள். வாங்க மாட்டேங்கறாங்க என்றேன். பரவாயில்ல என் கிட்டே கொண்டு வாங்க நானே வாங்கிக்கிறேன் என்றார் அந்த கடைக்காரர். இது எப்படி இருக்கு 

*அன்னிக்குன்னு பார்த்து பரோட்டா முறுகலா சூப்பரா இருந்துச்சு 


ஆர்.வி சரவணன் 

படம் நன்றி முக நூல் 

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)







மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)

இப்படி ஒரு தலைப்புல தொடர் பதிவு பதிவுலகில் தொடர்ந்திட்டிருக்கு.முதன் முதலில் ப்ளாக் ஆரம்பிச்சு தளத்தில் எழுதிய மகிழ்வான தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். நானும் எழுதணும்னு அழைப்பு விடுத்த பதிவுலக தோழி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி. 


பதினான்கு வயது முதல் எழுத ஆரம்பித்தேன். வார  இதழ்களில் என் படைப்புகள் வெளியாக வேண்டும் என்று நான் விரும்பி அனுப்பிய எதுவும் அவர்கள் விரும்பாததால் வெளி வரவில்லை.  சீசீ இந்த பழம் புளிக்கும் போலிருக்கிறது என்று நான் முயற்சியை கை விட்டு விட்டேன். ஏக்கமுடன் மற்றவரின் படைப்புகளை மட்டுமே படித்து வந்தவனுக்கு இணையம்
(கை கொடுத்தது) கீ போர்டு கொடுத்தது. இணையம் பால் ஈர்க்கப்பட்டேன். பதிவுகளை  படித்து கருத்துரை  இட ஆரம்பித்தேன்.  அதற்கு பதில் கமெண்ட் வந்ததை பார்த்தவுடன் சுவாரசியம் இன்னும் அதிகமாகவே இணையத்தில் படிப்பதை தொடர்ந்தேன்.(என் கமெண்டுக்கு வந்த பதில்கமெண்ட்டையே  
ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்) இப்படியே செல்கையில் மிக முக்கியமான் மூவர்  அப்போது எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள் 

என்வழி வினோ என் வழி

கிரி ப்ளாக் கிரி http://www.giriblog.com/

எப்பூடி  ஜீவதர்ஷன் எப்பூடி

 அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.விரும்பி படித்து பின்னூட்டமிட்டு நட்பை வளர்த்து கொண்டேன். இதில் என்வழி வினோ நீங்களும் படைப்புகள் எழுதலாமே என்று எழுத அழைத்தார். சொன்னவுடன் (இதுக்காக தானே காத்துகிட்டு இருந்தோம்) எழுதினேன் ஒரு கவிதை.அது  
என் வழியில் வெளியாக அதற்கு வந்த கமெண்ட் எனக்கு தொடர்ந்து எழுதும் எண்ணத்தை தூண்டியது. அடுத்து இளையராஜா பாடல்கள் பற்றி எழுதிய பதிவு க்கு வந்த பின்னூட்டம் பார்த்து இன்னும் சந்தோஷம் கரை புரண்டது. அப்போது தான் எனக்கும் ஆர்வம் அதிகமாகி  நாமும் தளம் தொடங்குவோம்
என்று ஆரம்பித்தது தான் குடந்தையூர். என்ற எனது இந்த தளம்.  நண்பர்கள்  மூவருக்கும் தெரிவித்தேன் சந்தோசமாய் வாழ்த்தினர்.

 என் எழுத்துக்கள் படித்து யாரும்  முகம் சுளிக்க கூடாது. களிப்படையும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கவனமுடன் தொடங்கினேன்.
முதல் பதிவாக கடவுள் பற்றிய கட்டுரை தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் திருப்பதி சென்றிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவத்தை முதல் பதிவாக எழுதினேன்.அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான்  (படித்து பாருங்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும் உங்களுக்கு) இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள் 
என்று பார்த்தது தனி கதை. இரவில் கண் விழிக்கும் போது இப்போது யாரேனும் படித்து கொண்டிருப்பார்களோ என்றெல்லாம் நினைத்து கொள்வேன். அடுத்தடுத்து பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.கூடவே  தினம் 
ஒரு தளமாக சென்று இணைந்து பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன்.நண்பர் ஜீவதர்ஷன் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் எனது ஐம்பதாவது பதிவாக கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தது. அந்த பதிவு 
பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்பது தலைப்பு 
http://www.kudanthaiyur.blogspot.in/2010/08/blog-post_21.html


* தொடர்ந்து எழுதி நான் நூறை எட்டினேன். அந்த  நூறாவது 
பதிவு  ஆனந்த விகடனின் குட் ப்ளாக் பகுதியில் இடம்
பிடித்தது. http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_08.html

 * என் விகடனில் இரண்டு பக்கங்கள் என் தள பதிவுகள் வந்தது. 

* இணையம் மூலம் அறிமுகமான நண்பர் திரு எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா 
 வார இதழில் எனது கருத்துக்களை தொடர்ந்து இடம் பெற வைப்பதோடு 
 திரு.கே.பாக்யராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையையும் அவருடன் நான் நண்பரான ஒரு மாதத்திலேயே நிறைவேற்றி கொடுத்தார். 
இரு அனுபவ கட்டுரை கூட பாக்யாவில் வெளி வந்தது.

 * ஜூலை மாதம்  டைம் பாஸ் வார இதழில் நான் எழுதிய ஒரு 
   கட்டுரை வெளி வந்தது. 

 * என்  தளத்தில்  நான் எழுதிய இளமை எழுதும் கவிதை நீ http://kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html தொடர்கதை யை  
(பதிவுலக நண்பர்களின் ஊக்கத்தால்) வெற்றிகரமாய் எழுதி 
முடித்தேன். 






வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமும் ஆற்றலும் தரும் என்று சொல்வார்கள். அப்படி ஆர்வத்தில் முடிவெடுத்து
அவரசரத்தில் தொடங்கிய என் தளம் இன்று முன்னூறு இடுகைகளை 
நெருங்கி  கொண்டிருக்கிறது. மூன்று நண்பர்களுடன் இருந்த எனது 
நட்பு வட்டம் (முக நூல் நண்பர்கள் உட்பட) இன்று முன்னூறுக்கும் மேல்.
என் எழுத்து எனக்கு வழங்கிய கொடையாகவே இதை நினைத்து மகிழ்கிறேன் 


எனக்கு பிடித்த துறையில் செயலாற்றும் மகிழ்ச்சி இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது  ஆத்ம திருப்தியுடன் எழுதி வருகிறேன். என்றேனும் நானும் சிகரம் எட்டுவேன் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது என் 
தளமும் பதிவுலக நண்பர்களும் தான்.யோசித்து பாருங்கள் நான் மட்டும் அன்று  இந்த தளத்தை தொடங்கவில்லை என்றால் இதெல்லாம் நான் அடைத்திருக்க முடியுமா. 

இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான, 
என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான 
தருணம் தான். 

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

பதிவர் திருவிழா 2012 & 2013 - ஒரு பார்வை


பதிவர் திருவிழா 2012 &  2013 - ஒரு பார்வை 







இணைய நண்பர்களுக்கு வணக்கம். சென்ற வருடம் வலைபதிவர் திருவிழா 2012 மிக 
சிறப்பாக நடைபெற்றது அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கிறதென்றால் அதுவே அந்த விழாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும்.

என்னை பொறுத்தவரை சென்ற வருட பதிவர் திருவிழா எனது நட்பு வட்டம் 

பெரிதாக மிகவும் உதவியது என்று சொல்லலாம். என் இனிய நண்பர் கரை சேரா அலை 
அரசன், அறிமுகத்தில்இந்த பதிவர் திருவிழா மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள் 
பாலகணேஷ்மின்னல் வரிகள் ,ரமணி சார் தீதும் நன்றும் பிறர் தர வாரா,மோகன் குமார் 
வீடு திரும்பல் ,சீனு திடங்கொண்டு போராடு, கேபிள் சங்கர், மயிலன்,சுரேகா, தென்றல் சசிகலா, மதுமதி, ஜெயக்குமார் ,கோகுல் கோகுல் மனதில், திண்டுக்கல் தனபாலன், வேடந்தாங்கல் கருண் .... என்று தொடர்கிறது  நண்பர்கள் வரிசை.  நினைத்து பார்த்தால் பெருமை மேலிடுகிறது. அந்த விழா வை பற்றிய  எனது அனுபவ பதிவு 

 http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

அந்த விழாவில் நான் மற்றும் அரசன் (கேமரா வை என் கையில் கொடுத்து விட்டு முடிந்த 
வரை எடுத்து தள்ளுங்கள் சார் என்றார் ) எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன்.






சி.பி.செந்திகுமார் பேசி கொண்டிருக்க 
மேடையில் கேபிள் சங்கர், சங்கவி


உரையாற்ற தோதாய் மீசை முறுக்கும் நண்பர் அரசன் 






வரிகளில் சேட்டை நிகழ்த்துபவர் 



நண்பர் பதிவர் ஆரூர் மூனா செந்தில் 



மயிலன் பேசுவதை  ரசிக்கும் 
ஜெயக்குமார் ,சிபி . செந்தில்குமார் கேபிள் சங்கர் 





கேபிள் சங்கருடன் உரையாடி கொண்டிருக்கும் 
மதுமதி,ஜாக்கி சேகர்,சி.பி.செந்தில்குமார் 


லட்சுமி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் 
திரு . பட்டுகோட்டை பிரபாகர் 



அரங்கத்தில் ஒரு பகுதி 




சசிகலா அவர்கள் எழுதி வெளியிட்ட தென்றலின் கனவு 
நூல் வெளியீட்டு நிகழ்வில் 
ரமணி சார் , பி.கே.பி சார் ,ராமானுசம் அய்யா ,கவிஞர் திரு.கணக்காயன்  





பி.கே.பி அவர்களின் உரை 



பெரியோர்கள் முன்னிலையில் 




சி.பி.செந்தில்குமார் ,மதுமதி,  மோகன்குமார் 
போட்டோ சிரிப்பு  



சீனா அய்யா, ராமானுசம் அய்யா,கணக்காயன் அவர்களுடன்  அரசன் 



இயக்குனர் கேபிள் சங்கருடன் நானும் சீனுவும் 


பால கணேஷ் சார், கோகுல், அரசனுடன் 
திருவிழா அரங்கத்தின் வாயிலில் 




இந்த படங்களை பார்க்கும் போது அந்த மகிழ்வான தருணங்கள் நம் கண் முன்னே 
சிறகடிக்கின்றன. ஒரு வருடம் ஆனது போல் தெரியவில்லை. இதோ அடுத்த பதிவர் 
திருவிழா வந்து விட்டது 

செப்டம்பர் 1ம் தேதி மாதத்தின் முதல் நாள் முதல் தரமாய் முத்திரை பதிக்க விழா ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவர் திருவிழாவை முன்னின்று சிறப்பித்த குழுவே, இந்த ஆண்டும் இன்னும் மென் மேலும் சிறப்புடன் நடத்த முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள். பதிவர் திருவிழா 2013 க்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் அதன் விபரங்களை http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று தெரிந்து கொள்ளலாம் 


இவ்வருடமும் பதிவர்களின் அறிமுகம், கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை 
நூல் வெளியீடு, சிறப்பு அழைப்பாளர் உரை, இதனோடு பதிவர்களின் பன் முக திறமைகளை வெளிபடுத்தும்  நிகழ்ச்சி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடனம்,பாடல், நடிப்பு,பல 
குரல் பேசி அசத்துதல், மற்றும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு நாடகம் என்று பதிவர்களின் 
 திறமைகள் உலகறிய செய்யும் நிகழ்ச்சி அரங்கேறுகிறது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், திரு.மதுமதி அவர்களின் 9894124021 என்ற அலை பேசி எண்ணிலோ,  kavimadhumathi@gmail.com 
என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்கலாம்.நானும் இதில் கலந்து கொண்டுள்ளேன் (அதுக்காக பயபடாதீங்க நீங்க பயபட்டால் நான் எப்படி மேடை ஏறுவது )


இவ் விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்கள் முன்னதாகவே கீழ் காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு (உணவு மற்றும் உப்சரிப்புக்காக)  தங்களின் வருகையை  மின்னஞ்சலில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள் 


ஆரூர் மூனா செந்தில் 
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்


விழா சிறக்க பொருளாதாரம் முக்கியமல்லவா.எனவே நன்கொடை தர விரும்பும் பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம், சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை 
ஒட்டி இடது புறத்தில் இருக்கும் CINE MUSICIAN’S UNION”  க்கு சொந்தமான கட்டடம்  
எங்கெங்கோ பூத்த மலர்கள் சேர்ந்து உருவாக்கும்  நந்தவனம் இங்கே தான் 


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம் 




நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்

ஆர்.வி.சரவணன்