செவ்வாய், செப்டம்பர் 13, 2011

நிலவு ஒரு அட்சய பாத்திரம்




நிலவு ஒரு அட்சய பாத்திரம்


அம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு
அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு



அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
நிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்



என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
என் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா


அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை
நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ



நிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே
நம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்


நிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்
அன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்



ஆர்.வி.சரவணன்


இந்த கவிதையும் தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்டது தான்

7 கருத்துகள்:

  1. சரவணன்,

    மீள்பதிவா? என்றாலும் அட்சயா அருமை!

    பதிலளிநீக்கு
  2. என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
    என் காத்திருப்பை சொல்வாயா
    எனக்காக தூது செல்வாயா //

    தூது சொல்லிச்சுங்களா சார் ..
    மிகவும் இளமை ததும்பிய காதல் நிரம்பிய வரிகள் ..
    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  3. கவிதை ரொம்ப அழகாயிருக்கு!உங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க!!!!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி

    ஆம் சத்ரியன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. தூது சொல்லிச்சுங்களா சார் ..

    நிலவை கேட்டு சொல்றேன் அரசன் ஹா ஹா
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  6. கவிதை ரொம்ப அழகாயிருக்கு!உங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க!!!!

    அவருக்கு நான் கவிதைகள் உடனே எழுதியவுடன் சொல்லி விடுவேன் தென்றல்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்