சனி, ஆகஸ்ட் 07, 2010

இருமன அழைப்பிதழ்

கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு சிறு(தொடர்)கதை . கதையில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தும் ஒரு சிறு முயற்சி (ஏற்கனவே எல்லோரும் செய்தது தான் ) மூன்று பதிவுகளாக தொடர்ந்து தர இருக்கிறேன் படித்து விட்டு சொல்லுங்கள்



இரு மன அழைப்பிதழ்

முதலில் ஹீரோயின் உமா

மாப்பிள்ளை வந்தாச்சு என்று கல்யாண பெண் உமாவிடம் வந்து சொன்னாள் அவள் தோழி. சொன்னவுடன் அங்கிருந்த அனைவரையும் ஆவல் பற்றிக் கொள்ள சிலர்ஜன்னலுக்கும் சிலர் வாசலுக்கும் சென்றனர். அவர்களிடம் இருந்த உற்சாகம் உமாவிடம் இல்லை மாறாக சோகத்தில் இருந்தாள் அவள்.மனதின் வேதனையை முகத்திற்கு கொண்டு வராமல் இருக்க கஷ்டப்பட்டாள். வெற்றுச் சிரிப்புடன் "அப்படியா "என்றாள். வீட்டில் கல்யாணம் பேச ஆரம்பித்த நாள் முதல் மனதுக்குள் புயலடித்து கொண்டிருந்தது.

காரணம் கார்த்திக் அண்ணனின் நண்பனாக வீட்டுக்குள் நுழைந்து அவள் மனத்திலும் நுழைந்தவன். ஒரு நாள் அண்ணனுடன் வெளியில் சென்ற போது அவனை சந்தித்தாள். அவள் அண்ணன் ஒரு கடைக்குள் செல்ல அவர்கள் மட்டும் தனியாக. ஏதாவது பேசியாக வேண்டும் என்பதால் பேசினாள். படிப்பு, வீடு, பிடித்தது, பிடிக்காதது என்று பேச்சு வளர்ந்தது. முதலில் சந்திக்கும் போதெல்லாம் பேசினார்கள். பின் பேசுவதற்காக சந்திப்பை உண்டாக்கி கொண்டார்கள்.
வேலை தேடி கொண்டிருந்த கார்த்திக்கிற்கு அவளோடு பேசுவதே வேலை என்றாகி போனது. ஒரு நாள் அவன் வரவில்லைஎன்றாலும் ஏன் வரவில்லை என்று உமாவின் அப்பா அம்மா கேட்கும் அளவுக்கு வீட்டில் சுதந்திரமாய் வளைய வந்தான். தன் விசயங்களில் அவனின் அக்கறை அவளை நெகிழ வைத்தது. அதே போல் அவனது விசயங்களிலும் தன்னை யோசனை கேட்பது அவளை மகிழ வைத்தது.
இருவரும் தங்கள் திருமண விசயத்தில் கூட எனக்கு மாப்பிள்ளை நீ தான் பார்க்க வேண்டும் உனக்கு பெண் நான் தான் பார்பேன் என்று பேசி வைத்து கொண்டார்கள் இதை பார்த்த உமாவின் தோழிகள் "நீங்கள் காதலுக்கு மாறிடுவீங்க "என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்னது தான் நடந்தது. எப்படியும் எனக்கு ஒரு மாப்பிள்ளை வருவார். அதற்க்கு கார்த்திக்கே மாப்பிள்ளையானால் என்ன என்று உமாவுக்கு தோன்றியது. கூடவே காதலும் தோன்றியது.

கார்த்திக்கிற்கு வெளியூரில் வேலை கிடைக்க திருச்சி விட்டு சென்னை சென்றான். அவனுக்கு உமா எழுதிய கடிதங்களில் காதல் இருந்தது. ஆனால் அவன் அவளுக்கு எழுதிய கடிதங்களில் காதலின் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை.

கிடைத்தது அவளுக்கு நல்ல வரன் மட்டுமே. நல்ல படிப்பு வசதியான மாப்பிள்ளை என்று உமாவின் அப்பா அம்மா பிடித்து கொள்ள என்ன சொல்லி தட்டி கழிப்பது என்று தெரியாமல் இதோ கல்யாணத்திற்கு முதல் நாளான இன்று வரை கலங்கி கொண்டிருக்கிறாள் .

" என்ன தூங்காமல் விழித்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டு கொண்டு அம்மா நுழையவும் கூடவே அண்ணன் "மாப்பிளையின் நினைப்பிலே இருப்பா "என்று சொல்லி சிரிக்க "இதற்கு நான் வெட்கபடனுமா என்று சொல்லி தலை குனிந்தவள் இன்னும் ஏண்டா கார்த்திக் வரலே என்ற அம்மாவின் கேள்விக்கு தலை நிமிர்ந்தாள்.
"காலையிலே வரான்மா"
" ஏண்டா நம்ம வீட்டு பிள்ளை மாதிரி பழகினவன் சீக்கிரம் வர வேண்டியது தானே"
" லீவ் கிடைக்கலையாம்"
நீயும் எனக்கு கிடைக்க மாட்டாய் போலிருக்கு என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள் . கல்யாணம் முடிவானவுடன் உடனே மெயில் அனுப்பினாள் .போனில் பேச முயற்சி செய்தாள் .போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது .
அலுவலகத்தில் விசாரித்தாள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் அலுவலக வேலையாய் சென்றிருப்பதாகவும் காண்டக்ட் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்கள் .
அவன் மனத்திலும் தன் மேல் காதல் இருப்பது உறுதியாக தெரிந்தால் உடனே திருமணத்தை நிறுத்த அவள் தயார் . ஆனால் அவன் மனதில் இருப்பது என்ன என்று தெரியாமலே இதோ கலயாணத்திற்கு முதல் நாள் இன்று வரை முழித்து கொண்டிருக்கிறாள் .
இனி தொடர்வது ஹீரோ கார்த்திக் ...

தொடரும்

ஆர்.வி.சரவணன்

9 கருத்துகள்:

  1. //கதையில் வரும் மூன்று கதாபாத்திரங்களே சொல்வது போல் கதையை நகர்த்தும் ஒரு சிறு முயற்சி//

    ஆனால் கதை உமா சொல்வது போல இல்லையே. நீங்கள் சொல்வதாகத்தான் தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  2. ந‌ல்ல‌ முய‌ற்ச்சி ச‌ர‌வ‌ண‌ன்.. தொட‌ருங்க‌ள்... முத‌லிலேயே அடுத்த‌ ப‌திவை எதிர்பார்க்க‌ வைத்துவிட்டீர்க‌ள்... சீக்கிர‌ம் அடுத்த‌ போஸ்ட் ரெடி ப‌ண்ணுங்க‌..

    பதிலளிநீக்கு
  3. //மூன்று பதிவுகளாக தொடர்ந்து தர இருக்கிறேன் படித்து விட்டு சொல்லுங்கள் //

    அப்படியா! அப்ப சரி,
    மூன்று பதிவுகளையும்
    படித்துவிட்டுச்
    சொல்றேனே!

    பதிலளிநீக்கு
  4. நன்றி குமார் உங்கள் ஆதரவுக்கு


    நீங்கள் சொல்வது சரி தான் கலா நேசன் நான் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதை நகர்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.மூன்றாவது கதாபாத்திரம் மட்டும் தான், தான் சொல்வது போல் வரும். உங்கள் யோசனைக்கு நன்றி உங்களின் முதல் வருகைக்கும் நன்றி

    நன்றி ஸ்டீபன் அடுத்த இரண்டு இடுகைகளும் இந்த வாரத்திலேயே வெளியிட்டு விடுவேன்

    நன்றி நிசாமுதீன் மூன்று இடுகையையும் படித்து விட்டு சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  5. எதிர்பார்ப்பை தூண்டியுள்ளீர்கள், மூன்று பதிவும் வந்தவுடன் கதைக்கு ஒரு டைட்டிலை போட்டு அதை பதிவு செய்து விடுங்கள், இல்லாவிட்டால் சுட்டு யாராவது படமாக எடுத்துவிடுவார்கள். மிகைப்படுத்தலுக்காக சொல்லவில்லை, படம் பார்ப்பது போன்ற உணர்வை கதையின் முதற்பாகம் ஏற்ப்படுத்தியது, இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ம் நல்லா இருக்கு போடுங்க...!!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.. சூப்பர் கதை...
    சீக்கிரம் தொடருங்க ...
    ஒரே டென்ஷன்-ஆ இருக்கு..

    பதிலளிநீக்கு
  8. நல்லா இருக்கு. தொடருங்கோ! படிக்க ஆவலா இருக்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்