செவ்வாய், மே 28, 2013

உனக்கும் எனக்குமான....





உனக்கும் எனக்குமான....


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  


நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 


நான் ஆசை எனும் பேரலைகளால் சூழ்ந்திருக்க
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில்


விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 


நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
பேசி  கொண்டிருக்கிறேன் 


நீ உனக்குள் பதுக்கிய என் காதலை எப்போது வெளி கொணர்வாய்
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம்
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ



என்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ
உன் இதழ்களின் ஒத்தடம் 


உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


எனது இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதையின் அத்தியாயங்களில் 
நான் குறிப்பிட்டிருந்த கவிதை வரிகள் 


ஆர்.வி.சரவணன் 


படம் :கூகுள் 

3 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்