வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பாரு பாரு பட்டணம் பாரு





பாரு பாரு பட்டணம் பாரு 

இணையத்தில் பழைய தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் பார்த்து கொண்டிருக்கையில் மோகனின் திரைப்படம் ஒன்று கண்ணில் தென்பட, இது ரிலீஸ் ஆனப்பவே பார்த்திருக்கோமேனு ஞாபகம் வந்தது. மேலும் இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் கலைமணி. ஆகவே ஆர்வமாய் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.
முதல் காட்சி. ஒரு பார்க்கில் சிறுவர்கள் இருவர் நான் எம்ஜியார் நீ நம்பியார் என்று சொல்லி சண்டையிட்டு கொள்கிறார்கள். அவர்களை விலக்கி விடும் ரிக்‌ஷாக்காரர், எதிரே அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருக்கும் மோகனை கவனிக்கிறார். (நமக்கும் அப்போது தான் நாயகனை அறிமுகம் செய்கிறார்கள்.) அவரிடம் சென்று கேட்கிறார். "ஏன்பா பசங்க அடிச்சுகிட்டிருக்காங்க. தடுக்கிறத விட்டுட்டு புஸ்தகம் படிச்சிட்டிருக்கே" அதற்கு மோகன் சொல்லும் பதிலிலேயே, இந்த கதை எந்த ஜானர் என்பதையும் மோகனின் கேரக்டரையும் சொல்லி விடுகிறார்கள்.
" என்னோட ராசிக்கு இன்னிக்கு யாரோட பிரச்னையிலும் நுழைய கூடாதாம். நுழைஞ்சா ஆபத்தாம். அதனால் தான் தடுக்கல" எஸ். எதுவாக இருந்தாலும் ஜோசியரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்து வரும் கேரக்டர் அவர். வீட்டில் வறுமை இருக்கும் நிலையிலும் கூட, இண்டர்வியூவிற்கு சென்று முதலாளி ராசிக்கும் என் ராசிக்கும் ஒத்து வராது அதனால் வேலையில் சேர முடியாது என்று சொல்பவர்.
இப்படிப்பட்டவரை தான் ஜோசியத்தின் மேல் நம்பிக்கை கிடையாது என்றிருக்கும் பணக்கார வினுசக்ரவர்த்தியின் மகள் ரஞ்சனி காதலிக்கிறார். ஆனால் மோகன் "இன்னும் ரெண்டு வருஷத்துல நான் பணக்காரன் ஆகிடுவேன். நான் ராஜா ஆகிறப்ப எனக்கு ஒரு ராணி தான் வேண்டும். நீ எதற்கு " என்ற படி தட்டி கழிக்கிறார். அப்படி தட்டி கழிப்பவர் எப்படி ஆர்வமாகி ரஞ்சனியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்?. எப்படி திருந்தினார் ? திருத்தியது யார் என்பதை ஜாலியாகவும் கொஞ்சமே கொஞ்சம் எமோசனலாகவும் ரசிக்கும் படி சொல்லியிக்கிறார்கள்.
படத்தில் வினு சக்ரவர்த்தி உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு "எங்கப்பன் முருகன் கொடுத்த 18 ரூபாய் 10 பைசாவோட சென்னைக்கு வந்தேன" என்றபடி படம் முழுக்க அதகளம் செய்ய, ஜோசியக்காரராக வெண்ணிற ஆடை மூர்த்தி கலகலப்பு சேர்க்க, தங்கையாக குயிலி கலங்க வைக்கிறார்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையில் மோகன் திருந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் மட்டும் இடைச்செருகல் போல் இருந்து கொண்டு கதையோடு பொருந்த மறுக்கிறது. இளையராஜா இசையில் நேரந்தான் ஆகுது, யார் தூரிகை தந்த ஓவியம், தென்றல் வரும் பாடல்கள் உற்சாக ராகங்கள். இயக்கம் மனோபாலா. படம் வெளியான ஆண்டு 1986.
இந்தப் படத்துக்கு பாரு பாரு பட்டணம் பாருனு பேர் வச்சிருக்காங்க. பாரு பாரு ஜோசியம் பாருனு வச்சுருக்கலாமே.

ஆர்.வி.சரவணன் 

6 கருத்துகள்:

  1. இந்தப்படம் நானும் பார்த்திருக்கிறேன் நீங்கள் குறிப்பிட்டபடித்தான் நானும் அப்போது நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் இந்தப் படம் பார்த்ததில்லை. பார்க்கும் யோசனையும் இல்லை. உங்கள் மூலம் படம் பற்றி படித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. பழைய படங்களின் விமர்சனம் புதிய அணுகுமுறை!

    நான் இந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் எனக்கு தென்றல் வரும் பாடல் ரொம்பவே பிடிக்கும். யார் தூரிகை தந்த ஓவியம் சுமாராகப் பிடிக்கும். ரஞ்சனியைப் பிடிக்கவே பிடிக்காது!

    சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்