வெள்ளி, டிசம்பர் 10, 2010

எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்

எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்

நம் நண்பர் எப்பூடி ரஜினி படங்கள் பற்றிய தொடர் பதிவுக்குஅழைத்திருந்
தார். அவருக்கு என் நன்றி

ரஜினி படங்கள் எனும் போது அவர் நடித்த
கதாபாத்திரங்களில் இருந்து பத்து படங்கள் செலக்ட்
செய்வது கஷ்டமான விஷயம் இருந்தாலும் எனது பார்வையில்
எனது ரசனையில் செலக்ட் செய்துகொடுத்திருக்கிறேன்


அவர் நடித்த கதாபாத்திரங்கள்
நிறைய இருந்தாலும்தனித்து தெரியும் பல கதாபாத்திரங்களில்
எனை கவர்ந்தவை இதோ உங்கள்முன்னே



ஸ்ரீ ராகவேந்திரர்

ஒரு ஆக்சன் ஹீரோ ஒரு படத்தில் எல்லோரும்
ஏற்று கொள்ளும் வகையில்அமைதியான ஒரு ஆன்மீக மகானை
கண் முன்கொண்டு வந்து நிறுத்த முடியுமாஎனும்போது அந்த படத்தில்
ஒரு மகானாக வாழ்ந்திருந்தார். என்றே சொல்லலாம்
என்னை மிகவும் கவர்ந்த ரஜினியின் கேரக்டர் இது



கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பீடத்தில் அமரும்போது
அங்கே அவர் ரஜினியாகதெரியவில்லை ராகவேந்திரராகவே தெரிந்தார்.





தம்பிக்கு எந்த ஊரு

ரஜினி இந்த படத்தில் ஆச்சனுடன் சேர்ந்து காதல் குறும்புடன் காமெடி யில்கலக்கியிருந்தார் இந்த படத்தில் அவருக்கு காமெடி ஈசியாக வந்திருந்தது இந்தபடம் எப்போதுபோட்டாலும் உடனே பார்க்க அமர்ந்து விடுவேன்

அவர் படிக்கும் போது பாம்பு வந்து விட அவர் அதை கண்டு நடுங்குவாரே
முகத்தில் அஷ்ட கோணலாக அந்த சீன் எனை கவர்ந்தது




தளபதி

இந்த படம் ரஜினிக்கு ஒரு மாஸ் என்றே சொல்லலாம் சோபனாவை காதலோடு பார்ப்பதிலும் அதே சோபனா தம்பியின் மனைவி என்றவுடன் கண்ணியத்துடன் நலம் விசாரிப்பதிலும் இவர் தான் தன் தாய் என்று தெரிந்தவுடன் மறைவில் இருந்து தாய்ப்பாசத்தில் ஏக்கத்துடன் பார்ப்பதிலும் நண்பனுக்கு என்றால் எதுவும் செய்ய தயாராய் இருப்பதிலும் ரஜினி யின் நடிப்பு மிளிர்கிறது

கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தையின் போது கோபத்துடன் எழுந்து கை வைடா பார்க்கலாம் என்று சீரும் காட்சி



தில்லு முள்ளு

இந்த படம் ரஜினியின் நடித்த காமெடி படங்களில் எனக்கு பிடித்த ஒன்று
சந்திரன் வேடத்தில் வரும் ரஜினியின் நடிப்பு பிடித்திருந்தாலும்
இந்திரனாகவரும் கேரக்டர் என்னை சபாஷ் போட வைத்த
ஒன்று அவர் செய்யும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்


ராகங்கள் பதினாறு பாடலில் அவரது ஸ்டைல் நடிப்பு
நடை அனைத்தும் எனக்கு
பிடிக்கும்

தர்மத்தின் தலைவன்

இந்த படத்தில் வரும் ப்ரொபசர் கேரக்டர் ஆக்சன்
ரஜினியிடம் நாம் அந்த நாளில்எதிர்பார்க்காத ஒன்று
கண்ணியமான பேராசிரியர் வேடத்தில் அஹிம்சையை
போதிப்பவராக அவர் நடித்திருந்தது என்னை மிகவும் கவர்ந்தது


வேட்டி இல்லாமல் மறந்து போய் வெளியில் சென்று விட்டு
அவர் வீடு வந்து விகே ராமசாமியிடம் வேட்டி வாங்கி கொண்டு விட்டு
சுமதி பார்த்துச்சா என்றுஅப்பாவியாய் கேட்க அதற்க்கு அவர் ஊரே பார்த்துடுச்சு
சுமதி பார்த்தா என்னபார்க்காட்டி என்ன என்று சொல்வார்
வேட்டியை கட்டி கொண்டு எங்கே எனைதுரத்தி வந்த நாய் என்று
வெளியில் செல்வார் இந்த சீன் ரொம்ப ரசித்தேன்




பாட்ஷா
இந்த படத்தை பற்றி நான் ஏற்கனவே என் தளத்தில் இடுகையாகதந்திருக்கிறேன் நம்நண்பர்களும் அவர்களுக்கு பிடித்த படங்கள் லிஸ்டில் இதை தந்திருக்கிறார்கள் நானும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது
ஒருதாதா வாகஇருந்திருந்தாலும் அதையெல்லாம் உள்ளுக்குள் அடக்கிவிட்டுசாதாரண ஒருஆட்டோ டிரைவராக மென்மையாக வலம் வருவது என்னைகவர்ந்த ஒன்று

தன் தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் இல் சீட் வாங்க வந்து
அங்கேஎனக்குஇன்னொரு பெயர் இருக்கு என்று அமைதியாககர்ஜிக்கும் அந்த காட்சிஎன்மனதை விட்டு நீங்கா ஒன்று



மன்னன்

மனைவி கோடிஸ்வரியாக இருந்தாலும் தான் வேலை பார்க்கும்
கம்பெனியில்முதலாளியாக இருந்தாலும் தன சம்பாத்தியத்தில்
வாழ்வது தான் சிறப்புகௌரவம் என்று வாழும் இந்த கேரக்டர்
என்னை மிகவும் கவர்ந்தது இதில் ரஜினிவெகு பொருத்தியிருந்தார்
என்றே சொல்லலாம்
கவுன்டமணி யுடன் இனைந்து தியட்டரில் அவர்செய்யும் காமெடி எனக்கு பிடித்த காமெடிகளில் ஒன்று


பண்டரிபாய் விஜயசாந்தியை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் நான்வாக்கு கொடுத்து விட்டேன் என்று சொல்லும் போது ரஜினி அம்மாவை பார்த்து மறுப்பேதும் சொல்லாமல் உள்ளுக்குள் வேதனையை மறைத்த படி தலையாட்டுவார் இன்றும் என் கண்ணில் நிற்கும் காட்சி



நான் சிகப்பு மனிதன்

ஒரு காலேஜ் பேராசிரியர் வேடத்தில் அமைதியான ஆனால்
அநீதி கண்டுபொங்குகிற கேரக்டர் ஒரு ஆக்சன் ஹீரோவா இப்படி
என்றுநினைக்கும்வண்ணம் படத்தின் முதல் பாதியில் கலக்கியிருப்பார்
இந்த கேரக்டர்எனக்குரொம்ப பிடிக்கும்



பாக்யராஜ் ரஜினியிடம் பேசி விட்டு சென்றவுடன் ஒருவர் பேனா கேட்கஅவருக்குபேனா எடுத்து கொடுத்து கொண்டே சென்று கொண்டிருக்கும் பாக்யராஜை ஒருபார்வை பார்ப்பார் பாருங்கள் சூப்பரா இருக்கும்


சந்திரமுகி

ஒரு டாக்டராக மட்டும் இல்லாமல் கிளைமாக்ஸ் இல்
வேட்டையனாகவிஸ்வரூபம் எடுப்பாரே சான்சே இல்லை
அவரை தவிர வேறு யாராலும் செய்யமுடியாத கேரக்டர் இது
இந்த வேட்டையன் கேரக்டர் இன்னும் ஒரு பத்துநிமிடமாவது
இருந்திருக்கலாமே என்று என்னை ஏங்க வைத்த கேரக்டர்


சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து ஆடி கொண்டிருக்கும்
ஜோதிகாவை பார்த்துகொண்டே தன் தலை முடியை கோதுவார்
கூடவே ஜோதிகாவை பார்த்து முத்தம்ஒன்றும் கொடுப்பார்
இந்த சீன் எனக்கு பிடித்தது


அண்ணாமலை

இந்த படம் ஆரம்பத்தில் ரஜினி ஒரு அப்பாவியாய் பால்காரனாய்
இருந்து பின்நண்பனிடம் ஏமாந்து விஸ்வரூபம் எடுப்பார்.
சங்க தேர்தலில் செலக்ட் ஆகிசரத்பாபு இருக்கையில் வந்து அமர்ந்து
ஸ்டைலாக புகை விடுவார் அதே போல்படி ஏறும் போது சரத்பாபு
கீழே இறங்க இவர் மேலே ஏற அப்போது சரத்பாபு வைபார்த்து
மலை டா அண்ணாமலை டா என்பார் இந்த காட்சியும் எனை கவர்ந்தஒன்று

தேசம் கடந்தும் கடல் கடந்தும்
மொழி கடந்தும்
எண்ணிலடங்கா இதயங்களை
ஆளும் ரஜினி
அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

  1. Super Star Post super Saravanan..

    Good Sharing Man..Keep it up..

    பதிலளிநீக்கு
  2. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நல்ல தேர்வு.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல தெரிவுகள், நான் சிவப்பு மனிதன் நான் ஜோசிக்காதது, நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நல்லாயிருக்கு!
    அனேகப் படங்கள் பார்த்திருந்தாலும்
    மன்னன், பாட்சா, சந்திரமுகி ஆகியவை
    ரொம்பப் பிடிக்கும்.

    ரஜினிக்கு ஒரு வாழ்த்துப்பாடல் இதோ:


    http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்