வியாழன், அக்டோபர் 04, 2012

ஒரு ஊர்லே ஒரு தேவதை....





ஒரு ஊர்லே ஒரு தேவதை....

ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது ஒரு நல்ல தேவதை   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க வேலையாள் பெரிய மூட்டை சுமக்க முடியாம திணறி தூக்கிட்டு வந்தான் கூட வந்த அந்த செல்வந்தர் சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிட்டார்)  வேலையாள் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டனும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த செல்வந்தர் அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுத்தது.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க அதுக்கு தேவதை உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன் கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு னு சொல்லுச்சு. இவர் சரி என்று வாங்கிகிட்டவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால்  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, கஷ்டம்னு சொன்னியே அதனாலே தரேன் வச்சிக்க இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியாமே. முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன் என்று சொன்னான். முதலாளிக்கு,  பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்டோம் வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசமாகிட்டார் 

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்க்கிறப்ப அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு அவருக்கு  கோபம் வந்துடுச்சு பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே நீ கற்களை கொடுத்து ஏன் ஏமாத்தினே னு கேட்டாரு அதுக்கு தேவதை வேலையாள் அல்லவா இதை வந்து கேட்கணும் நீ எதுக்கு வந்தே னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னார் வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினலே அது கல்லா மாறிடுச்சு னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு காசா மாறிடும் னு சொல்லவே சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன் னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே வேலையாள் 
கிட்டே கொடுத்து காசா மாறினவுடன்   ரெண்டு பேரும் பாதி பாதி யா எடுத்துக்குங்க னு சொல்லுச்சு அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் மற்ற எதையும் சொல்லாமே தேவதை நமக்கு  காசு கொடுத்து எடுத்துக்க சொன்னிச்சுன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்து, " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதையும்  வாங்கறது தப்பு  தேவதை கிட்டேயே திருப்பி கொடுதுடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்க   நீயும்  ஒரு முதலாளி ஆகிடுவேன்னு சொன்னாரு அவன் நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம் இதுக்கு மேல் என்ன சந்தோசம் இருக்குது மேலும்  நீங்க இந்த காசுகளை நீங்களே வச்சிருக்கலாம் ஆனால்  எனக்கும் பாதி கொடுக்கணும்னு நினைச்ச உங்க நல்ல மனசுக்காக  இந்த காசுகள் எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க என்றான் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்தது 

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார் அவன் சொன்னதை சொன்னார்.தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு உனக்கு தெரியபடுத்த  தான் நான் இப்படி செஞ்சேன் . நீ போய் ஒரு முதலாளி எப்படி உண்மையா இருக்கணுமோ  அப்படி   நீ அவனுக்கு நடந்து காட்டு னு சொன்னது . 


பதிவுலக நண்பர் நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிசாமுதீன் என்னை தேவதை பற்றிய தொடர் பதிவு எழுதுமாறு அழைத்திருந்தார் http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html அவருக்கு என் நன்றி. நிசாமுதீன் சார் எழுத கொஞ்சம் தாமதமாகி விட்டது மன்னிக்கவும் இதோ எழுதி விட்டேன்.

ஆர்.வி.சரவணன் 

15 கருத்துகள்:

  1. பகிர்ந்து கொள்ளுங்கள் மோகன் சார் நன்றி

    பதிலளிநீக்கு
  2. 1. உழைத்து வாழ்தல்
    2. நேர்மையாய் வாழ்தல்
    3. இலவசத்திற்கு ஆசைப்படாதிருத்தல்
    போன்ற கருத்துக்கள் பொதிந்த கதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. எனது அழைப்பினை ஏற்று தொடர் பதிவில் கலந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கலக்கல் சார் .. இப்படி தான் வாழனும் என்கிற விதிமுறையை கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை சார் .. தொடர் பதிவிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. கருத்துள்ள நல்ல கதை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. பிறரை ஏமாற்றாமல் உழைத்து வாழ்ந்தால் உயர்வாய் என்பதை சொல்லும் நீதிக்கதை... அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்