புதன், மே 23, 2012

தஞ்சை பெரிய கோயில்


தஞ்சை பெரிய கோயில்


ஆயிரம் ஆண்டுகளாய் தரணி போற்றும் தமிழரின் பெருமை
மாமன்னன் ராஜராஜனின் திருப்பணியில் உருவான பொக்கிஷம்
தஞ்சை பெரிய கோயில் இந்த பிரமாண்டத்தின் அழகை என் செல் போனில் ஆர்வமுடன் க்ளிக் செய்தேன் அவை இதோ














இந்த கோவில் 1004 ம் வருடம் தொடங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது

இந்த கோவில் உருவாக்கத்திற்கு நிதியை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவரது பெயரையும் தன் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல் வெட்டில் பொரிக்க ராஜ ராஜன் ஆணையிட்டார் என்கிறது வரலாறு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஆர்.வி.சரவணன்

வியாழன், மே 17, 2012

அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9



அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9

இந்த படத்தை பற்றி எல்லோரும் எழுதிய பிறகு நீ எழுத என்ன இருக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது ஒரு நல்ல படைப்புக்கு என்னால் ஆன ஒரு பாராட்டை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பதிவு செய்திருக்கிறேன்


பணக்கார வர்க்கம் செய்யும் தவறு சட்டத்தின் கைகைள் சிக்காமல் இருக்க துணை போகும் அதிகார வர்க்கத்தால் ஏழைகள் அடையும் பாதிப்பை அழுத்தமாக நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில கதாபாத்திரங்களை கொண்டு அழகாய் மிக இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

முதல் பாதியில் ரோட்டோரத்தில் கஷ்டப்படும் ஏழை மனிதர்களை பற்றிய கதையும் பிற்பாதியில் பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றிய கதை யும் தந்து இவை இரண்டையும் முடிவில் ஒன்றாக சேர்க்கும் திரைக்கதை அதிலும் முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு தொடர்புடைய வேறொரு காட்சி பிற்பாதியில் வரும் கதை பாங்கை நான் மிக விரும்பி ரசித்தேன்

ஸ்ரீ

வேலு வாய் நடித்திருக்கும் இளைஞன் ஸ்ரீ பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் அவர் ஊர்மிளா வை பார்த்ததும் அடையும் சந்தோஷம் அவரை பார்க்கும் போதெல்லாம் முகத்தில் தோன்றும் பரவசம் கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ட்ரைனிங் செய்யும் போது அவர் கை கட்டி வேதனையுடன் சொல்லும் காட்சி என்று அவரது நடிப்புக்கு சில சான்று

ஊர்மிளா மகந்தா

ஊர்மிளா முகத்தில் ஒரு சோகம் கவ்விய தோற்றதுடன் ஸ்ரீயை கண்டவுடன் வெறுப்பை உமிழும் முக பாவத்துடன் வளைய வரும் அவர் கிளைமாக்ஸ் ல் முகம் பாதி சிதைந்து உருக்குலைந்த தோற்றதுடன் வரும் போது நம்மிடம் பரிதாபத்தை பெற்று கொள்கிறார்
அந்த கடைசி காட்சி பார்க்கும் போது அதிர்ச்சியில் நம் ரத்தம் கண்டிப்பாக உறையும்

முத்துராமன்

அவர் நடித்திருக்கும் இன்ஸ்பெக்டர் கரெக்டர் அவருக்கென்றே உருவாகியது போல் கன கச்சிதமாய் இருக்கிறது. அவரை நேரில் பார்த்தால் அவர் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கும் ஆத்திரம் வரும் அளவு சிறப்பாய் நடித்திருக்கும் அவர் கை பற்றி குலுக்கலாம்

சின்னசாமி

பையன் என்னமாய் நடித்திருக்கிறான் அதிலும் நாடகத்தில் அவன் ஆடும் நடனம் கண் முன்னே நிழலாடுகிறது நீ நல்லா வருவடா என்று தான் சொல்ல தோன்றுகிறது

மிதுன் முரளி, மனிஷா யாதவ்

இருவரும் பணக்கார இள வயதினரை கண் முன் நிறுத்தும் அளவுக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் கை கோர்க்கிறது

இயக்குனர் பாலாஜி சக்திவேல் திரைக்கதையை அழகாய் நேர்த்தியாய் கோர்த்திருக்கும் விதம் படத்திற்கு மிக பெரிய பலம். அதிலும் அனைவரும் புது முகங்கள் எனும் போது அவரது கடும் உழைப்பு தெரிகிறது. பிளாட் பார கடை முதலாளியின் காலில் மாட்டிய போட்டோவை எடுக்கும் ட்ரிக், மியூசிக் இல்லாமல் வரும் பாடலில் ஸ்ரீ காதலியுடன் குடும்பம் நடத்துவதாய் காணும் கனவு காட்சிகள்
அந்த சிறுவன் சின்னசாமி இப்பலாம் யாரு கூத்து பார்க்கிறாங்க அதான் வயித்து பிழைப்புக்காக வேலை செய்ய வந்துட்டேன் என்று சொல்லும் போது அந்த கலை யை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்று கோடிட்டு காட்டும் விதம் என்று பல காட்சிகள் எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாத அளவுக்கு படம் நெடுக நம்மை ரசிக்க வைக்கும் காட்சிகள் தான்
படம் முடிந்து எழும் போது பாலாஜி சக்திவேல் சார் தங்கள் கைகள் அழுந்த பற்றி கை குலுக்கும் ஆசை வருகிறது

இந்த வழக்கை ஆதரித்து வாதாடுவோம், வாகை சூட வாழ்த்துக்கள் சொல்வோம்

ஆர்.வி.சரவணன்





புதன், மே 09, 2012

கடந்து செல்கையில் ....


கடந்து செல்கையில் ....


நீ
எனை
எப்போதும்
தென்றலாய்
தான்
கடந்து செல்கிறாய்
இருப்பினும்
புயல்
கடந்த
பூமியாகிறது
என்
மனம்

ஆர்.வி.சரவணன்



வெள்ளி, மே 04, 2012

நான் சொல்வது யாதெனில்....


நான் சொல்வது யாதெனில்....

(சுஜாதா என்றொரு சிகரம் + சில மனிதர்கள் + வேகம் விவேகமல்ல + மின் வெட்டிலும் மின்சாரம்)

படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு சுஜாதா சார் எழுத்துக்கள் என்றால் கொள்ளை பிரியம் சிறு வயதில் கொலையுதிர்காலம் என்ற தொடர் குமுதத்தில் வந்தது அந்த தொடரை படிக்க ஆரம்பித்தவன் தான்.அதிலிருந்து அவரது ரசிகன் ஆகி விட்டேன் .அவர் பெயரிட்ட ஒரு புத்தகத்தையும் விடுவதில்லை. சமீபத்தில் அவரது குறு நாவல்கள் தொகுதி படித்தேன். சென்னை பாரி முனையில் உள்ள தம்பு செட்டி தெரு செல்லும் போதெல்லாம், கணேஷ் வசந்த் நினைவு வந்து விடும் எனக்கு. கூடவே சுஜாதா வின் நினைவும். சுஜாதாவின் அற்புத படைப்பு கணேஷ் வசந்த்.என்றால் கடவுளின் மிக அற்புதமான படைப்பு சுஜாதா அவர்கள். ( ஹாப்பி பர்த்டே சுஜாதா சார். நாங்கள் உங்கள் எழுத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் )

------

ஊருக்கு செல்ல ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்டில் ஏற நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன் ரயில் பிளாட்பாரம் வந்து கொண்டிருந்தது நின்று கொண்டிருந்தவர்கள் வரிசையில் சுறுசுறுப்பாக, வரிசையில் நிற்காதவர்கள் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள முனைய ஒரே கூச்சல். அப்போது எனக்கு முன்பு ஒருவர் நுழைய முயல அவரை திட்டி நாங்கள் வெளியேற்றி னோம். கூடவே எனக்கு முன் நின்றிருந்த ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். "நாங்க எவ்வளவு மணி நேரமா நிக்கிறோம் நீ இப்ப வந்துட்டு உள்ளே நுழைய பார்க்கிறே" என்று அவர் சொல்ல, உள்ளே நுழைய முயன்றவர் அதற்கு பதில் கொடுத்தார் பாருங்கள்." நீயே இப்ப தான் உள்ளே நுழைந்தாய் நீ என்னை சொல்கிறாயா என்று சொன்னதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பே நின்று கொண்டிருந்ததால் எப்படியும் கண்டிப்பாக இரண்டு மணி நேரமாவது நின்றிருப்பார்.அப்படி நின்றவரை பார்த்து , தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி சர்வ சாதரணமாக சொல்லும் இவரை பற்றி நினைக்கையில் என்ன மனிதன் இவர் என்று நினைக்க தோன்றுகிறது (சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி?)

------

சென்ற வாரம் நான் திருப்பூர் வரை சென்றிருந்தேன் நான் இரவில் சென்ற கரூர் டு ஈரோடு தனியார் பேருந்தில் முன் இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம் டிரைவர் வேர்கடலை சாப்பிட்டு கொண்டே பேருந்தை ஓட்டி கொண்டிருந்தார் பின் போன் வரவே செல் போன் பேசிய படியே வண்டி ஓட்டினார் பின் அவர் நண்பர் ஒருவர் வரவே பக்கத்தில் அமர்ந்த அவருடன் பேசிய படியே ஓட்டி கொண்டிருந்தார் அவரது பொறுப்பற்ற இந்த செயல்கள் என் முதல் இருக்கையில் அமர்ந்த படி சென்று கொண்டிருந்த் எங்களின் பி பி யை எகிற வைத்தது ( உங்கள் கவனம் வண்டி ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தேவலை)

------

நான் ஏறிய மற்ற அரசு பேருந்துகளில் எல்லாம் டிரைவர் சீட்டுக்கு முன் உள்ள கண்ணாடியில் ஒரு சிறுமியின் போட்டோவுடன் அப்பா ப்ளீஸ் வேகமா போகாதீங்க என்ற எழுத்துக்களுடன் ஸ்டிக்கர் ஓட்டபட்டிருப்பதை பார்த்தேன். வேகமாய் சென்று கொண்டிருக்கும் டிரைவர்கள் இந்த வாசகம் பார்க்கும் போது தானாகவே வேகத்தை குறைக்கும் எண்ணம் வரும். கண்டிப்பாக இந்த வார்த்தைகளுக்கு பலன் இருக்கும் என்று நினைக்கிறேன் இது நல்ல முயற்சி (வேகத்திற்கு விடை கொடுப்போம் )

------

மின்வெட்டிலும் மின்சாரம் இது எப்படின்னு கேட்கறீங்களா
மின் வெட்டின் கொடுமை தாங்காமல் வீட்டில் இன்வெண்டர் வாங்கி போட்டு விட்டேன். பொருத்திய பின் அடுத்து மின் வெட்டு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகி விட்டது.(திட்டாதீங்க இன்வெண்டர் செக் செய்வதற்காக தான் ) ஆனால் பாருங்கள் தினமும் நைட் மின் வெட்டு படுத்தி எடுக்கும் அன்று பார்த்து பவர் கட்டே ஆகவில்லை. பவர் கட் ஆனது உடனே மீண்டும் வந்து விட்டது.(நிஜமாகவே நைட் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கட் ஆகும் கரண்ட் ஒரு மணி நேரம் கழித்து வரும் இப்போது அப்படியில்லை கட் ஆனாலும் உடனே வந்து விடுகிறது பகலில் மட்டும் கட் ஆகிறது ) நான் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தீங்களா இவ்வளவு செலவு பண்ணி இன்வெண்டர் போட்டவுடன் பவர் கட் ஆகலை பாருங்க என்றேன் கொஞ்சம் நொந்து போய்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான அம்மா சொன்னார்கள். "நீங்க பண்ணின செலவால் எல்லாருக்குமே நல்லது நடந்திருக்கு னு சந்தோசபடுங்க தம்பி" என்றார். ( கண்டிப்பாக இது எனக்கு சந்தோசமான ஒன்று தான் )

ஆர்.வி.சரவணன்