
என் கேள்விக்கு எனது பதில்
அப்ப பதிவையும் நீயே படிச்சிக்க அப்படின்னு நீங்க சொல்லாம, படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
கேள்வி : இவ்வுலகில் விலை மதிப்பில்லாதது எது ?
------
பதில் : கண்டிப்பாக மனித உயிர் தாங்க ஏன்னா ஒரு மனிதன் உயிர் போய்விட்டால் அதற்கு பின் அவரை நாம் எங்குமே எப்போதுமே பார்க்க முடியாது ஆகவே ஒவ்வொரு மனிதனின் உயிரும் விலை மதிப்பில்லாதது
கூடங்குளம் அணு மின் நிலையம், மனித உயிர்களுக்கு பாதிப்பு என்று நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் உள்ள மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அணு உலை என்பது மனித உயிருக்கு உலையாகி விட கூடாது. மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
இந்த அறப்போராட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
------
கேள்வி : ஒரு பெண் உங்களை பார்த்து நீங்கள் அழகாக இருக்கீறீர்கள் என்று சொன்னால் உங்கள் ரியாக்சன் என்னவாக இருக்கும் ?
பதில் : உங்க கண் பார்வையில் ஏதோ கோளாறு இருக்கு எனவே டாக்டரை பார்க்க சொல்லி சிபாரிசு செய்வேன் ஹா....ஹா....
------
கேள்வி: எங்கள் பகுதியில் உள்ளவர் இப்போது என்னை பார்க்கும் போதெல்லாம் வணக்கம் வைக்கிறார் ஏன் என்று புரியவில்லையே ?
பதில் : தேர்தல் வருகிறதே அதனால் கூட இருக்கலாம்
------
கேள்வி : ஒரு பத்திரிகையின் சந்தாவை அதிகரிக்க என்ன ஐடியா பண்ணலாம் ?
பதில் : அதுக்கு என் கிட்டே ஐடியா இல்லே ஆனா சந்தா பற்றி சுஜாதா அவர்கள், கணையாழி ஏப்ரல் 1975 இதழில் கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில் எழுதியிருந்த ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்றை இங்கே தருகிறேன்
அமெரிக்காவில் ஒரு சிறிய பத்திரிகை ஆசிரியர் ஒரு வாசகரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார் .நீர் சந்தா கொடும். ஒரு வருஷம் படித்து பாரும் .பத்திரிகை நன்றாக இல்லை என்றால் வந்து சொல்லும். உடனே உன் பணம் வாபஸ் என்றார். ஒப்புக்கொண்டு சந்தா செலுத்திய வாசகர், ஒரு வருஷம் இதழ்களை படித்து விட்டு ஆசிரியரிடம் வந்து படித்து பார்த்தேன் நன்றாக இல்லை என்றார் . ஆசிரியர் ஒப்பந்தப்படி பர்சிலிருந்து பணம் எடுக்கும் போது, வாசகர் எனக்கு பணமாக வேண்டாம். அதற்கு பதில் இன்னொரு வருஷம்
எனக்கு பத்திரிகை அனுப்பி விடுங்கள் என்றாராம் .
கேள்வி பதில்கள் தொடரும் .... (உங்கள் விருப்பத்தை பொறுத்து)
படம் நன்றி என்வழி
ஆர்.வி.சரவணன்