புதன், ஜூலை 11, 2018

பாண்டியன்





பாண்டியன் 

தஞ்சாவூர் டு திருச்சிசெல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு 
கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவராகவே தோன்றினார் அந்த பெரியவர். அவரிடமிருந்து வெளிப்பட்ட புகையிலை மணம், பாண்டியனை முகம் சுளிக்க வைத்தது. பேருந்து கிளம்பிய  சில நிமிடங்களில்  

"தம்பிஜன்னல் பக்கம் நான் உட்கார்ந்துக்கவா"
என்று கேட்டார்.

"எனக்கு முன்னாடி வந்திருந்தா நீங்களே உட்கார்ந்திருக்கலாமே" என்றான்.

ஏதோ ஜோக்கை கேட்டவர் போல் சிரித்து

"நான் புகையிலை போடுவேன். அப்பப்ப எச்சில் துப்ப வேண்டி இருக்கும்" என்று, அவனை தாண்டி எச்சில் துப்பி விட்டு, "உங்களை நகர்த்திட்டு துப்பினா நீங்க சங்கோஜப்படுவீங்க இல்லியா. அதனாலே கேட்டேன்" என்றார்.
அவரது பேச்சில் எரிச்சலாகி,
"இல்லீங்க. எனக்கு ஜன்னல் சீட் தான் வேணும்"  திரும்பி கொண்டவனை அவரது அடுத்த வார்த்தை அவரை நோக்கி திரும்ப வைத்தது.

"ஜன்னலோர சீட்டை விட  மாட்டேன்னு அடம்  பிடிக்கிறீங்களே. வாமிட் எதுனா எடுப்பீங்களோகாவி பற்களால் மீண்டும் சிரிப்பை கொட்டினார்.

அவன் அமைதியாக சொன்னான்.

"இல்லீங்க.  இயற்கையை அசுத்தப்படுத்தாமல் ரசிச்சிட்டு வருவேன்."


ஆர்.வி.சரவணன்

 (ஆகஸ்ட் 2017 குமுதம் வார  இதழில் வெளி வந்த சிறுகதை.)

2 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்