ஞாயிறு, அக்டோபர் 05, 2014

மெட்ராஸ்



என்ன நீ அதிகமா லீவ் போடறே என்று முதலாளி கேள்வி கேட்பார் ஆசிரியர் கேள்வி கேட்பார். அதை போன்றதொரு ஸ்டைலில் ப்ளாக் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு என்று நண்பர்கள்  கரந்தை ஜெயக்குமார், மனசு குமார், நிஜாம் பக்கம் நிஜாமுதீன் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கே காபி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அலுவலக வேலை ஒரு பக்கம் நெருக்கியடிக்க கூடவே எனது ஆசையான குறும்படம் எடுக்கும் ஆர்வமும் என்னை நெருக்க, வேலைகள் தொடர்ந்ததால் என்னால் வலை பக்கம் வர முடியவில்லை. அதற்காக பெஞ்ச் மேல ஏற்றி நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்துடாதீங்க இதோ வந்துட்டேன். 





மெட்ராஸ் 

சுவரை வைத்து கொண்டு சித்திரம் வரைவாங்க. இங்கே வட சென்னையின் வாழ்க்கையை மனிதர்களை ஒரு சுவற்றில் பதிவு செய்திருக்கிறார் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். அந்த சுவர் அதிகார அரிதாரம் பூசி கொண்டு வஞ்சகத்தை தன்னுள் மறைத்து கொண்டு அச்சத்தை பார்ப்பவர்களிடம் விதைத்து கொண்டிருப்பதை ஒரு கேரக்டராகவே உருவாக்கி இருக்கிறார்.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் சுவர் தான் கதைக்கு மூலமே. இந்த சுவரை யார் பற்றுவது என்ற போட்டியில் சுவரை ஆக்கிரமித்த ஒரு கட்சியின் லோக்கல் அரசியல்வாதி  அதை விட மறுப்பதும் அவரிடமிருந்து சுவரை பறிக்க அல்லது பிடுங்க மற்றொரு கட்சி ஆட்கள் நினைப்பதும் இரு கட்சி ஆட்களும் அதையே தன் வேத வாக்காய் கௌரவ பிரச்சனையாய் எடுத்து அடித்து கொள்வதன் மூலம் சில உயிர்களை பலி கொடுக்கிறார்கள். இரு கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது தான் அவர்கள் சாயம் பொது மக்களிடம் வெளிபட்டு அவர்களால் வெளுக்கபடுகிறது. சுவரை பொது மக்களே எடுத்து கொண்டு அரசியல் சாயத்தை துடைத்து  கல்வி  பூசுகிறார்கள். (புகட்டுகிறார்கள்) 

இந்த படத்தின் திரைக்கதை சில பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து கொண்டுள்ளது. உதாரனமாக ஒரு காட்சியை எடுத்து கொள்வோம். ஹீரோ கார்த்தி தன் காதலியுடன் ரொமாண்டிக் மூடுடன் ஹோட்டலுக்கு வருகிறார். அதே ஹோட்டலில் இரண்டாக பிரிந்து நின்றிருந்த கொண்டிருந்த அதிகார மையங்களான வில்லன் குரூப் ஒன்று சேர்ந்து அறைக்குள் பேசி கொண்டிருகிறது. அங்கே பேச்சு வார்த்தையும் இங்கே ததும்பி வழியும் காதலும்  நடந்து கொண்டிருக்க இரண்டையும் மாறி மாறி இயக்குனர் காட்டும் போது, வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ் படங்களின் காட்சிகள் போல் கார்த்தியும் வில்லனும் சந்திக்க போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், வேறொரு வகையில் அந்த காட்சியை புத்திசாலிதனமாக அமைத்திருப்பார் இயக்குனர். இது போல் பல காட்சிகளில் தன் திரைக்கதையால் நம்மை படத்தில் ஒன்ற வைத்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கூட இப்படி தான் நாம் எதிர்பாராத வண்ணம் அதிரடி காண்பித்திருப்பார்.

கார்த்தியிடம்  மெட்ராஸ் மொழி அவரிடம் கஷ்டப்பட்டு
வெளிபட்டாலும் ஹீரோயிசம் இல்லாத நடிகராக இதில் தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கோபத்தில் அடித்து விட்டு பின் பயப்படுவதும் காதலுக்காக உருகுவதும் பெற்றோரிடம் எகிறுவதும்  
ரசிக்க முடிகிறது. அவ என்னை வேணாம் னுட்டாடா என்று 
சரக்கடித்து விட்டு அவர் புலம்பி அழும் இடம் செம. 

ஹீரோயின் கேத்தரின் வரும் முதல் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தம் சொல்லி விடுகிறது. அவர் தந்திருக்கும் ஈர்ப்பை. (படம் வந்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் சென்று பார்த்தேன்) தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க அவர் வந்து நிற்கும் காட்சியிலும் என்னை கல்யாணம் பண்ணிகரியா என்று கேட்பதிலும், கைகளை மறைத்து கொண்டு கிஸ் கொடுப்பதும் என்று கார்த்தியுடனான காட்சிகள் கலகலப்பு.



அடுத்து அன்பு கதாபாத்திரத்தில் கலையரசனும்  மேரி கேரக்டரில் வரும் ரித்விகாவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் அந்த அன்னியோன்யம் கோபம் ஆகா. அன்பு புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று எகிறுவதும் மேரியின் பார்வையில் கிறங்கி போய் பேசுவதும் என்று அதகளபடுத்த, அன்பு இறந்த பின் மேரி அழும் அழுகையும் சாக்கடை தண்ணீரை எடுத்து கொண்டு வந்து உக்ரத்துடன் வில்லன் முகத்தில் வீசும் போது காட்டும் முக பாவம் வாரே வா என்று சொல்ல வைத்து விடுகிறது.

பாடல்களில் ஆகாயத்தில் தீப்பிடிக்க பாடல் காட்சியின் விசுவல் ரசனை ரகம். பின்னணி இசையில் நம்மை சுண்டி இழுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவு முரளி. அடுக்கு மாடி குடியிருப்பின் இண்டு இடுக்கு விடாமல் அனைத்து பகுதிகளிலும் படம் பார்க்கும் நம்மை விட்டு விடாமல் இழுத்த சென்ற படி சுற்றி வந்திருக்கிறது. அதிலும் அந்த சுவர் நிறைய முறை பல ஆங்கிள்களில் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தத்தை தருகிறது என்று சொல்லலாம் 

கார்த்தியின் அம்மா அப்பா வெத்தலைக்கு காசு கேட்கும் பாட்டி, ஜானி மற்ற நடிகர்கள் என்று ஒவ்வொரு கேரக்டரும் நம்மை ஈர்க்க வைப்பதில் போட்டி போட்டு கொண்டு ஸ்கோர் செய்கிறார்கள். 







கிளைமாக்ஸ் சண்டையில் வட சென்னையின் இருட்டில் நடப்பதை ரசித்தாலும் வில்லனை பழிவாங்குவதை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டாம் அதையும் அங்கேயே செய்திருக்கலாம்.மாரி கேரக்டரின் போக்கு ஆரம்பத்திலேயே புரிபட்டு விடுவது, அன்பு கேரக்டரின் உயரம் குறைவு, இடைவேளை வரை உள்ள யதார்த்தம் இடைவேளைக்கு பின் இல்லாதது கார்த்தி அன்பின் நட்பு நெருக்கதை இன்னும் காட்சிபடுத்தி இருந்திருக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் அதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல என்று அவற்றை பின்னுக்கு தள்ளி இயக்குனரின் திரைக்கதையும் விசுவல் நேர்த்தியும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறது.

FINAL TOUCH 


கிளைமாக்ஸ் க்கு முன் கார்த்தி சுவரின் முன்னே நிற்கும் போது 
அந்த சுவற்றில் அவரது நிழல் படிந்து சுவர் அளவுக்கு உயர்வது போல் அமைத்திருப்பார்கள். இதில் நடித்திருப்பவர்களுடன் இயக்குனரும் உயர பெருமளவில் உதவியிருக்கிறது இந்த மெட்ராஸ் 



ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

  1. விமர்சனம் நன்று...
    நானும் பார்த்தேன்... நல்ல படம்... கார்த்திக்கு மெட்ராஸ் பாஷைதான் வரவில்லை,... மற்றபடி ஓவர் பில்டப் கொடுக்காமல் நடித்திருக்கும் படம்....

    பதிலளிநீக்கு
  2. அடிக்கடி எழுதுங்கண்ணா....
    தொடர்கதை ஆரம்பம் எப்போது?

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் நல்லாருக்கு சார்! கார்த்தி கொஞ்சம் நிறையவே தடுமாறுராரு மெட்ராஸ் வழக்கு மொழி பேச...மற்ற படி படம் நல்லாருக்குனு சொல்லலாம்....ஹீரோயிசம் ரொம்ப இல்லாம

    பதிலளிநீக்கு
  4. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி...
    மீண்டும் பதிவு கொண்டு வந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்