ஞாயிறு, மே 30, 2010

முரண் பாடுகள்




முரண் பாடுகள்



பாலாபிஷேகம் செய்யப்பட்ட கட் அவுட் கீழே பாலுக்கு அழுது கொண்டிருக்கும் குழந்தை



வயிறார சாப்பிட்டாலும் பிச்சைக்காரனிடமிருந்து வரும் குரல் சாப்பிட்டு நாலு நாளாச்சு பிச்சை போடுங்க



மழை ஆரம்பிக்க தத்தம் குழந்தைகளை வீட்டுக்குள் பெற்றோர் அழைத்து கொள்ள கூட விளையாடிய அநாதை சிறுவன் நனைந்தான் மழையில்



கண்ட படி சிதறியிருக்கும் சர்க்கரையை நோக்கி படையெடுக்கும் வரிசை மாறா எறும்புகள்




குளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வந்தும் பாட்டிலுக்கும் வியர்க்கிறதே



படம் என் நண்பர் TNஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பியது




ஆர்.வி.சரவணன்

புதன், மே 26, 2010

என் கவிதை அரும்புகளும்

குடந்தையூர் ப்ளாக் ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களில் 25 வது இடுகையை நெருங்கும் இந்த நேரத்தில், சைவ கொத்துபரோட்டா அவர்களும் ஜெய்லானிஅவர்களும் எனக்கு இரு விருதுகளை அன்புடன் தந்து என்னை மேலும் உற்சாக படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு என் நன்றி.

இந்த இரு விருதுகளை என் இடுகைகளை தொடர்ந்து படித்து என்னை ஊக்கபடுத்தி வரும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்

ஐந்தாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் இந்த தளத்தில் வெளியிட வேண்டும் என்று விரும்பி வரைந்த ஓவியத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.

கூடவே எனக்கு தோன்றிய சில வரிகளையும் தந்திருக்கிறேன்



S. ஹர்ஷவர்தன்

பளிங்கு கின்னமெடுத்து அதில் தங்க குழம்பெடுத்து

வைர துகள்கள் சங்கமிப்பில்

விளைந்த பொற்சிலையே

உன் விழி பார்வை தொடுகையில்

என் கவிதை (வரிகள்) அரும்புகளும் பூக்கின்றன

ஆர்.வி. சரவணன்







திங்கள், மே 24, 2010

அவன் வீட்டிலே விஷேசங்க


பாக்யராஜ் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதைக்கு முயற்சித்திருக்கிறேன் படித்து பாருங்கள் .என்னடா எப்ப பாரு இப்படியே எழுதறான் என்று சலிப்படைய வேண்டாம்


அவன் வீட்டிலே விஷேசங்க

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்


தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்


எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்


இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்


டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல


அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே


இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு


முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல


அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி

திருமணத்திற்கு தயாரானான்


அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட


ஆம்


இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க

ஆர்.வி. சரவணன்





வெள்ளி, மே 21, 2010

காதலி (காதலை அழி)


எனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன்


காதலி (காதலை அழி)

எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங்கும் மாணவன். கல்லூரியில் காதல் கொண்டேன் தனுஷ் தோற்றத்தில் இருந்த நான் அசல் அஜித் போல் மாறி விட்டேன் .

காரணம் ஒரு பொண்ணு தான் அப்படிங்கிறதை நான் சொல்லவும் வேண்டுமோ. அவள் பெயர் கீதா என் கல்லூரியில் அவள் ஒரு இளவரசி (தமன்னா போல் இருப்பாள்)

அவள் கடைக்கண் பார்வைக்கு தவம் கிடப்போர் பலர் அவள் அழகுக்கு மயங்காதவர் எவரும் இலர் என்னை தவிர

நீ என்ன ரொம்ப யோக்கியமா அப்படின்னு கேட்காதீங்க வறுமைக்கு சொந்தமான குடும்பத்தில் பிறந்தவன் தினமும் கல்லுரி நேரம் போக வேலை செய்து சம்பாதித்து வீட்டுக்கு கொடுப்பவன் நான் படித்து முன்னுக்கு வந்து தான் குடும்பத்தை காப்பாற்றி யாக வேண்டியவன் எப்படி அழகுக்கு அடிமையாக முடியும்.


ஆகவே நான் அடிமையாகவில்லை மற்ற மாணவர்கள் போல் ஏங்கவில்லை ஆனால் ஏங்கும் காலமும் வந்தது .

எனது வகுப்பறையிலேயே அவளும் படிப்பதால் அந்த கீதாவே ஒரு நாள் என்னை தேடி வந்தாள் பாடத்தில் சந்தேகம் கேட்டு பாடத்திலுள்ள சந்தேகங்களை அவளுக்கு தீர்த்து வைத்தேன். என் இளமை ரொம்ப விரும்பி கேட்டதால் அவளை என் மனதினில் வைத்தேன்.


அவளது அழகும் அவள் பேச்சும் என் மேல் கரிசனம் கொண்டு அவள் விசாரிக்கும் அன்பும் என்னை கவரவே நாளுக்கு நாள் அவள் மீது ஈர்ப்பு அதிகமானது எனக்கு வேலை செய்து சம்பாதிக்கும் காசை வீட்டில் கொடுக்காமல் செலவழித்து நானே அசத்தலான டிரஸ் களில் வலம் வந்தேன் கல்லூரியில் எல்லோரும் என் மேல் ஆச்சர்யப்பட்டனர் அவளிடம் நான் பேசுவது கண்டு பொறாமை பட்டனர் .

எனக்கு அது மேலும் உற்சாகத்தை கொடுக்கவே அவள் எப்போது பேசுவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தேன் . அவளும் பேசினாள் என் தோற்றத்தை கண்டு ரசித்தாள் எப்படி டிரஸ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று டிப்ஸ் கொடுத்தாள்.

நான் ஆகாயத்தில் மிதந்தேன் அல்ல அல்ல பறந்தேன் .

அவள் மேல் காதல் வந்தது எப்பொழுது காதலை சொல்லலாம் என்று நாள் பார்த்தேன் . அப்பொழுது வந்த செமெஸ்டர் எக்ஸாம் நாள் கூட பார்க்கவில்லை. எக்ஸாம் சரியாகவும் எழுதவில்லை

எக்ஸாம் ரிசல்ட் வந்தது .

கீதா முதலிடம் வந்தாள். நான் இரண்டாமிடம் வந்தேன் . அதற்காக நான் கவலைப்படவில்லை காதலில் பாஸ் ஆக வேண்டும் என்பதே அப்போது என் கவலையாக இருந்தது .

ப்ரோபசர் அவளை பாராட்டினார்
என்னை " ஏன் எப்பொழுதும் முதலிடம் வரும் நீ இரண்டாமிடம் வந்தாய்" என்று திட்டினார்.

அவளை எல்லோரும் பாராட்டினார்கள் அவள் என்னை பார்த்தாள் நன்றி சொல்வது போல

வகுப்பு கலைந்ததும் அவளை தேடி காதல் வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று குஷியாக பாடலை பாடி கொண்டே சென்றேன். வாழ்த்துக்கள் சொல்வதற்கு கூடவே காதலையும் சொல்வதற்கு

கீதா தன் தோழிகளிடம் பேசி கொண்டிருந்தாள்

அவள் தோழிகள் " ஏய் நினைச்சதை சாதிச்சிட்டே பெரிய ஆள் தான் நீ உன் கிட்டே பந்தயம் போட்டு நாங்க தோத்து போயிட்டோம் "என்றனர்

"ஏய் நான் தான் சொன்னேனே இந்த செமஸ்டர் லே நான் தான் முதல் ஆளாக வருவேன்னு, சொன்னது போல் முதல் ரேன்க் வாங்கிட்டேன் , "ஆனா ராஜா எனக்கு பாடத்திலே டவுட் எல்லாம் கிளியர் பண்ணியிருக்கார் அதுக்காக நான் அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் . என்று கீதா சொன்னாள்.

மேலும், "ஆனாலும் ராஜா இப்படி மயங்குவார் னு நினைச்சு கூட பார்க்கலை" என்று அவள் சொல்ல "நாங்களும் தான்" என்றனர் தோழிகள் கோரசாக.


நான் சிலையானேன் அவள் காட்டும் நன்றிக்கு சந்தோசப்படுவதா எனை பற்றிய அவளது நினைப்புக்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை

என் மீது பொறாமைப்பட்ட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டலாய் சிரிப்பது போலவே எனக்கு தோன்றியது

வெறுத்து போயிற்று எனக்கு

வேறென்ன செய்வது

அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காதே பொண்ணு மேலே ஆசை என்று நொந்து போய் பாடிகிட்டே போனேன்


ஆர்.வி. சரவணன்


வெள்ளி, மே 14, 2010

நீ கண்டும் காணாது சென்றாலும் ......


கமல் பட பெயர்களை கொண்டு காதல் கவிதை ஒன்று முயற்சித்திருக்கிறேன் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்கள்


நீ கண்டும் காணாது சென்றாலும் ......





அன்பே



மகளிர் மட்டும் பேருந்தில் தினம் வந்து இறங்குகிறாய் நீ




பேருந்து நிறுத்தத்தில் ஒரு புன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்



நீ கண்டும் காணாது சென்றாலும்


என் வாழ்வே மாயம் ஆகி விடும் என்றாலும்



உனை வைத்து என் இளமை ஊஞ்சலாடி கொண்டு தானிருக்கிறது



உனை பற்றி நினைத்தாலே இனிக்கும் எப்போதும்



என் கையில் சிகப்பு ரோஜாக்கள் இதோ இப்போதும்



என் காதலை சொல்ல தான் நினைக்கிறன்



மூன்று முடிச்சிட்டு உன் நாயகன் நானே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன்



சொன்னால் மறுப்பாயா



இல்லை காதலா காதலா என்று ஏற்பாயா



மனது ஆடுகிறது ஆடு புலி ஆட்டம்



இப்படியே தொடர்கையில்



இன்றும் வந்து இறங்குகிறாய் நீ



என் ராஜ பார்வை உன் மீது



எனை நோக்கி வருகிறாய்



மனதுக்குள் டிக் டிக் டிக்



எனை நெருங்குகிறாய்



எல்லாம் இன்ப மயம் ஆனது எனக்கு



உன் கரங்களால் நீட்டுகிறாய் திருமண அழைப்பிதழ்



பெற்றோர் நிச்சயித்த பையனோடு திருமணம்



வர வேண்டும் என்று வார்த்தைகளில் வைத்தாய் கண்டிப்பை



என் காதல் அலை வரிசைக்கு கொடுத்தாய் துண்டிப்பை



அந்த ஒரு நிமிடம் என் இதயம் எரிமலையாய் வெடித்தது



அதற்கு துணை நின்று என் கண்கள் கண்ணீரை வடித்தது



நான் உயர்ந்த உள்ளத்தோடு



என் சந்தோசங்கள் அனைத்தும் உனக்கே வாய்க்கட்டும்



என்று உளமார வாழ்த்திட்டேன்



இதையே என் காதல் பரிசாக அளித்திட்டேன்



ஆர். வி .சரவணன்

செவ்வாய், மே 11, 2010

நிலவு ஒரு அட்சய பாத்திரம்


நிலவு ஒரு அட்சய பாத்திரம்

அம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு

அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
நிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்

என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
என் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா

அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை
நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ

நிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே
நம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்

நிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்
அன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்



ஆர்.வி .சரவணன்











திங்கள், மே 10, 2010

என் சமையலறையில்..........

என் சமையலறையில்..........
சம்மர் ஹாலிடே என்பதால் வீட்டில் என் மனைவி பசங்க எல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு ஊருக்கு சென்றிருக்கிறார்கள். என் அம்மா என் தங்கை வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்

சோ நான் மட்டும் தனியே

ஹோட்டல் லே சாப்பிடலாம் னா அது பாக்கெட் ஐ பதம் பார்க்கும் என்பதால் வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம் (ஏற்கெனவே சமைத்த அனுபவம் உள்ளதால்) என்று முடிவு செய்தேன்.

சண்டே வீட்டில் இருந்ததால் டீ போட்டு விட்டு உப்புமா செய்யலாம் என்று அடுப்பை பற்ற வைத்தேன் பால் கவர் கட் செய்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு சமையலறையை கிளீன் செய்து முடிப்பதற்குள் பால் பொங்கி ஊற்றி விட்டது.

அதை இறக்கி வைத்து விட்டு பாத்திரம் வைத்து ரவாவை போட்டு வறுத்த போது அது தீய ஆரம்பிக்க அடடா என்று இறக்கி தட்டில் கொட்டிவிட்டு மீண்டும் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடலை பருப்பு தேடுகிறேன் தேடுகிறேன் கிடைக்கவில்லை சரி என்று பச்சை மிளகாய் தேட அதுவுமில்லை.

சே என்று வெறுப்பான போது , அப்பொழுது தான் ஆகா வெங்காயம் நறுக்க மறந்து விட்டோமே என்று நினைப்பு வர, உடனே அடுப்பை நிறுத்தி விட்டு வெங்காயம் நறுக்கி சிகப்பு மிளகாய் கிள்ளி போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பு பயந்து கொண்டே போட்டு கொதிக்க வைத்து விட்டு நிமிர நான் போட்டு வைத்த டீ ஆறி போய் ஆடை விழுந்து இருந்தது .

சரி என்று குடித்து விட்டு திரும்பினால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது . ரவாவை எடுத்து கொட்டி கிண்ட ஆரம்பித்தேன் பாருங்கள் கிண்ட கிண்ட உப்புமா இறுகவேயில்லை.

என் மனைவிக்கு போன் செய்து "என்ன செய்வது" என்று கேட்டேன் " நீங்கள் தண்ணீர் நிறைய சேர்த்து விட்டீர்கள் . இனி ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னார்கள்.

சரி என்று முடிந்த வரை கிளறிய போது பாத்திரமே என் கையோடு வந்தது . பாத்திரத்தை இறக்கி அடுப்பை நிறுத்தி விட்டு சாப்பிட அமர்ந்தேன்.

உப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்று தான் இருந்தது.
( ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு உப்புமா கூட உனக்கு சரியாய் சமைக்க தெரியலை என்று கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)

சரி என்று நான் உப்புமா சாப்பிட ஆரம்பிக்க உப்பு ரொம்பவும் கம்மியா இருப்பது தெரிய வர என்ன பண்றது என்று சர்க்கரையை வைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்
இவ்வளவு நேரம் இதை கேட்ட உங்களை விட்டுட்டு நான் பாட்டுக்கு சாப்பிடறேன் பாருங்க.

சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .
என்னங்க நழுவறீங்க.

ஆர்.வி .சரவணன்


வியாழன், மே 06, 2010

கடவுளின் குழந்தை?



கடவுளின் குழந்தை ?

எங்கள் குடும்ப நண்பர் தஞ்சாவூரில் இருக்கிறார். அவர் முஸ்லீம் அவருக்கு பேத்தி பிறந்தது . (மகளின் மகள்) பெயர் நபீலா நிஹார்.


இந்த பெயருக்கு அர்த்தம் என்னவென்று அந்த குழந்தையின் தாயிடம் கேட்டேன்


நபீலா நிஹார் என்றால் பனித்துளி என்று பொருள் என்று கூறினார்கள்.


பெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் குழந்தையிடமும் ஒரு வித்தியாசம் இருந்தது


அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் அதற்காக அவர்கள் சென்னை வந்து பிரபல மருத்துவமனை யில் குழந்தைக்கு சிகிச்சை மேற் கொண்டார்கள்


மருத்துவமனையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கிராம் கணக்கில் மாத்திரை பொடி செய்து ஒரு வேளைக்கு இவ்வளவு என்று தருவார்கள் அதை நான் வாங்கி வந்து கொரியர் செய்வேன்ddd ஊருக்கு .


குழந்தைக்கு ஆபரேசன் செய்ய முடிவெடுத்தார்கள்.
எனது நண்பர்கள் மூன்று பேர் ரத்த தானம் அளித்தார்கள்.
முதல் நாள் மருத்துவமனை சென்றேன் ஒன்றும் வாங்கி கொண்டு வரவில்லைஎன்றேன். குழந்தையின் தாய் நீங்க வந்திருக்கிறதே போதும் எங்களுக்கு என்றார்கள். சந்தோசமாக . குழந்தை மெத்தையில் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தது .

நான் இறைவனை வேண்டினேன் அந்த குழந்தை குணமாகவேண்டும் பூரண நலம் பெற வேண்டும் என்று

வெற்றிகரமாய் முடிந்தது ஆபரேசன் . குழந்தையின் தாய்க்கும் அவரது அம்மாவுக்கும் குடும்பத்திற்கும் மிக்க சந்தோசம்.
சில மாதங்கள் கழித்து ஒரு மழை காலத்தில் எனக்கு போன் வந்தது அவர்களிடமிருந்து

குழந்தை இறந்து விட்டது என்று
என் மனது பதை பதைத்தது

எப்படி என்றேன்

மாமியார் வீட்டுக்கு சென்றிருந்த போது மழையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த குழந்தை இறந்து விட்டது என்றும் தாய் காயங்களுடன் தப்பித்தார் என்றும் சொன்னார்கள் . கடவுள் மேல் கோபம் வந்தது. மிகுந்த வருத்தப்பட்டேன்

அப்பொழுது என் மனம் எனக்கு சொன்ன சமாதானம் என்ன தெரியுமா .
அந்த குழந்தை கடவுளின் செல்ல குழந்தை என்பதால் தான் வளர்ப்பதற்கு தன்னோடு அழைத்து கொண்டார்.
ஆம் அது கடவுளின் குழந்தை என்று எனக்கு சமாதானம் சொன்னது.
இருந்தும், நான் சமாதானமாகவில்லை

என் மனசு சொன்னது சரிதானா என்று

நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆர்.வி .சரவணன்

புதன், மே 05, 2010

நடு இரவில்.........





நடு இரவில் ................



நடு இரவு திறந்திருந்த ஜன்னல் வழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தன அந்த உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்.



இரவின் நிசப்தத்தில் அவர்களால் எந்த சப்தமும் எழவில்லை. எழுந்தது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் எழுந்தவர் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் குடித்து விட்டு இவர்களை கவனிக்காமல் திரும்பி வந்து படுத்து கொண்டார்.



இதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தாங்கள் வந்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தன அந்த உருவங்கள் ஓசை எழுப்பாமல் மேசை மேலிருந்த அந்த பொருளை நெருங்கின.



பொருளை பார்த்தவுடன் குதூகலமாய் வந்த காரியம் வெற்றி என்று ஆசையில் சுறுசுறுப்பாக அதை சிரமப்பட்டு எடுத்து கொண்டு வந்த வழியே சென்றன.



அந்த வீட்டிலிருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள் இது தெரியாமல்



ஆனால் படிக்கிற நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.



அந்த பொருள் சர்க்கரை.


எடுத்து சென்ற அந்த உருவங்கள் எறும்புகள் .


எறும்புகள்



ஆர்.வி .சரவணன்