வெள்ளி, பிப்ரவரி 08, 2019

சிலை தலைவர்





சிலை தலைவர் 
சிறுகதை 

நான்கு தெருக்கள்  எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு  அதுஅப்படியொன்றும் அது பரபரப்பான சந்திப்பு இல்லை தான்பக்கத்து மெயின் ரோட்டில் பாலம் கட்டப்படுவதால் அங்கே போக்குவரத்து நெருக்கடி அதிகமானதன் காரணமாக சில நாட்களாய் போக்குவரத்து இந்த வழியாய் திருப்பி விடப்பட்டிருந்ததுசாதாரணமான அந்த நான்கு முனை சந்திப்பு இன்று எல்லாரையும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டிருந்ததுவீடியோ கேமரா
மற்றும் மைக் சகிதமாகபரபரப்பான செய்தி தேடி அங்குமிங்கும் மீடியாகாரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடிகள் முளைத்து காற்றில் ஆடி கொண்டிருந்தது.

இந்த பரபரப்பிற்கு  காரணமே நான்கு முனை சந்திப்பின் மையத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெரிய கட்சி தலைவரின் சிலை தான்நான்கு தெருக்களின்  எந்த பக்கமிருந்து பார்த்தாலும்  அந்த சிலை தலைவர் உயரமான பீடத்தின் மீது நின்ற படி கும்பிட்டு  கொண்டிருப்பது தெரியும்மழைக்கு நனைந்தும்  வெயிலுக்கு காய்ந்தும் காணப்பட்ட அவர்வாகனங்களின் புகை மற்றும் தூசி முழுக்க தன் மீது அப்பி கொண்ட படி  தனது ஒரிஜினல் கருப்பு நிறத்தை மங்க விட்ட படி காட்சியளித்தார்அவரது பிறந்த நாளுக்காக மட்டும்கட்சியின் இப்போதைய தலைவர் முதல் கடை கோடி தொண்டன் வரை அவருக்கு மாலையிட்டு வழிபட முண்டியடிப்பார்கள்மற்ற நாட்களில்  கண்டு கொள்ளபடாத சிலை தலைவர் தான் அவர்.

அந்த சிலை மிக பெரிய முக்கியத்துவத்தை பெற்ற படி,  டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் செல்லும் அளவுக்கு தொண்டர் கூட்டத்தை அங்கே சேர்த்து விட்டிருந்ததுடிராபிக்கே நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகியிருந்ததுகாரணம் அந்த சிலை இடிக்கப்பட்டிருந்தது தான்.
"தலைவாஉன்னை இடிக்கிறதுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ"  ஒரு குடி மகன் கூட்டத்தில் அரற்றி கொண்டிருந்தான்.
"எப்படி கம்பீரமா இருந்தார் நம்ம தலைவர்இப்படி பண்ணி வச்சிருக்கானுங்களே "
"இந்த வேலையை யாரு பண்ணானு தெரிஞ்சாகணும்"
"மவனே அவன் மட்டும்  கைல கிடைக்கட்டும் நடக்கிறதே வேற"
"அது வரைக்கும்  இங்கருந்து போக கூடாதுடாஎல்லாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீங்க "
"எதிர்க்கட்சிகாரன் போன வாரம் மீட்டிங்ல சொன்னான்இந்த சிலை டிராபிக்குக்கு இடைஞ்சலா இருக்குஇதை எடுக்கணும்இல்லே நாங்க எடுக்க வேண்டி வரும்னு சவால் விட்டான்அவனுங்க தான் இதை பண்ணிருக்கணும்"  ஒருவன் ஆவேசமாய் கத்தி கொண்டிருந்தான்


அந்த நான்கு முனை சந்திப்பில் இருந்த  டீ கடை தொண்டர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததுகல்லாவில் காசு வாங்கி போட்ட படி ஊழியர்களை வேலை வாங்கி கொண்டிருந்தார் அந்த டீகடைக்காரர்.  ஏதேனும் தகராறு நடந்தால் ஷட்டரை எப்படி மூடுவது என்ற பதட்டம்  அவரிடம் இருந்தது
அங்கே டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர்களில் ஒருவன்,
"சிலை இருக்கிற கோலத்தை பார்த்தியாஅழுக்கை சுரண்டி எடுத்தா ஒரு அரை லாரி அள்ளலாம்.  என்னிக்கு அந்த தலைவருக்கு பிறந்த நாள் வருதோ அன்னிக்கு தான் பத்து பாத்திரம் துலக்கிய மாதிரி பளிச்சுன்னு வச்சிருப்பானுங்கமத்த நாள்ள கண்டுக்க கூட மாட்டானுங்கஇப்ப என்னடான்னா  சிலை உடைஞ்சிடுச்சுனு பெரிசா சீன் போடறானுங்க."
"சார் டீ சாப்பிட வந்தா அதை மட்டும் பாருங்கஅரசியல் வேண்டாமே"  டீ கடைக்காரர் சொன்னார்.
"அரசியல் நடக்கிற இடத்துல தானே நீங்க கடை வச்சிருக்கீங்கபெரிதாக ஜோக் சொன்னது போல் சிரிக்க ஆரம்பித்தான்.
"இல்லீங்ககட்சி ஆட்கள் நிக்கிறாங்கஇத கேட்டா சண்டைக்கு வந்துடுவாங்கஉங்களுக்கு என்னகுடிச்ச கிளாஸை வச்சிட்டு கிளம்பிடுவீங்கஆனா நானும்  என் கடையும் என்ன ஆவறது  ." அவஸ்தையாய் சிரித்த படி சொல்லி கொண்டிருந்தார்.
அங்கே நுழைந்த போலீசை பார்த்ததும் அது வரை பேசி கொண்டிருந்தவர்கள் மௌன விரதம் கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்.
"என்னப்பாநேத்து நைட் எத்தனை மணிக்கு கடை முடினே ?"
"10 மணிக்கு மூடிடுவேன் சார்"
நீ கடையை மூடுற வரைக்கும் யாரையாவது  சிலை கிட்டே பார்த்தியா?"

 "
இல்ல சார்டீகடைக்காரர் சொன்னார்.
"இந்த தெருவுல யாரு கடையை லேட்டா மூடுவாங்க
"ஒரு நைட் டிபன் சென்டர் எதிர்த்தாப்பிலே இருக்கு பாருங்கஅவங்க மூடுறதுக்கு 12மணி ஆகிடும்"
"நடுரோட்டிலே கொண்டாந்து சிலையை வச்சிடுறாங்கஇப்ப எவன் இடிச்சானு எங்க போய் கேட்கிறது?" சலித்து கொண்ட படி எதிர் கடை நோக்கி செல்ல ஆரம்பித்தார் அந்த 
போலீஸ் காரர்.

இதற்குள் அங்கே சிலையை சுற்றிலும் குழுமியிருந்த தொண்டர்களின் கோஷம் அதிகமாகி கொண்டிருந்ததுஆவேசமான குரல்கள்  கூட்டத்திலிருந்து  வந்து கொண்டிருக்கடிராபிக் க்ளியராக காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து கிடைக்கும் கேப்பில் உள் நுழைந்து தாண்டி சென்று கொண்டிருந்தார்கள்அப்படி செல்ல முடியாதவர்கள் வாகனங்களில் அமர்ந்த படியே சலிப்புடன் பேசி கொண்டிருந்தார்கள்.
 "இப்படி போராட்டம் பண்ணா  நாங்க எப்பய்யா  போறது ஆபீஸ்க்கு?"
டூ வீலரில் காத்திருந்த ஒருவன் துணிச்சலாக வார்த்தைகளை விட்டு விட,  போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவன்  கத்தி போல் வார்த்தையை வீசினான் 
"இன்னிக்கு ஒரு நாளைக்கு போகாம இரு.  உன் குடி ஒண்ணும் முழுகி போயிடாது"

அப்போது தான் அந்த ட்ராபிக் நெரிசலில் தன் டூ வீலரை கொண்டு வந்து நுழைத்த  ஒரு வாலிபன்  "என்னாச்சுஎன்றான்மற்றவர்கள் சொன்னதை கேட்டு விட்டு,
"இவங்களே உடைச்சிட்டு இவங்களே போராட்டம் பண்ணுவாங்களாசொல்லி கொண்டே தன் செல் போனில் அந்த இடத்தை படம் பிடித்து முக நூலில்ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்தான்.

சிலையை சுற்றி வந்து போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு கொண்டிருந்தார்கள்.அந்த சிலையின் கீழே இருந்த பீடம் பாதி இடிந்த நிலையில் காணப்பட்டதுஅதில் பதிக்கபட்டிருந்த  திறந்து வைத்ததலைமை வகித்தவர்கள்  பட்டியலை கொண்டிருந்த  கல்வெட்டு  முழுக்க பெயர்ந்து போய் எங்கும் சிதறி கிடந்ததுசிலைக்கு இதனால் ஆபத்து ஏதும் இல்லை என்றாலும் பீடத்தை சுற்றிலும் கட்டபட்டிருந்த அலங்கார சுற்று சுவரின்  ஒரு பகுதி பெருமளவில் இடிக்கபட்டிருந்தது.இன்னும் கொஞ்சம் இடிக்கபட்டிருந்தால் சிலை கீழே சாய்ந்திருக்கும்.
"டயர் தடயம் தெரியுதுஏதோ வண்டியை வச்சி மோதி தான் இடிக்க ஆரம்பிச்சிருக்காங்கயாராவது வரதை பார்த்தவுடன் போயிருப்பாங்க"  ஒரு  போலீஸ் அதிகாரி நேரில் பார்த்தது போல் சொல்லி கொண்டிருந்தார்.
"இதுல இன்னொரு விஷயம் இருக்கு " என்றார் இன்னொரு அதிகாரி.
"அவங்க நோக்கம் சிலையை உடைக்கிறதாஇல்லே சிலைக்கு கீழே இருக்கிற பெயர் பலகைல இருக்கிற பெயரை உடைக்கிறதானு தான் தெரியல"
"எதுக்காக இப்படி சொல்றீங்க?" இன்னொரு அதிகாரி தொப்பியை சரி செய்த படி கேட்டார்.
கட்சிக்குள்ளேயே ரெண்டு அணி இருக்கு சார்.  ஒரு அணியோட முக்கியமான ஆளோட  பேர் இதுல இருக்குமற்றொரு அணிக்கு இது  பிடிக்காததால உடைச்சிருக்கலாம்"
இவ்ரகள் பேசுவதை பக்கத்தில் இருந்த படி கேட்டு கொண்டிருந்த  வட்ட செயலாளர் 
சொன்னார்
"சார் இடிச்சது எதிர்கட்சியோட வேலை தான்.யாரு செஞ்சானு பாருங்கஎன் கிட்டே சந்தேக லிஸ்ட்ல சில பேர் இருக்காங்கஅவங்களை கூப்பிட்டு விசாரிங்கஅத விட்டுட்டு எங்களுக்குள்ளேயே பிரச்னையை உண்டு பண்ணாதீங்க "
"இது போலீஸ் புத்திஇப்படி தான் எல்லா விதத்திலும் யோசிப்போம்நீங்க பிரச்னை பண்ணாம கிளம்புங்கஎன்றார் கறார் போலீஸ் அதிகாரி.
முதல்ல சி சி டிவி கேமரா எதுனா சுத்தி உள்ள கடைகள்ல்ல இருக்கானு பாருங்க."   ஆணையிட்டார்.
கேமரா வைக்கிற அளவுக்கு பெரிய கடைன்னு இங்க எதுவுமே இல்லஎல்லாம் சாதாரண கடைகள் தான், "
விசாரிங்கஎதுனா க்ளூ கிடைக்கும்"
அங்கிருந்து நகர்ந்த கான்ஸ்டபிள் "எவனை கேட்டாலும் தெரியலனே சொல்றனுங்க
எத்தனி பேர் வீட்டு கதவை தட்டி கேட்கிறதுதன் சக கான்ஸ்டபிளிடம் சலித்து 
கொண்டார்.
ம் ஹூம் என்று சலித்து கொண்ட அந்த வட்டம்,  தன் பாக்கெட்டிலிருந்து  செல் போன் எடுத்து  "ஆள் பத்தாதுமுடிஞ்சா ஒரு ஆயிரம் 
பேரை திரட்டிட்டு வா. இந்த தொகுதில கட்சி எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குனு கட்சிக்கு நாம காட்டியே ஆகணும்அதுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு " எனக் கட்டளையிட்டார்.
சுற்றி அமர்ந்திருந்த தொண்டர்கள் "கண்டு பிடிகண்டு பிடிஇடிச்சவனை கண்டு பிடிஎன்ற படி கோஷமிட்டு கொண்டிருந்தார்கள்.
"நாங்க  கண்டு பிடிச்சிடுவோம்நீங்க அமைதியா கலைஞ்சு போயிடுங்கஉங்களால் ட்ராபிக் ஜாம் ஆகிடுச்சு பாருங்கடிராபிக் போலீஸ் சொல்லி கொண்டிருந்தார்.
"சார் அத பத்தியெல்லாம் எங்களுக்கு கவலையில்லேஇடிச்ச கும்பலை எங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்கஅந்த ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கியவன் ஆவேசமாய் சொன்னான்.
"உங்க தலைவரே  வீணா பிரச்னை பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கார் "கலைஞ்சு போங்க"
"அவரே தான் பிரச்னை முடியற வரைக்கும் நகர கூடாதுனு எங்களுக்கு சொல்லிருக்கார்
"ஆமாம்பிரச்னை பண்ணாதேன்னு சொன்னாபண்ணனும்னு அர்த்தம்ஒரு நிருபர் தன் நண்பனிடம் சிரித்த படி சொல்லி கொண்டிருந்தான்.
..................செய்திகளுக்காக உங்கள் கல்பனா என்று கேமரா பார்த்த படி பேசி கொண்டிருந்தார் ஒரு பெண் ரிப்போர்ட்டர்.

டிராபிக்கை இப்போது வேறு பக்கம் திருப்பி விட ஆரம்பித்திருந்தார்கள்அவங்களை விரட்டாம நம்மை சுத்திட்டு  போக சொல்றாங்க பாரு என்று சலிப்புடன்  மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

" சார் இந்த கட்சியோட  எதிர்கட்சி பிரமுகரை யாரோ வெட்டிட்டாங்களாம். இப்ப அந்த கட்சிகாரங்க படை திரட்டிகிட்டு இங்க வந்திட்டிருக்காங்க"   என்ற  தகவலை ஓடி வந்து இன்ஸ்பெக்டர் சொன்னவுடன் போலீஸ் அதிகாரி  உத்தரவு பிறப்பித்தார் 


உடனே  தடியடி பிரயோகத்தை போலீஸ் கையிலெடுத்தது.  அடி தாளாமல் தொண்டர்கள் திசைகொருவராய் ஓட ஆரம்பிக்க, அந்த இடமே ரணகளமானது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்த படி அந்த சிலை தலைவர் புன்னகைத்து கொண்டிருந்தார். 
------

அந்த நெடுஞ்சாலையில் இருந்த ஹோட்டலின் முனனே அந்த லாரி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர் தண்ணீர் பாட்டில் எடுத்து முகம் முகம் கழுவினார். கிளீனர் இறங்கி வந்து சுற்றுமுற்றும் பார்த்தபடிகொட்டாவி விட்டான். சட்டென்று அவன் பார்வையில் அது பட்டது. "அண்ணே லாரில ஒரே சிறாய்ப்பா இருக்கு. எங்கேயாவது இடிச்சுட்டீங்களா" "ஆமாண்டா. வண்டி ஓட்டிட்டு வரப்ப லேசா கண்ணு சுழட்டி தூக்கம் வர மாதிரி இருந்துச்சு. மல்லுகட்டி ஓட்டிட்டு வந்தேன். அப்படியும்  தூக்கம் வந்து ரோட்டில் இருந்த ஏதோ சிலை மேல லாரி மோதிட்டு வரும் படி ஆகிடுச்சு" 
டிரைவர் சாதாரணமாக சொல்லி கொண்டிருந்தார்.

ஆர்.வி.சரவணன் 

இந்த சிறுகதை குங்குமம் 25-01-2019 இதழில்  வெளியானது. 
ஆசிரியர் குழுவிற்கு நன்றி.