சனி, ஏப்ரல் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-29




இளமை எழுதும் கவிதை நீ-29


தூண்டிலில் மீன்கள் மாட்டுவது அதிசயமல்ல உன் விழி மீன்களில் 
தூண்டிலாய் நான் மாட்டினேன்  இதுவே அதிசயம் 
      

சிவா மேக்கப் கலைத்து விட்டு வெளி வந்த போது அருளும் பாலுவும் பிடித்து கொண்டார்கள்

 "கலக்கிட்ட சிவா சத்தியமா நீ இப்படி நடிப்பே னு நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்கப்பா கை தட்டினார் னா பார்த்துக்கயேன்"  செல் போனில் எடுத்த படத்தை  காட்டினான் அருள். நிஜம் தான் அவனது அப்பா வின் முகத்தில் இருந்த  பெருமிதம் பார்த்து சிவாவுக்கே ஆச்சரியமாக இருந்தது

(அடுத்த  இதழில் நிறைவுறும்) 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு ஜெயராஜ்  அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

சனி, ஏப்ரல் 20, 2013

இளமை எழுதும் கவிதை நீ-28






இளமை எழுதும் கவிதை நீ-28



உனக்கு வெட்கம்  என்பது அணிகலனா ஆயுதமா
பட்டிமன்ற விவாதம் எனக்குள்ளே 


சிவா, தன் நண்பர்கள்  தம்பி பின் தொடர சுரேஷை பார்க்க வேகமாய் சென்று கொண்டிருந்தான். கார்த்திக் பாலு கீதா விடம்  வருத்தபடுவீங்க னு தான் சொல்லல என்று சொல்லி சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.மணி சொன்னதை கேட்டு அருளுக்கு தான் அதிக கோபம்   வந்தது. ஆனால்  சிவாவின்  வேகத்தை பார்த்து இப்போது அவனே மிரண்டான்  

உமாவும் கீதாவும் " காலேஜ் முடியற நேரத்தில எதுக்கு வீணா  பிரச்னை" என்றனர்

தொடரும்

(இன்னும் இரு அத்தியாயங்கள்) 

ஆர் .வி.சரவணன்

ஓவியம் :  ஓவியர் திரு.மாருதி அவர்கள்   


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-27



இளமை எழுதும் கவிதை நீ-27
   
உன் சொற்களுக்கு மயங்காவிடினும்  இதழ்களின் அசைவிற்கு 
நான் மயங்கி  தான் ஆக வேண்டும்  

சிவா உமாவுடன்  ஒன்றாக ஸ்கூட்டி யில் வந்து இறங்கிய போது 
அங்கிருந்தவர்களின் கண்கள் அவர்களையே மொய்த்திருந்தன 

 சுரேஷ்  பொறாமையில் தன்   இடது  காலால் சுவற்றில் உதைத்தான்  

  சிவாவின்  சந்தோசம்  அவனது வேகமான நடையில்  இருந்தது



தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம்  நன்றி :  திரு.மணியன்  செல்வம் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

இளமை எழுதும் கவிதை நீ-26







-

இளமை எழுதும் கவிதை நீ-26



என்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ 
உன் இதழ்களின் ஒத்தடம் 



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே கதை இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் ஆனால் 
பாருங்கள் இன்னும் ஏழு காட்சிகள் இருக்கின்றன அவற்றை இரண்டு அத்தியாயங்களில் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் (எனது இனிய  நண்பர் கிரி முடிப்பதில் 
அவசரம் வேண்டாம் என்று சொல்லியிருப்பதையும்  கருத்தில் கொண்டு) இந்த தொடர்கதை இன்னும் நான்கு அத்தியாயம் அதாவது முப்பதாவது அத்தியாயம் வரை தொடர்கிறது அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




சிவா காலையில் எழும் போதே அவனை டென்சன் தொற்றியிருந்தது.
காரணம் இன்று தேர்வுகள் ஆரம்பிக்கிறது.  தன்னை நிரூபிக்க இது ஒரு  சான்ஸ்.முதல் ரேங்க் வாங்க முடியவில்லை என்றாலும் அரியர்ஸ் போல் ஒரு 75 பர்சென்ட் மார்க் எடுத்து விட வேண்டும் என்று துடிப்பு அவனிடம் இருந்தது. உமாவின் அசுர படிப்பையும் புத்திசாலி தனத்தையும் பார்க்கும் போது தாம் ஆவலுடன் பரீட்சையில்  மோதுவதாக சவால் விட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று நினைத்து கொண்டான்.அருளிடம் நான் சீக்கிரமாக செல்கிறேன் அங்கு போய் கொஞ்சம் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பியவனுக்கு இன்று இப்படி ஒரு அனுபவம் தனக்கு கிடைக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி :திரு இளையராஜா அவர்கள் 

he story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

வியாழன், ஏப்ரல் 04, 2013

இளமை எழுதும் கவிதை நீ-25





இளமை எழுதும் கவிதை நீ-25


பூவினும் மெல்லிய என்ற வரிகளுக்கான அர்த்தம் 
கிடைத்தது நீ என் கரம் பற்றிய போது 


சிவாவின் அம்மா, மாடிப்படி சுவரின் கை பிடியை பிடித்தவாறு படிக்கட்டில் தளர்ந்த தோற்றத்துடன்  நின்று கொண்டிருந்தார் 

இதை பார்த்தவுடன் கார்த்திக் கீதா இருவருக்கும் தாங்கள் காண்பது கனவோ என்று தோன்றிய மறுகணம் கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்த அவர்கள்  பசுவை கண்டவுடன் ஓடும் கன்று குட்டி போல் சென்றார்கள் 


தொடரும் 

(இன்னும் இரு வாரங்கள்)

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் : வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.