வியாழன், நவம்பர் 10, 2011

இளமை எழுதும் கவிதை நீ-4



இளமை எழுதும் கவிதை நீ -4








அத்தியாயம் 4



அன்பே உன் கோபம் புறப்படுவது புயலாய்
இருந்தும் அது என்னிடம் வரும் போது மட்டும் தென்றலாய்


சிவா கார்த்திக் வருகைக்காக காத்திருந்த அந்த அடியாள் கும்பல் தனியார் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு டாக்டர் வருகைக்காக காத்திருந்தார்கள் கூடவே அவர்களை ஏவிய மாணவன் சுரேஷும் அங்கே காயங்களுடன் அனுமதிக்கபட்டிருந்தான்

மறுநாள் எதுவும் நடக்காதது போல், சிவா கார்த்திக் இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பைக்கை தங்கள் நண்பர்கள் நிற்கும் வழக்கமான இடத்தில நிறுத்திய போது சூழ்ந்து கொண்ட மாணவர்களிடம்,

"டேய் நம்ம தல அஜித் படத்திலே சொல்ற மாதிரி இனிமே ஜென்மத்திற்கும் தண்ணியே அடிக்க கூடாது னு தோணுதுடா" என்றான் கார்த்திக்

"ஆனா சாயந்தரம் பாரேன் அடிச்சா என்ன னு தோணும்"
இது சிவா

ஜோக் கேட்டது போல் சிரித்த நண்பர்கள்

"டேய் மச்சான் நேத்தி நைட் போட்டிங்களே ஒரு சண்டை, யப்பா இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது எங்களுக்கு. கொஞ்சம் தவறுச்சு நாம இருந்திருப்போம் ஹாஸ்பிடல் லே"

"டேய் இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்டா"

"அது சரி வீட்டுக்கு தெரிஞ்சுதுன்னா டின் கட்டிடுவாங்க அதான் பயமா இருக்கு"

டேக் இட் ஈஸி இப்ப வருது பார் நியூஸ்

என்று சிவா சொன்னவுடன் மின்னலென வந்து நின்றான் பயோடேட்டா பாலு


தொடரும்

ஆர்.வி.சரவணன்


கருத்துரையிடுங்கள் நண்பர்களே
அது தான் என் படைப்புக்கான ஊக்கம்

16 கருத்துகள்:

  1. கலக்குங்க... படிக்க படிக்க சுவராஸ்யம் கூடிக்கிட்டே போகுது...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தெளிவான நடை ,..
    சிறப்பான படைப்பாக்கம் ...
    கதையின் சுவை கூடிக்கொண்டே போகின்றது ...
    கல்லூரி நாட்களை நினைவுகளில் நிறுத்துகின்றது ...
    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  3. படிக்கிற நாட்களை நினைவுபடுத்துகிறது..

    பதிலளிநீக்கு
  4. அருமையாக செல்கிறது...

    //"ஆமா கேட்கனும்னு நினைச்சேன் காலேஜ் சேர்மன் உங்க மாமா எங்கே காணும்"

    "காணோம்" என்றுதானே இருக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமாகப் போகிறது தொடர்
    நான் கூட சிவா எழுந்து போகாவிட்டால்
    ஆசிரியர் மாணவர்களை அழைத்துக் கொண்டு போய்
    மரத்தடியில் பாடம் நடத்துவார் என நினைத்தேன்
    அருமையான தொடர் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை.
    தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

    நீங்கள் சொல்வது சரி தான் இந்த பதிவில் சில இடங்களில் இலக்கண பிழை ஏற்பட்டிருக்கிறது வெள்ளிகிழமை கண்டிப்பாக பதிவு வெளியிட்டாக வேண்டும் என்பதால் சரி செய்யாமல் விட்டு விட்டேன் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கு நன்றி நிசாமுதீன்

    கண்டிப்பாக வருகிறார் உமாவின் அப்பா

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  14. அவளோட அப்பாதான் ஏற்கனவே இவர்கள் யார் என்று தெரிந்து பம்மினாரே ,ம்ம்ம்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ,சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
  15. முதல்வரிக் கவிதை
    அருமை.
    புயலாய் புறப்பட்ட கோபம் தென்றலாய் மாறும் வித்தை
    காதலில் மட்டும் சாத்தியம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்